Thursday, December 24, 2009

முற்பகல் செய்யின்..

டிசம்பர் 23 காலை 6 மணி :

ஒரு நாளிதழ் : ஒரு பெண், ஒரு வாலிபர் அடித்து கொலை..கள்ளகாதல் காரணமா..சென்னையை சேர்ந்த வாலிபர் கைது.

டிசம்பர் 22 மாலை 6 மணி :

கேமராக்களில் இருந்து வெளிப்பட்ட பிளாஷ்க்கள் என் முகத்தில்ப்பட்டு கண்களை கூச செய்தன..உண்மையில் கண்களை மட்டும் அல்ல..விதியின் செயல் என்று கூச்சப்படாமல் என்னால் பொய் சொல்லமுடியவில்லை..விருப்பபட்டு செய்த காரியத்தின் விளைவுகள் விபரிதமாக போகும்பொழுது விதியின் மீது பழியை போட்டு செல்ல நான் விரும்பவில்லை.. ஆம் இது நான் விருப்பபட்டே செய்த கொலைகள் தான்..அதற்க்கான தண்டனையை அனுபவிக்கவும் தயாராகி விட்டேன்.

டிசம்பர் 22 மதியம் 12:30 மணி :

எதிர்ப்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த என்னை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க வாய்ப்பில்லை..கற்பனை கூட செய்துப்பார்க்க முடியா காட்சியை அன்று நேரில் கண்டதும் என்னுள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை கொலைவெறி..கையில் அப்பொழுது கிடைத்த அந்த இரும்பு தடியால் அவனை கண்மூடிதனமாக தாக்கினேன்..அவன் ரத்தவெள்ளத்தில் மிதக்கும் வரை..அடுத்து என் கோபமும் வெறியும் என் மனைவியின் மேல் சென்றது..உறைந்துப்போனஅவளை பேசுவதற்கு கூடவிடாமல் அவளையும் தாக்கினேன்..நிமிடங்கள் கரைந்தது..அங்கேயே மணிக்கணக்காக உக்கார்ந்து இருந்தேன்..போலீஸ் வந்து என் தோள்களை உலுக்கியப்பொழுது தான் மறுபடியும் சுயநினைவு வந்தது.

டிசம்பர் 10 இரவு 11:30 மணி :

ரொம்ப நேரம் என் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்..அவளுக்கு எடுத்து விளக்கினேன்..அவள் புரிந்துகொண்டதை போல் காட்டிகொண்டாலும் அவளுடுய செய்கைகள் 'நீ மட்டும் என்ன யோக்கியமா' என்பதைப்போல் தான் அமைந்து இருந்தன. டாக்டர்க்கிட்ட போனது கூட அந்த பையன் சொல்லி தான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. இப்பொழுதுகூட அந்த பையனையும்,இவளையும் தியேட்டரில் பார்த்ததை பற்றி என் நெருங்கிய நண்பன் சொல்லாமல் போயிருந்தால் எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை..குழப்பத்துடனேயே படுக்க சென்றேன்.

நவம்பர் 15 மதியம் :

தி.நகரில் அன்று சவாரிக்காக நின்றுகொண்டு இருந்தப்பொழுது தான் ஏரியா டாக்டரை எதிர்ப்பாராமல் சந்தித்தேன். சவாரியின் பொழுதே அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது..நான் இதுவரையில் 'எதிர்ப்பாராத' நடந்த சம்பவம் என்று நினைத்தது எதிர்பாராமல் நடந்தது இல்ல..அவள் வேண்டுமென்றே செய்துக்கொண்ட கருக்கலைப்பு தானென்று.இதைப்பற்றி அவளிடம் கேக்கலாமா.
ஒருவேளை குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டாளா..எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..ஆனால்..இதைப்பற்றி அவளிடம் கேக்கவேண்டாம் என்று மட்டும் முடிவு செய்தேன்..நான் அன்று செய்ததை கண்டிப்பாக சொல்லிகாட்டுவாள் என்பதால்.

நவம்பர் 2 இரவு 8 மணி :

வீட்டுக்குள் நுழைந்தபொழுது அழுதுக்கொண்டு இருந்தாள்..என்னவென்று கேட்டபொழுது எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது அவள் 'கலைந்துவிட்டது' என்று சொன்னபொழுது..கொஞ்சம் நேரம் கழித்து அவளை சமாதானப்படுத்தினேன்..ஒருவேளை அன்று செய்த செய்கையின் வினையோ என்றுகூட யோசிக்க தோன்றியது.

செப்டம்பர் 4 :

அன்று தான் அந்த வீட்டுக்கு புதுசாக குடியேறி இருந்தேன்..வீடு என்று சொல்லமுடியாது வீட்டில் ஒரு பகுதி..நானும் அவளும் என்பதால் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிகொள்ளலாம் ஒன்றும் பிரச்னை இல்லை..மேல்வீட்டை மூன்றாக பிரித்து வாடகை விட்டு இருந்தனர். இன்னொரு குடும்பமும் இருந்தது. அப்புறம் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பையன் ஒருவனும் தங்கி இருக்கிறான். அவனே வந்து முதல்நாள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். இடம் ஒன்றும் பிரச்னை இல்லை என்று தான் தோன்றுகிறது.

ஆகஸ்ட் 29 :

சென்னைக்கு வந்ததில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் தெரிந்த நண்பன் ஒருவனின் அறையிலேயே கழித்துவிட்டோம்.அவனுக்கு எங்க கதை தெரியும் ஒன்னும் பிரச்னை இல்லை..அடுத்தமாதம் இந்த ஏரியாவிலியே வீடு கிடைத்துவிடும் என்று சொல்லி இருக்கான் பார்ப்போம்..எனக்கும் இந்த ஏரியா தான் ஆட்டோ சவாரிக்கு எல்லாம் வசதியாக இருக்கும்னுப்படுது.

ஆகஸ்ட் 3 இரவு 10:30 :

ரொம்பநேரம் நின்றுகொண்டு இருந்தேன் ஆரப்பாளையம் பஸ்-ஸ்டாப்பில்..நேரம் இப்பொழுதே பத்து ஆகிடுச்சு..ஒருவேளை எதாச்சும் பிரச்னை ஆகியிருக்குமோ..இருக்காது..ஒருவழியாக வந்து சேர்ந்தாள்..ஆனால் நான் எதிர்ப்பார்க்காமல் கையில் குழந்தையுடன் வந்து இருந்தாள்..அவக்கிட்ட 'நம்ம ஆரம்பிக்கப்போறது புது வாழ்க்கை, நீ எதுக்கு கையில் குழந்தையே வேற தூக்கிட்டு வந்த, புருஷனையே விட்டுட்டு வந்துட்ட அப்புறம் எதுக்கு குழந்தை வேற'.. என்று குழந்தையை பறித்தேன். அவளிடமும் எதிர்ப்பு இல்லை. இருக்குற நேரத்தில் இந்த குழந்தையை வேறு இவள் வீட்டில் எல்லாம் போய் வைத்துவிட்டு வர முடியாது என்று முடிவு செய்த நான் கொஞ்சம் கூட யோசிக்கமால் பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் யாரும் பார்க்காத மாதிரி வைத்துவிட்டு பஸ் ஏறினேன்.



Sunday, December 20, 2009

பாசில்-2

1991
முதல் தொடங்கி 2005 வரை தமிழில் பாசில் இயக்கிய படங்களில் வெற்றியடைந்ததுஒரே படம் தான். மலையாளத்தில் பத்து படங்களை இந்த இடைப்பட்டகாலங்களில் இயக்கி உள்ளார். தெலுங்கில் கில்லர் என்ற படத்தை நாகர்ஜுனவை வைத்தும் இயக்கினார். ஏனோ, மலையாளம் போல் அதன்ப்பிறகு தமிழில்வெற்றிப்படங்களை தரமுடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தஇரண்டு திரையுலகிற்கும் இடையில் ஏற்ப்பட்ட 'தொழில்நுட்ப' மாற்றத்தின்காரணமாக கூட அவரால் மலையாளம் அளவுக்கு தமிழில் கவனம் செலுத்தமுடியாமல் இருந்து இருக்கலாம் அல்லது நேர பற்றாக்குறை காரணமாக இருந்துஇருக்கும். அதேப்போல் பிறமொழியில் இயக்கும்பொழுது தனக்கு தமிழில்கிடைத்த சுதந்திரமும்,திருப்தியும் கிடைக்கவில்லை என்றும் கூறி உள்ளார். தமிழில் இயக்கும்பொழுது பெரும்பாலான காட்சிகளை இவர் இயக்குவதற்குமுன்பே "அந்த காட்சியை" பற்றிய ஒரு அனுமானம் இவரின் தமிழ்உதவியாளர்களுக்கு இருக்குமாம். ஏனென்றால் அந்த படத்தின் மலையாளபதிப்பை அவர்கள் முன்பே கண்டிருந்ததால். அதனால் 'தமிழில்' வேலைவாங்குவது இவருக்கு சுலபமாக இருந்தது என்று சொல்கிறார்.

ஒரு கானொளியில் குறிப்பிடும்பொழுது தமிழில் "சந்திரமுகி" படத்தை பார்த்தப்பொழுது, தான் எதிர்ப்பாராதவிதமாக "பலக்காட்சிகள்" இடைசொருகலாக இருந்தது எனவும், கதையின் அமைப்பையே சிதைத்துவிட்டது என்றும் வருத்தப்பட்டு உள்ளார். ஒருவேளை அதேபடத்தை பாசிலே 2005ல் இயக்கி இருந்தால் கூட வெற்றிப்பெற்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் "ரஜினிக்கு" ஏற்றமாதிரி படம் பண்ண கொஞ்சம் திணறி இருப்பார்.காலத்திற்கு ஏற்ற படங்களை தமிழில் இப்பொழுது தராவிட்டாலும் முன்பு தந்த படங்களின் மூலம் என்றென்றும் நம் மனதில் நிலைத்து நிற்பதே இவரின் சிறப்பு.


வருஷம் 16 ( 1989 ) :
தனது சொந்த ஊரில் ஒரு கோவில் விசேஷத்திற்காக கூடும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பையனுக்கும், முறைபெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் அதன் காரணமாக வரும் மோதல் தான் கதை என்றாலும் அதை சொன்ன விதத்தில் பாசில்க்கு மேலும் தமிழில் ஒரு மிகப்பெரிய ஹிட். சுவாரஸ்யமாக ஒரு குடும்பம் சார்ந்த படத்தை தந்து இருப்பார். கார்த்திக் மற்றும் குஷ்பு இருவருக்கும் அவர்களின் "எதிர்ப்பால் விசிறிகள்" அதிகரிக்க காரணமாக இருந்த இன்னொரு படம். இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை அங்கு வரும் "ஊர் சுற்றிகளுக்கு" வருஷம்16 வீடாகவே அடையாளம் காட்டபடுகின்றது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.


அரங்கேற்ற வேளை ( 1990 ) :
வேலைக்காக பட்டணபிரவேசம் செய்யும் ஒருவன், அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டில் ஏற்கனவே தங்கியிருக்கும் பெண் இந்த மூவருக்கும் இடையில் வாழ்கைக்காகவும், பணத்துக்காகவும் நடக்கும் "ஜாலி சடுகுடு" தான் படம் முழுவதும். பணத்தின் பொருட்டு இவர்கள் மூவரும் இணைந்து பண்ணும் 'தில்லாலங்கடி' வேலை தான் படத்தின் உச்சம். இன்றளவும் டிவியில் இந்த படம் ஒளிபரப்பானால் அப்படியே உக்கார்ந்து விடுவேன். காரணம் இயல்பாக இருக்கும் நகைச்சுவை. அதுவும் வீ.கே. ராமசாமி, பிரபு, ரேவதி இணைந்து நடத்தும் 'காமெடி மேளா" பார்த்தவர்கள் உணர்த்து இருப்பார்கள். அதுவும் போதாகுறைக்கு கடைசியில் 'ஜனகராஜ்' வேறு வந்து சேர்ந்துகொள்வார். "ஆகாய வெண்ணிலவே" இன்றளவும் மறக்கமுடியாத பாடல்.


கற்பூர முல்லை ( 1991 ) :
மலையாளத்திலும், தமிழிலும் ஒன்றாக வெளிவந்த படம். உறவை அறிந்த அம்மாவுக்கும், உறவே அறியாத மகளுக்கும் இடையில் நடக்கும் கதை. அம்மாவாக ஸ்ரீவித்யா, மகளாக அமலாவும் நடித்து இருந்தனர். மறுப்படியும் ஒரு "பூவே பூச்சுடவா'' மாதிரியான முயற்சி. ரிசல்ட் வேறுவிதமாக. தமிழில் எதிர்ப்பாராத 'அடி'. வழக்கம்போல் ராஜாவின் இசை இதிலும் சுகம்.


கிளி பேச்சு கேக்க வா ( 1993 ) :
வாத்தியார் வேலை வேண்டும் என்றால் 'போனசாக' ஒரு பேய் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஊருக்கு வேலைக்கு வரும் மம்முட்டிக்கும், 'பேயாக' நடிக்கும் கனகாவுக்கும் இடையில் நடக்கும் காதலும் இடையில் ஊர் பொல்லாப்பும் தான் கதை.
இதிலும் மறுப்படியும் 'சறுக்கல்'.பாடல்கள் மறுபடியும் ஹிட்.


காதலுக்கு மரியாதை ( 1997 ) :
விஜய்க்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம். தயரித்தர்வர்களே இந்த வெற்றியை எதிர்ப்பார்தர்களா என்று தெரியவில்லை. வந்த சமயத்தில் பலப்பேருக்கு 'காதலை' தூண்டிவிட்ட படம். தமிழ்நாட்டில் அந்த சமயத்தில் காதல்வயப்பட்ட பலப்பேர் விஜயாகவும்,ஷாலினி அஜித்தாகவும் தான் வலம் வந்துக்கொண்டு இருந்தனர். கதை என்னவென்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன..அல்லது இந்த கதை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரவது உண்டா..காதல்னா இப்படி தான் இருக்கணும் என்று பல பெற்றோர்களே 'சான்றிதழ்' கொடுத்தார்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு. காதலை கண்ணியமாக சொன்ன படத்தில் இந்த படத்திற்கு எப்பொழுதும் தனி மரியாதை உண்டு. "என்னை தாலாட்ட வருவாயா" என்று எல்லோரும் ஒரு காலத்தில் இல்லை இப்பொழுதும் முனுமுனுக்கும் பாடலே இசைக்கு சான்று.


கண்ணுக்குள் நிலவு ( 2000 ) :
எதோ ஒரு பெண்ணை தேடும் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்..அவனை 'சுயநினைவுக்கு' கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பெண்.
விஜய் & ஷாலினி அஜித்..மறுப்படியும் அதே காதலுக்கு மரியாதை என்று எதிர்ப்பார்த்து சென்றவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம். கதையின் தெளிவில்லாத போக்கு ஒரு காரணம். சில பேருக்கு பிடித்து இருந்தது அதுவும் பாடல்களுக்காக. இன்றளவும் இந்த பாடல்கள் கேக்க மிக இனிமையாக இருக்கும்.


ஒரு நாள் ஒரு கனவு ( 2005 ) :
இந்த படத்தை மட்டும் நான் பார்க்கவில்லை..பார்த்தவர்கள் விருப்பபட்டால் கதை சொல்லவும். கதாபாத்திர தேர்விலேயே பாசில் தப்பு பண்ணிய படம். வேறு என்ன சொல்லுவது.


டிஸ்கி: நல்லவேளை பாசில் பத்து படத்தோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.. "கை" எல்லாம் வலிக்குது..A-Z எல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ..சாமி கோவில் தான் கட்டனும்.

Wednesday, December 16, 2009

பாசில் ..(பாகம்-1 )

தமிழ் படங்களில் எத்தனை படங்கள் காதலை மையப்படுத்தாமல் நம் மனதை விட்டு அகல மறுக்கும் திரைப்படங்களாக வந்து உள்ளன என்று தெரியவில்லை. அப்படியே வந்து இருந்தாலும் ரசிக்கும் விதத்தில், ஜனரஞ்சகமாக, மக்கள் ஏற்றுகொள்ளும் விதத்தில் இருந்து ஓடிய படங்கள் குறைவு தான். அப்படி தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் காதலை மட்டும்மெயின் தீமாக எடுத்துக்கொள்ளாமல்..ஆனால் படத்தோடு நம்மை உணர்வுபூர்வமாக ஒன்றசெய்து தனக்கென ஒரு தனி பாணியை ஏற்ப்படுத்திக்கொண்டவர் 'டைரக்டர்' பாசில். மலையாளப்பட இயக்குனரான இவர் தமிழில் பிரவேசம் செய்தது "பூவே பூச்சுடவா" முலமாக. இவர் தமிழில் இயக்கிய படங்கள் முக்கால்வாசி இவரே ஏற்கனவே மலையாளத்தில் இயக்கியதாக தான் இருந்தது ஒருசில படங்கள் தவிர்த்து.ஆனால் இவர் தமிழில் அதை கொடுத்தப்பொழுது அதை தமிழ்படுத்துக்கிறேன் பேர்வழி என்று அதன் ஜீவனை கெடுக்காமல் அழகாக தமிழ் சமுதாயத்திற்கு எற்றமாதிரியே படத்தினை அளித்தார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7uRqvIn2hd0XkmQ_wVEm3yxiyte5Y_fN4X94Yiw93T8K9ONF6riJlVJsKTiqJhhHthS5d3Gz-A7BCgdULUUeKbQF8LZr16i5eckFHyWw4kwXPFe9i2UicfPLUrHlTDF7ZmYXJJHJ5XoCa/s400/fazil.jpg

அதற்கு காரணம் தமிழிலும் அவரே இயக்கியதால் கூட இருக்கலாம்..அநேகமாக எந்த தயரிப்பாளரும் அவருடுய பணியில் குறுக்கிடாத காரணத்தினால் அவரால் சுதந்திரமாக செயல்ப்பட்டிருக்க முடியும். மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் வெற்றிக்கரமாக இருந்த ஒரே இயக்குனர் இவராக தான் இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். தமிழில் அவருக்கு பிரமாதமாக எல்லாம் படங்களிலும் கைகொடுத்தவர் 'இசைஞானி' இளையராஜா( ஒரு நாள் ஒரு கனவு படம் தவிர்த்து). பாடல்கள் ஆகட்டும், பின்னணி இசை ஆகட்டும் ராஜா தனி ராஜாங்கமே நடத்தி இருப்பார். இன்று அளவும் அந்த படங்களை நம் தொலைக்காட்சியில் பார்கும்ப்பொழுது அந்த இசை நம்மை அப்படியே உருக்கும். அதே மாதிரி பாசில்க்கு என்று தனியாக ஒரு நடிகர் பட்டாளம் தமிழில் அமைந்தது அல்லது அவர் தேர்வு செய்தார். சத்யராஜ், ஜனகராஜ்
, வீ.கே.ராமசாமி இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்த நடிகர்கள் சிலர்.

மலையாளத்தில் 'மஞ்சில் விரிந்த பூக்கள்' தான் இவர் இயக்கிய முதல் படம். மோகன்லாலை அந்த படத்தின்
மூலம் அறிமுகப்படுத்தியவர்.
இன்று அளவும் இவருடுய பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சந்திரமுகியின் ரியல் வெர்ஷனான 'மணிசித்திரதாழ்' இவர் இயக்கியது தான். தமிழில் இவர் இயக்கிய படங்கள்..

பூவே பூச்சுடவா (1985 ) :

ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசப்பிணைப்பை மிக மிக அருமையாக சொன்ன படம். நகைச்சுவையோடு கலந்து அந்த உணர்ச்சி போராட்டதையும் அழகாக படமாக்கி இருப்பார். அதுவும் நதியா, எஸ்.வீ.சேகர், சார்லி, வீ.கே.ராமசாமி மற்றும் அந்த சின்ன பசங்க காமெடியில் கலக்கி இருப்பார்கள். இறுதிக்காட்சிகளில் மனம் கனத்துப்போகும். இந்தப்படத்தின் மூலம் நதியாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாசில். இதே கேரக்டரை மலையாளத்திலும் நதியா&பத்மினியே பண்ணி இருப்பார்கள். இந்த படத்திற்கு பிறகு நதியாவிற்கு தமிழில் கிடைத்த வரவேற்பு நாம் அறிவோம்.ராஜாவின் உருக்கும் இசை இந்த படத்தில் பாசில்க்கு பேருதவியாக இருந்தது.
நல்லதொரு சித்திரம்.

பூவிழி வாசலிலே (1987 ) :

தமிழில் வந்த மிகசில "திரில்லரில்" இந்த படத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு. தன் தாய் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த வாய்பேச முடியாத, காது கேளாத ஒரு குழந்தை. அந்த குழந்தையை 'எதேச்சையாக' எடுத்து வளர்க்கும் ஒருவன், அந்த குழந்தை எங்கே சாட்சியாக மாறிவிட போகிறதோ என்று அந்த குழந்தையை அவனிடம் இருந்து 'மீட்க' நினைக்கும் கொலையாளிகள். இது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதம்..கடைசி வரை என்ன ஆகபோகிறதோ என்று ஒரு 'பதைபதைப்பு' இருந்துகொண்டே இருக்கும். அதுவும் அந்த குழந்தையின் நடிப்பு எளிதில் மறக்க முடியாத ஓன்று.(சுஜி?!). இளையராஜாவின் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களோடு வந்து இருக்கும். இதில் சிறிதாக ஒரு காதலை சொல்லி இருப்பார் பாசில். ஆனால் கிளைமாக்ஸ்ல் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து இருக்கலாம்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( 1988 ) :

இந்த பதிவை எழுததூண்டிய படம். இன்றளவும் அந்த படத்தை பார்க்கும்பொழுது நம்மிடம் ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது .
தன் குழந்தை இறந்தப்பிறகு ஒரு சிறுமியை ஆஸ்ரமத்தில் இருந்து தத்தெடுக்கும் ஒரு பெற்றோர். அதன்ப்பிறகு அந்த சிறுமியை எதிர்பாராதவிதமா பிரிந்து சென்ற தாயை அந்த பெற்றோர்கள் சந்திக்க நேரிடும்ப்பொழுது நடக்கும் உணர்சிப்போரட்டங்கள் தான் படம்.
சத்யராஜ் முதற்கொண்டு அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் ரகுவரன் குறைந்த காட்சிகளே வந்தாலும் கலக்கி எடுத்திருப்பார் மனிதர். ஒரு நல்ல கலைஞனை சீக்கிரமாக இழந்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
இந்தப்படத்திலும் ராஜாவின் இசை நம்மை கலங்க செய்து இருக்கும்..

(தொடரும்)

Tuesday, December 15, 2009

கார்த்திகை மாதமும், ஐய்யப்ப சாமியும்..


கார்த்திகை மாதம் என்றால் என்ன நியாபகத்துக்கு வரும் கார்த்திகை தீபம், சிலருக்கு திருவண்ணாமலை, அப்புறம் கொஞ்சம் குளிரான சீதோஷன நிலை அப்புறம் மிக முக்கியமா ஐய்யப்ப சாமிகள். காய்கறி விற்பவர்கள் முதல் ஆட்டோ ஓட்டுனர் வரை, காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடனே மாலை போட்டுகொண்டு கருப்புவேஷ்டியில் வலம் வர தொடங்கி விடுவார்கள். அதுவும் "சபரிமலைக்கு" நம் தமிழ்நாட்டில் இருந்து போகும் "பக்தர்கள்" கூட்டம் தான் அதிகம். அதேப்போல் பழனிக்கு கேரளாவில் இருந்து வரும் "கூட்டம்" அதிகம்..காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான். 'ஐயப்பன்' தமிழ்நாட்டை நோக்கி அருள்பாளிப்பதும்.."பழனிமலை ஆண்டவன்" கேரளாவை நோக்கி அருள்ப்பாளிப்பதும்.
http://photos.merinews.com/upload/imageGallery/bigImage/1251565532774-swami%20ayyappa.jpg

தமிழ்நாட்டில் உள்ளோருக்கு இந்த "மாலைப்போடும்" ஆர்வத்தை தூண்டிவிட்டதில் "நம்பியாரின்" பங்கு அதிகம்.அதற்குமுன்பு எப்படி என்று தெரியவில்லை ஆனால் அவரின் தாக்கத்தினால் இந்த பழக்கம் மற்றவர்கள் இடையில் 'ஆர்வமாக' பரவியது.இதில் "உண்மையில்" பக்தியோடு 'மாலை' போடுபவர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை.ஆனால் வேற எதோ ஒரு காரணத்திற்காக மாலை அணிபவர்கள் அதிகம். வீட்டில் கிடைக்கும் "நானும் கடவுள்" என்ற "அந்த" பிம்பத்திற்கு கிடைக்கும் மரியாதை, அதிகமாகி போன "கெட்டபழக்கத்தை" தற்காலிகமாக ஒரு மண்டலத்திற்கு விட்டுவிடுவதால்..யப்பா நம்ம ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை..நம்மாலும் இந்த பழக்கத்தை நிறுத்தமுடியும் என்ற எண்ணத்தின் முலம் கிடைக்கும் அந்த நிம்மதி(நான் இதுவரை மாலை போட்டதில்லை), குறிப்பா நம்ம "அந்த சமயத்தில்" யார் மீது வேணாலும் அதிகாரம் செலுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை. இப்படி பல காரணங்கள் பலப்பேருக்கு. ஆனாலும் மாலை போட்டுக்கொண்டும் சிலபேர் "காமெடி" பண்ணுவார்கள்..கல்லூரி படிக்கும்ப்பொழுது 'மாலை அணிந்த' என் நண்பன் இன்னொரு நண்பனை திட்டுவதற்கு என்னை கூப்பிடுவான்.

உண்மையில் அந்த "ஒரு மண்டலத்தில்" நம் பின்ப்பற்றும் அந்த ஒழுக்கமான நடைமுறைகள் தரும் எண்ணங்கள், அதன்முலம் மாறும் நம் அன்றாட அமைப்பு..அதை நம் "மாலையை" கழட்டி வைத்தபின்பும் "அப்படியே" தொடர்வது தான் கான்செப்ட்.ஆனால் "ஃபாஸ்ட் புட்" கலச்சரம்ப்போல் கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் மாலை அணிந்துகொள்கிறோம். இந்த "பழக்கவழக்கங்களை" கூட விட்டு தள்ளுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். உண்மையான "கடவுள்பக்தி" என்பது நம் மற்றவர்கள் மீதும் செலுத்தும் அன்பே( அன்பே சிவம்)..இந்த "அன்பே சிவம்" மேட்டர் மாலைப்போடும் காலகட்டங்களில் மட்டும் அல்ல "பக்தியை" ஆராதிக்கும் எல்லோருக்கும் எல்லா காலகட்டங்களிலும் பொருந்தும். சிலப்பேர் "நாத்திகர்களாக" ஆவதற்கு "கடவுள்" என்ற ஒன்றின் மீது நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம் என்றால்.."பொருள்ப்பித்து" பிடித்து அன்பில்லாமல் திரியும் சில "பக்திமான்களின்" செய்கையும் இன்னொரு காரணம். எதுக்கு இந்த "அன்பே சிவம்" மேட்டர் சொல்லுறேன்னு பாக்குறிங்களா..சொல்லுறேன்..

இந்த "ஐயப்ப சாமிகளில்" பெரும்பாலான மக்கள் தங்கள் தற்காலிமாக ஏற்றுக்கொண்ட அந்த "கதாப்பாத்திரத்தின்" காரணமாக எப்பொழுதும் 'உர்ரென்று' திரிவது, எதாவது ஒரு விஷயம் மற்றவர்கள் "சொதப்பினாலும்" மாலைபோட்ட காரணத்தை சாக்காக வைத்து அவர்கள் மீது எரிந்துவிழுவது..பெரும்பாலும் இந்த "இருமுடி" கட்டும்ப்பொழுது இந்த 'குருசாமிகள்' பண்ணும் ஆர்ப்பாட்டம் இருக்கும் பாருங்கள்..கண்டிப்பா எதாவது ஒரு கோவிலில் பார்த்து இருப்போம்..என்னா இதெல்லாம்.."அன்பா இருங்க..சகஜமா பழகுங்க"..இதான் "அந்த நாட்கள்" நமக்கு போதிக்கும் முக்கியமான விஷயம்..அதுவும் "அரசு அலுவகங்களில்" மாலைபோட்டு கொண்டும் 'கை' நீட்டுவர்..மற்ற நாட்களில் "கை" நீட்டினால் தவறில்லையா என்று கேக்ககூடாது..அந்த சமயத்தில் அந்த "ஒழுக்கமான வாழ்க்கை" கொடுக்கும் அனுபவம் தான் நமக்கு பாடம்..அதன்ப்பிறகு அதை தொடர்ந்தால் 'கடவுளும்' நம்மை எப்பொழுதும் பின் தொடர்வார்.

அதுவும் வீட்டில் இருக்கும் "சின்ன பசங்களக்கு" கூட மாலை அணிவித்து விடுவார்கள்..அந்த "ஒரு மண்டல" கட்டுக்கோப்பான வாழ்கை அவர்களுக்கு "ஒரு பாதையாக" அமைந்தால் பரவில்லை..ஆனால் பெரும்பாலனவர்கள் ஏற்ப்படுத்தும் 'நான் கடவுள்' பிம்பம் பெரியவர்களின் செய்கையால் அந்த சிறுவனின் "மனதிலும்" பதிந்து விட்டால்.."அன்பை போதியுங்கள்" ..வேறு சில விஷயங்களை தினிக்காதிர்கள்.(அப்படி பார்த்தால் "சாமி கும்பிடுவதே" பெரியவர்கள் கற்றுக்கொடுக்கும் திணிப்பு என்று சொல்லலாம்.ஆனால் அது நம் கலச்சரத்தின்ப்பால் இயற்கையாக அமைந்தது 'திணிப்பு' அல்ல). மாலை அணியும் சமயத்தில் அந்த செய்கையை மற்றவர்கள் மேல் காட்டும் 'அன்பாலும்' செய்யும் 'நேர்மையான செய்கையாலும்' நியாயப்படுத்துங்கள். அது தான் சரியான வழி.


(டிஸ்கி: நான் நாத்திகன் இல்லை சாமிகளா ஆத்திகன் தான்..என்னோடைய மதத்தில் நான் "அபத்தங்களாக"..அதுவும் மாலை போடும் சமயத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து, எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களின்ப்பால் என்னால் முடிந்த வரை எழுதி உள்ளேன். கருத்து
கொஞ்சம் அதிகமா சொல்லிட்டனோ..)

Monday, December 14, 2009

திங்கள் இனிதே-4

அமீரகத்தில் ஒரு மழைக்காலம்:

எப்பொழுதும் கானல்நீரையே உமிழ்ந்துகொண்டு இருக்கும் சாலைகள் ஆச்சரியமாக இரு நாட்களாய் மழைநீரை தெறித்துக்கொண்டு இருக்கிறது...ச்சும்மா ஊரே மழையில் நனைந்த கொண்டு "சில்" என்று இருக்கிறது.. வெளியே கொட்டும் மழையை ஆர்வமாய் பார்த்தாலும் கொஞ்சம் மனசுக்குள் "திக் திக்"ன்னு தான் இருக்குது திடிர்னு தலைகாட்டும் சூரியனை பார்த்து..இதே மாதிரி ஒரு ஊரில் மழை பெய்வதே அபூர்வம்..அதனால் முடிந்தவரை ரசித்துக்கொள்ள வேண்டியது தான். என்னா கொஞ்சநேரம் மழை பெய்தாலே சாலையெங்கும் ஒரே வெள்ளக்காடாக ஆகிவிடுகின்றது..அது ஓன்று தான் குறை..நம்ம ஊரிலும் மழை என்று தான் கேள்விப்பட்டேன் "ஜமாய்ங்க".
....................................................................................................................

ஷார்ஜா அனுபவம்:

போன வாரம் "கலையரசன்" அறைக்கு சென்று இருந்தேன். சென்ஷி, நான் ஆதவன், கலை அப்புறம் நான் ஒன்றாக 'கூடி' வெகுநேரம் உலகஅரசியலையும் சமக்கால இலக்கியத்தை பற்றியும் விவாதித்து கொண்டு இருந்தோம்.நேரம் போவதே தெரியாமல் விடியும்வரை "உலக படங்களை" பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்புறம் அவரவர் இடங்களுக்கு கிளம்பினோம்.நிறையா தமிழ் முகங்களை ஷார்ஜாவில் பார்க்க முடிகிறது. ஷார்ஜா பேருந்து நிலையம் துபாயைப்போல் இல்லாமல் நான் சென்ற ரெண்டு தடவையும் சுலபமாக பஸ்சை பிடிக்க முடிந்தது.ஒரு வேளை நான் 'பிஸி' அல்லாத சமயத்தில் வந்தேனா என்று தெரியவில்லை.. "துபாய்" கூட ஒப்பிடும் பொழுது எவ்வளவோ தேவலாம்..துபாய் பேருந்து நிலையத்தை பற்றி ஒரு தனி பதிவே போடலாம்..இருந்தாலும் இப்ப வேண்டாம்..இந்த ஊரைவிட்டு "வந்தப்பின்" போடுகிறேன்.
....................................................................................................................................................

கிரிக்கெட்:

இந்தியா "டெஸ்ட் ரேங்கிங்"கில் முதலிடம் பிடித்து இருக்கிறது தோனி தலைமையில். வாழ்த்துக்கள். ரெண்டு மேட்ச்சில் தொடர்ந்து இன்னிங்க்ஸ் வெற்றி அதுவும் இலங்கைக்கு எதிராக. சேவாக் அபார பார்மில் இருக்கிறார்..பின்னி பெடலெடுக்கிறார் மனிதர். உலக சாதனை படைப்பார் என்று மறுபடியும் ஒரு தடவை எதிர்ப்பார்த்து ஏமார்ந்துபோனோம்..இந்திய அணி "தோனி" தலைமையில் கொஞ்சம் துடிப்புடன் செயல்ப்படுவதுப்போல் தான் உள்ளது அல்லது "துடிப்பான அணி" அமைந்துள்ளது. இருந்தும் ஆஸ்திரேலியா அல்லது சவுத் ஆப்ரிக்கா போல ஒரு ஆல்-ரவுண்டு அணியாக இன்னும் இந்தியா வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். BCCI என்ற தனியார் அமைப்பு இன்னும் நிறையா செலவு செய்ய முன்வர வேண்டும் பல புதுமையான முறைகளை கையாள்வதற்கு. இந்தியா அணி இன்னும் சில மைல்கள் கடக்க வேண்டியது உள்ளது.
........................................................................................................................................................

விஜய் & விஜய் அந்தோணி

விஜய் அந்தோணி பாடல்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை ..துள்ளலான இசை. "நினைத்தாலே இனிக்கும்" வரை பட்டையை கிளப்பி உள்ளார். அப்பேர்ப்பட்டவர் விஜய் படத்தில் இணைந்து உள்ளார் என்றால் பாடல்கள் சாதரணமாக அமைந்து விடுமா..
"வேட்டைக்காரன்" பாடல்களை கேக்கும்ப்பொழுது 'உச்சிமண்டை' ச்சும்மா கிர்ர்ருனு' தான் இருக்கு. படமும் நன்றாக வந்து இருக்கும் என்று நம்புவோமாக..ஒரு "மாஸ் ஹீரோ"வின் படம் தொடர் தோல்வியடைவது சினிமாவிற்கும் நல்லது அல்ல. படம் வெற்றிப்பெற்றால் மற்ற வளரும் படங்களுக்கும் ஒரு "நம்பிக்கை" பிறக்கும்..படம் லாபகரமான வகையில் இருந்தால் சன் பிக்சர்ஸ்ம்
வணிகரீதியான படங்களை மட்டும் எடுக்காமல் இன்னும் சில சோதனை முயற்சிகள் கூட பண்ணி பார்க்க வாய்ப்புண்டு.
................................................................................................................................

ஆனந்த விகடன்:

ரொம்பநாள் கழித்து "ஆனந்த விகடன்" வாங்கினேன்..ஏனோ "சின்ன புத்தகமாய்" வந்தப்பொழுது இருந்த மனதுக்கு நெருக்கமான "ஃபீல்" இப்ப அவ்வளவாக இல்லை..எங்கும் ஒரே வண்ணமயமாக உள்ளது "ரங்கோலி" கோலபுத்தகத்தை திறந்ததுப்போல். இந்த மாற்றம் அவர்கள் வரும் தலைமுறையை கவர கொஞ்சம் முன்கூட்டியே வைத்த "அடி"(ஸ்டேப்) போல் தான் உள்ளது. எது எப்படியோ இந்த "ப்ளாக்" பக்கம் வந்ததில் இருந்து கொஞ்ச நஞ்சம் இருந்த புஸ்தகம் படிக்கும் பழக்கமும் அறவே ஒழிந்தது. அந்தவகையில் "ப்ளாக்" பல புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு உள்ளது.
..................................................................................................................................................................

கவிதை(அப்படியும் சொல்லலாம்)

சாலையின்
ஓரங்களில் உள்ள மரங்களை கடக்கையில்
வேதனையாக உள்ளது இன்னும் சில தினங்களில் வரப்போகும்
"சாலை விஸ்தரிப்பை நினைத்து".


Saturday, December 12, 2009

உலக சினிமாவும், உள்ளூர் சினிமாவும்.

உலக சினிமாவும் உள்ளூர் சினிமாவும்..

http://ecx.images-amazon.com/images/I/41V9VCY174L._SL500_AA240_.jpg

உலக சினிமா..உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்க..நம்ம தமிழ் சினிமாவை பற்றி பேசுனாலே டெரரா பாக்குறாங்க
..நானும் சரி உலக சினிமா உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்களே ''அதுல'' அப்படி என்ன தான் இருக்குனு சில உலகசினிமாக்களை பார்த்தேன்.. நம்ம ஊரு சினிமாவுக்கும் அந்த "உலக" சினிமாவுக்கும் உள்ள வேறுப்பாடுகளை முடிந்தவரை பட்டியலிட்டுள்ளேன் ..

நம்ம ஊரு
சினிமா: ஹீரோ படத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல மூச்சே விடாமடயலாக் பேசுறதை காட்டுவாங்க..
உலக சினிமா: ஹீரோ மூச்சு பிடிக்கறதை மட்டும் பத்து நிமிஷம் "க்ளோஸ்-அப்" காட்டுவாங்க..அதுக்கு அப்புறம் தான் அவரு வசனமே பேச ஆரம்பிபாரு.(படத்துல டயலாக் எல்லாம் கம்மியா தான் இருக்கும்..எல்லாமே "உணர்வுபூர்வமான" வெளிப்பாடுகள் தான்)

நம்ம சினிமா: எதாச்சும் சில கதாபாத்திரங்கள் புரிஞ்சிக்கவே முடியாத,எந்தசமயத்துல எதாச்சும் ஏடாகூடமா லூசுத்தனமா பண்ணப்போறன்களோ என்பதைபோல் இருப்பார்கள்.
உலக சினிமா: இங்க பெரும்பாலான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் "அதேமாதிரி" தான் அலைந்துகொண்டு இருக்கும்.

நம்ம சினிமா : பாட்டு ஃபைட்ன்னு இசை நம்ம காதுல கடைசி வரைக்கும் "நங்குநங்கு"ன்னு வந்து விழும்.
உலக சினிமா: ஒரு உடைஞ்சப்போன வயலின் இசை படம் முழுவதும் கூடவே வந்துக்கிட்டு இருக்கும். இசையமப்பாளர் எதோ "கருமாதிக்கு" வாசிக்கிற மூட்லையே கடைசி வரைக்கும் வாசிச்சிக்கிட்டு இருப்பாரு.

நம்ம சினிமா: குடும்பத்தோடு பார்க்கிறப்ப சில இடங்களில் கொஞ்சம்பயந்துக்கொண்டே இருக்க வேண்டும்..எதாவது "ஏடக்கூட" காட்சிகள் வந்துவிடபோகிறதோ என்று.
உலக சினிமா: இங்க எந்நேரமும் கையுல ரிமோட்டை கெட்டிய புடிச்சிக்கிட்டு உக்கார்ந்து இருக்கணும்..கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும்..வீட்டுல பார்த்தோம் அப்படிங்கிற பட்சத்தில் நம்ம கதை முடிஞ்சது.

நம்ம சினிமா: படம் முடியறதுக்கு முன்னாடியே எழுந்து வீட்டுக்கு ஓடுறதுக்கு தயாரா இருப்போம்..ஏன்னா படம் முடிய போகுதுன்னு முன்னாடியே யூகித்து வைத்து இருப்போம்..
உலக சினிமா: இங்க "ரோலிங் டைட்டில்" போட்ட தான் "ஓஹோ, படம் முடிஞ்சிருச்சா" அப்படிங்கிறதே தெரியும்..ஏன்னா "கதை" அந்த அளவுக்கு தெள்ள தெளிவா இருக்கும்.

நம்ம சினிமா: மத்தவங்க எல்லாம் ஆடுவாங்க..ஓடுவாங்க..கேமரா மட்டும் ஒரே இடத்தில நிற்கும்
( விஜயகாந்த் படத்தில் வரும் பாடல் காட்சிகளை தவிர்த்து..அவர் பட பாட்டுல மட்டும் தான் அவரோடு சேர்ந்து காமெராவும் ஆடும்..உதாரணம்: "உன்ன நினைச்சேன் நான் உன்ன நினைச்சேன்" பாட்டு)
உலக சினிமா: இங்க மத்தவங்க எல்லாம் ஒரே இடத்தில நின்னாலும்..கேமரா மட்டும் "குளிர் ஜுரம்" வந்த மாதிரி நடுங்கிகிட்டே இருக்கும் .


இப்ப உலக சினிமா ரசிகர்களையும், நம்ம ஒரு சினிமா ரசிர்களுக்கும் உள்ள வேறுப்பாட்டை பார்ப்போம்:

http://www.ajithfans.com/article-uploads/2007/12/billa-tamilcinema-fans.jpg

நம்ம சினிமா ரசிகர்கள்
: தியேட்டர்ல ஆடுவாங்க, பாடுவாங்க, ஓடுவாங்க, சத்தமா சிரிப்பாயிங்க
..ஒரு "உணர்ச்சி மிகுதில" தான் எப்பொழுதும் இருப்பார்கள்..
உலக சினிமா ரசிகர்கள்: எந்த உணர்ச்சியும் காட்டமா கடைசி வரைக்கும் "கட்டிப்போட்ட" மாதிரியே உக்கார்ந்து இருப்பார்கள்.

நம்ம சினிமா ரசிகர்கள்
: அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் கொண்டாட்டம் தான்.
உலக சினிமா ரசிகர்கள்: அந்த மாதிரி நடிகர்களின் போஸ்டரை பார்த்தாலே "டாரு டாரை கிழித்து'' தொங்கவிட்டு விடுவார்கள்.

நம்ம ரசிகர்கள்
: பெரும்பாலும் ஒரு "எடக்கூடமாய்" காட்சி வந்தால் உள்ளே ரசித்தாலும் பிடிக்காத மாதிரி வெளியே காட்டி கொள்வார்கள்.
உலக சினிமா ரசிகர்கள்: தமிழ் படங்களில் எதாவது "அதே மாதிரி" காட்சி அமைப்புகள் வந்தால் "வக்கிரம்" என்று சொல்லிவிட்டு..கிட்டதட்ட "உறவுகளையே" வக்கிரமாக சித்தரிக்கிற "உலக படங்களை" "கலைப்படங்கள்" என்பார்கள்.

நம்ம சினிமா ரசிகர்கள்
: ஆனந்த விகடன், குமுதம், கேபிள் சங்கர் அவர்களின் "தமிழ்ப்பட" விமர்சனங்களை படித்துவிட்டு ஓடியே போய் விடுவார்கள்.
உலக சினிமா ரசிகர்கள்: IMBD, Rotten tomatoes என்று இரவெல்லாம் "கண் விழித்து" ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.
சுருக்கமா

நம்ம சினிமா ரசிகர்கள்
கே.எஸ்.ரவிக்குமார் பட "ஹீரோ" மாதிரினா
உலக சினிமா ரசிகர்கள் செல்வராகவன் பட "ஹீரோ" மாதிரிங்க ..

டிஸ்கி: சும்மா ஒரு "இதுவா" தான் எழுதி இருக்கேன் யாராவது "அதுவா" எடுத்துக்க போறீங்க..


Wednesday, December 9, 2009

டிசம்பர் 10


















"Composite materials எக்ஸாம்க்கு எப்படி படிச்சாலும் புட்டுக்க தான் போகுது..தூக்கி போட்டுட்டு வாடா சீர்காழி வரைக்கும் போய்ட்டு வரலாம்" என்று பார்த்திபன் அழைக்க..எனக்கும் அதுவே சரி என்றுப்பட வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.


திருப்பி சிதம்பரத்துக்கு வர்றப்ப எல்லாம் வடிந்து இருந்தது. "மச்சான் திருப்பி சாப்பிட்டு ரூம்க்கு போயிறலாம் என்ன சொல்ற"..என்று பார்த்தி கேக்க..


"அதான் சரி..ஆனா ரெண்டு பேருகிட்டயும் அஞ்சு ரூபா கூட இல்லை என்ன பண்ணுறது..என்று நான் சொல்ல..

"மச்சான் என் ஃபிரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவனை போய் பார்த்து காசு வாங்கிட்டு போலாம் வா.." பார்த்தி சொன்னான்.

"டேய்..இந்த சமயத்துல போறியே..உன் கூட சாதாரணமா வந்தாலே எவனா இருந்தாலும் காரி துப்புவான்..அதுவும் "தீர்த்தவாரிக்குனு" காசு கேட்டு போய் நின்னா
கண்டிப்பா என்னை கேவலாமா நினைப்பான் உன் ஃபிரெண்ட்.." ..நான்.

"அதுல்லாம் அவன் எந்த சமயத்தில் போய் கேட்டாலும் கொடுப்பான் வா.." என்று என்னை கிஷோர் வீட்டுக்கு அழைத்து போனான்..அது தான் எங்களுக்கான முதல் சந்திப்பு..சத்தியமா அன்னிக்கு என்னை பத்தி என்ன நினைச்சன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாது..

அப்புறம் இரண்டாவது சந்திப்பு எதோ ஒரு மருத்துவமனையில் சந்தித்தோம்..பின் "ராம்" படம் பார்க்க "வடுகநாதன்'க்கு"அவன் "செலவில்" அனைவரையும் அழைத்து சென்றது..இது வரை மட்டுமே என்னால் "கிஷோரை" பார்த்திபனின் நண்பனாக பார்க்க முடிந்தது.. "

இந்த ஐந்து வருடங்களில் என் வாழ்வில் நடந்த அத்தனை முக்கியமான நிகழ்வுகளிலும் உடனிருந்து இருக்கிறான்..முக்கியமாக "மனம் உடைந்துபோன" பல தருணங்களில் உடனிருந்து ஆறுதல் கொடுத்திருக்கிறான். அதுவும் பலசமயங்களில் "எக்ஸாம் ஃபீஸ்" எல்லாம் கூட "அவன் இருக்கிறான் பார்த்துக்கொள்ளுவான்"..என்று நானும் பார்த்திபனும் கடைசி சமயம் வரை கட்டாமல் இருந்திருக்கிறோம். அவன் கூட பழகியவர்களுக்கு அவன் "இயல்பு" புரியும்..நான் கூட என்னால் ஏன் "இதே மாதிரி இருக்க முடியவில்லை" என்று பல சமயங்களில் அவனை பார்த்து நினைத்ததுண்டு. அவன மாதிரி ஒரு கேரக்டர் சான்சே இல்லை பழகி பாருங்க தெரியும்..

அவன் நன்றி சொல்றானோ இல்லையோ..அவனை மாதிரி ஒரு ஆளை இந்த டிசம்பர் 10ல் பிறக்க வைத்து..அவனை சந்திப்பதற்க்கான வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுத்த இறைவனுக்கு நான் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

Last but not least "Many more happy returns of the Day Machi"

உன் வாழ்வு சிறக்கவும் உன் மேல் பிறரின் அன்பு மென்மேலும் படரவும்..

(கிஷோர் இதை நீ மட்டும் படி : மச்சி கொடுக்கறன்னு சொன்ன காசுக்கு மேலே ஓவரா கூவிட்டேன்..சொன்ன மாதிரியே என் அக்கௌன்ட்க்கு பணம் வந்துடனும் சொல்லிப்புட்டேன்)