Saturday, October 24, 2009

திங்கள் இனிதே-1


அடியேனும் இனிமேல் திங்கள்கிழமை திங்கள்கிழமை போன வார நியாபகங்களை 'நான் தூசி தட்டி உங்களை தும்ம விடலாம்னு' இருக்கேன் எதாச்சும் ஒரு பெயர் அதற்கு பொருத்தமா வைக்கனுமே..என்ன வைக்கிறது..'காபி வித் வினு' எப்படி இருக்கு..கொஞ்சம் ஓவரா இருக்கு இல்ல..சரி 'மொக்க முருகேசு' ..ம்ம்ம்..இதுக்கு மட்டும் எல்லாம் கோரசா ஓகே சொல்லுவிங்களே..அதுவும் இல்லை..திங்கள் இனிதே..இதான் சரி..இனி இனிதே ஆரம்பிப்போம்...

-------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி போன வாரமே முடிஞ்சு போனாலும் அதை பற்றி போன வாரம் எழுத முடியவில்லை..சரி அதனால என்ன இப்ப பார்க்கலாம்..பொதுவா தீபாவளினா எல்லாம் பொதுவா நம்ம ஊருல தீபாவளி கொண்டாடுற சுகமே தனின்னு சொல்லுவாங்க..யாரு சொன்னது..இல்ல யாரு சொன்னதுன்னு தான் கேக்குறேன்..நான் இங்க(அமிரகம்) வந்து இது இரண்டாவது தீபாவளி..துபாய்ல தீபாவளி கொண்டடங்களை பார்க்க வேண்டும்..அது போதுங்க..அதுக்கு அப்புறம் தீபாவளி ஆச்சுனா நீங்க இங்க வந்து தீபாவளி கொண்டாடுவிங்க வருஷா வருஷம்..அவ்வளவு கொண்டாட்டங்கள்..அஞ்சு நாள் விடுமுறை எப்படி போனது என்றே தெரியவில்லை..பட்டாசுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சப்ளை செய்யப்படும் நாம் வெடிக்கிறமோ இல்லையோ..ஒரு பெரிய திடலில் பந்தல் அமைத்து வருகிறவர் போகிறவர்களை எல்லாம் கூப்பிட்டு கறிசோறு பரிமாறுவார்கள்..தீபாவளி அன்று மட்டும் எல்லாருடய வீடு தண்ணீர் குழாய்களிலும் காலையில் இருந்து எண்ணெய் தேய்த்து குளிக்க எதுவாக எண்ணையும் தண்ணீரும் மாற்றி மாற்றி வர ஆரம்பித்து விடும்..அன்னிக்கு மட்டும் எல்லா திரை அரங்குகளிலும் ரசிகர் மன்றகாட்சிகள் இலவசம் தான்..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இதுபோதும் என்று நினைக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------- பேராண்மை படம் பார்த்தேன்..சத்தியமாக தியேட்டரில் இல்லை.எதோ ரஷ்ய மொழியோ இல்லை ஜெர்மனி மொழி தழுவல் என்கிறார்கள்..எனக்கு என்ன தெரியும்..தமிழில் இதுப்போல் ஒரு படத்தை இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்..திரைக்கதையில் பெரிய தொய்வு என்றாலும் மிக வித்தியாசமான முயற்சி..இயக்குனர் முதல் அனைவரும் கடுமையாக உழைத்து இருப்பார்கள்..ஏன் என்றால் படம் முழுவதும் மலையும் அதை சார்ந்த இடங்களில் மட்டுமே எடுத்து உள்ளனர்..அயங்காரின் முதல் உருப்படியான படம்.ஜெயம் ரவிக்கும் இப்படம் ஒரு மைல்கல். அவரும் கடுமையாக ஹோம் வொர்க் செய்து இருப்பார்.வாய்ஸ் மாடுலேஷன் முதற்கொண்டு கவனம் செலுத்தி இருக்கிறார்..வித்யாசாகர் பாடல்களை 'இயற்கை' அளவிற்கு போட்டு கொடுத்து இருந்தால் கூட படம் இன்னும் பெரிய அளவில் பிக்-அப் ஆகி இருக்கும்..ஜனநாதன் தான் சொல்ல வந்த 'கருத்து' ஓவர் டோசாக போகாமல் பார்த்துக்கொண்டு மற்ற ரசிக்கும் அம்சங்களையும் சேர்த்து படத்தை தருவார்..(உதா - ஈ )..இந்த படத்திலும் அதே மாதரியே முயற்சி செய்து எங்கயோ கோட்டை விட்டு இருக்கிறார்..இருந்தாலும் ரசிக்கலாம்..

-----------------------------------------------------------------------------------------------------------------


ஒரு ஜோக்..

ஒரு வெள்ளைக்கார சுற்றுலாப்பயணி டெல்லியை சுற்றிப்பார்க்க வருகின்றார்.

ஒரு 'கைட்'டை அழைத்துக்கொண்டு முதலில் தாஜ்மஹால் செல்லும் அவர்..
அந்த கைட்க்கிட்ட "இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆச்சு" என்று கேக்க..

"சுமார் 200 ஆண்டுகள் ஆனது".. கைட்

"எங்க ஊரா இருந்தா இதை 40 வருடத்திலேயே கட்டி முடித்து இருப்போம் என்ன ஊரோ இது"..வெள்ளைக்காரர்.

அதன்ப்பிறகு இருவரும் செங்கோட்டை செல்ல அங்கயும் அந்த வெள்ளைக்காரர் இதே கேள்வியை அந்த கைட்க்கிட்ட கேக்க..


"50 ஆண்டுகள் ஆனது" என்று கைட் சொல்ல..

மறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் "எங்க ஊரா இருந்தா இதை ஐந்து வருடத்தில் முடித்து இருப்போம் என்ன சோம்பேறி மக்களோ நீங்கள்"..என்கிறார்.

கடைசியாக இருவரும் குதூப் மினார் செல்கின்றனர்.

மறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் "இதை முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது".?

"நேத்து நான் இந்த இடத்துக்கு வந்தப்ப கூட இந்த இடம் காலியா தான் இருந்தச்சு..இன்னிக்கு தான் இது இந்த இடத்துல இருக்கு"..கைட்.

"....?!" ..வெள்ளைக்காரர்.

Thursday, October 22, 2009

அன்று ஒரு இரவில்..

சிவா தன் கையில் பிடித்து இருந்த லார்ஜ் வோட்காவை போதையில் சரிந்து இருந்த கண்களால் பார்த்துக்கொண்டு இருந்தான்..

மேலே சுழன்று கொண்டு இருந்த அலங்கார மின் விளக்குகள் அங்கே சுற்றி இருந்த மனிதர்களை இன்னும் பல வண்ணங்களில் காட்டியது.

துபாய்க்கு டெபுடேஷனில் வந்ததில் இருந்து சிவா தனியாக பார்ஃக்கு வருவது இதான் முதல் முறை.எப்பொழுதும் கம்பெனி கொடுக்கும் விஷ்ணு இந்த முறை விடுமுறைக்கு இந்தியாவில்.
முதல் வெளிநாட்டு பயணம்..தப்பு செய்ய அதிக சந்தர்ப்பம் இருந்தும் தடுத்த ஒரே விஷயம் காதல் மனைவி ஸ்வேதா.கல்யாணத்திற்கு பின்பு தான் அதிகம் காதலிக்க தொடங்கி இருந்தான்.

இங்கு வந்த எட்டு மாத காலங்களில் ஒரு நாள் கூட சிவாவோ இல்லை அவளோ ஃபோன் செய்யாமல் இருந்தது இல்லை..இப்பொழுது தான் புதுசாக ஒரு MNC கம்பெனியில் சேர்ந்து இருக்கிறாள் என்று ஸ்வேதாவின் நினைவுகளை மேலும் வார்த்தைப்படுத்த முடியாமல் கலைத்தது சிவாவின் எதிரே சற்று நேரத்திற்கு முன் வந்து அமர்ந்த ஒரு இளமங்கையின் செயல்.

சிவாவை நோக்கி தான் எதோ சைகை செய்தாள்..

"if u don mind, Can u buy some drink for me "..அவள்.


"ya..Sure "..சிவா.

அவன் நிலை தடுமாறி அவனை அறியாமல் வாயில் இருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்..

ரஷிய பெண் சாயல்..பார்த்தவுடன் கிறங்கடிக்கும் அழகு..கண்டிப்பாக carl girlஆக தான் இருக்க வேண்டும்..ஏன் என்றால் அவர்கள் தான் பேச்சை இதே மாதிரி ஆரம்பிப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த பொழுதே அதை உறுதிப்படுத்தும் விதமாக..


"Do u need a company for this Night"..என்று சிவா வாங்கி தந்த வோட்காவை பருகியப்படியே கேட்டாள்..

அது வரை அவனுக்கு அந்த எண்ணம் இல்லாவிட்டாலும் ஒரு சின்ன சபலம் தட்டியது..
விஷ்ணு உடன் இல்லாமல் ஃபிளாட்டில் அவன் மட்டும் தனியாக இருந்ததை எண்ணிய பொழுது ஆசை-சபலம் பல மடங்கு கூடி இருந்தது..

மறுபடியும் காதில் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள்..


"Do u need a company for this Night"..

"yaa..Wait"..சிவா.

உள்மனம்.."டேய்..ஸ்வேதா, காதல், கலாச்சாரம்" என்று பல குறிச்சொற்களை அலறிக்கொண்டு இருந்தது..இருந்தாலும் "டேய்..ச்சீ..காமத்தில் என்னா இருக்கு..நீயும் ஆசைய மறைக்க கலாச்சாரம்னு முகமூடிய போட்டுக்க பார்கிறியா என்ன.. வெட்க்கபடாம இழுத்துட்டு போ" என்று சிவாவுக்கு உள்ளே இருந்த தத்துவ ஞானி ஃபுல் போதையில் உளறிக்கொண்டு இருந்தான்..

எதோ தப்பு பண்ண போறோம்னு அவன் உள்மனம் நினைத்துக்கொண்டு இருந்தப்பொழுதே மொபைல் அலறியது..

"ஸ்வேதா காலிங்.."

என்ன ஆச்சு மணி நைட்டு 12 ஆகுது..இந்தியாவில் 1:30 ..இந்த சமயத்தில் என்று நினைத்துக்கொண்டே ரஷியாக்காரியிடம் "ஒரு நிமிஷமுன்னு" சைகை மட்டும் காட்டிவிட்டு வெளியே வந்தான்..

"யே என்ன ஆச்சு..இந்த சமயத்தில் Anything serious"..சிவா.

"இல்லை..அது எல்லாம் ஒன்ணும் இல்லை..தூக்கம் வரல அதான் பண்ணேன்.."..ஸ்வேதா.

"ஏன்..என்ன ஆச்சு.."

"நீ எப்படா வருவா..ஊருக்கு.."..ஸ்வேதா.

"அதான் தெரியும்ல..இன்னும் நாலு மாசம் பொறுத்துக்கோ..ஓடியந்த்ருவேன்..இன்னும் நீ விஷயத்தை சொல்லலை.."..

"இல்லை சிவா..அதான் சொல்லி இருக்கேன்ல என் டீம்ல வேலை செய்யுற பார்த்தி.."

"ஆமாம் அவனுக்கு என்ன உடம்பு எதாச்சும் சரி இல்லையா..அதான் இவளோ நேரம் அந்த வருத்தத்துல தூக்கம் வரலையா உனக்கு.."..சிவா.

"யே..ஓத வாங்குவ..அது எல்லாம் ஒன்ணும் இல்லை.."..ஸ்வேதா.

''ம்ம்..பின்ன''..

"இல்லை..நல்லா தான் பேசிக்கிட்டு இருப்பான்..திடிர்னு இன்னிக்கு சினிமாக்கு போலாமான்னு கேக்குறான்..கண்டிப்பா அவன் பார்வை வேற அர்த்தம் சொன்னுச்சு "..ஸ்வேதா.

"......".. சிவா..

''ரொம்ப பயமா இருக்கு..அவன் கேட்டதால சொல்லல..எதோ ஒரு தெளிவு இல்லாம இருக்கு..நான் எதையோ சமிபமா ரொம்ப மிஸ் பண்ணுறேன்..கண்டிப்பா அது நீ தான்.. இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரியுல..வேலையே விட்டுடலாம்னு பாக்குறேன்.."

"யே..நீ தான் போர் அடிக்குது வேலைக்கு போறேன்னு சொன்ன..அதனால தான் நான் ஓகே சொன்னேன் ஸ்வெத்..மத்தப்படி அது உன் இஷ்டம் தான்..ஆனா ஒன்னு உன் மேல எனக்கு உன்னை விட நிறையா நம்பிக்கை இருக்கு..சோ..எதை பத்தியும் அலட்டிக்காம தூங்கு.."

"ம்ம்..முடிஞ்சவரைக்கும் ஊருக்கு சீக்கிரம் வர பாருடா.."..ஸ்வேதா.

"கண்டிப்பா..குட் நைட்"..சிவா.

''குட் நைட்"..ஸ்வேதா.

போதை தெளிந்தது போல் இருந்தது..எதையோ மறந்தவனாக பார் உள்ளே போனான்..க்ளாசில் இன்னும் இரண்டு சிப் வோட்கா பாக்கி இருந்தது அதை மட்டும் அடித்து விட்டு சுற்றி முற்றி பார்க்காமல் காதில் விழுந்த வார்த்தைகளை வாங்காமல் சிவா ஃ பிளாட்டை நோக்கி நடையை கட்டினான்.

Sunday, October 11, 2009

கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் சினிமா, கொஞ்சம் கவிதை-3

கொஞ்சம் சீரியஸ் :

இனிமேல் இவர்களை பற்றி எழுத கூடாது என்று இருந்தேன் ஆனால்முடியவில்லை..தன்னை அறிவாளிகளாக மட்டுமே முன்னிறுத்துவதிலும், தமிழ்சமுகத்தின் மீது எப்பொழுதும் குறை சொல்லி கொண்டு இருப்பதிலும்இவர்களுக்கு என்ன திருப்தி என்பது கொஞ்சம் மனோதத்துவரீதியாக யோசித்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் மட்டும் என்னால் சொல்லமுடியும் ஆனால் அது இப்பொழுது வேண்டாம்..

சீரியஸ் ஆக காரணம் ஓன்று:

தேக்கடியில் நடந்த படகு விபத்துக்கு காரணம் அங்க சுத்தி இங்க சுத்தி இப்ப அந்தஅறிவாளிகள் காரணம் சொல்லுவது அது சென்னையில் தயாரிக்கப்பட்ட படகுஎன்றும் அதனால் தான் அப்படி ஆச்சு என்றும். கடைசியாக "ம்ம்ம்..தமிழ்நாட்டுல இருந்து போட் அனுபிச்சு சாக அடிச்சிட்டிங்க"..என்றுஎன்னிடமே சொல்லுகிறார்கள்..

காரணம் ரெண்டு:

எதோ ஒரு விஷயத்தை நண்பர் அறையில் நானும் அவரும் விவாதித்து கொண்டு இருந்தப்பொழுது
அங்கே இருந்த அறிவாளி ஒருவர் சம்பந்தமே இல்லாமல் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டு அதற்கு அவரே சொன்ன பதில்.."இதுஎல்லாம் எங்கே உங்களுக்கு தெரிய போகிறது..அது எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ள இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் ஆகும்".. என்றார்..இத்தனைக்கும் அவர் கேட்ட கேள்வி ரொம்ப சாதரணமான ஒரு கேள்வி தான்..

எங்கே இருந்து இவர்களுக்கு நம் மீது இப்படி ஒரு எண்ணமும் காண்டும்..நான் அறிவாளிகள் என்று சொல்லுவது யாரை என்பது புரிந்து இருக்கும்..நான் பார்த்த வரையில் நிறைய அறிவாளிகளுக்கு இதேப்போல் எண்ணம் இருக்கின்றது..

சத்தியமாக தனிப்பட்ட முறையில் எந்த காண்டும்அவர்கள் மேல் எனக்கு இல்லை..நல்லவிதமாகவும் பழகுகிறார்கள்..ஆனால் எல்லா சமயத்திலயும் வாலை நிமிர்த்த முடிவதில்லை.

கொஞ்சம் சினிமா:
http://loyalkng.com/wp-content/uploads/2009/08/shiningshelleymes.jpg


The shining .."ஹாலி பாலி" எழுதிய விமர்சனம் அப்பொழுதே படம் பார்க்க தூண்டியது.ஆனால் இப்பொழுது சமிபத்தில் தான் பார்த்தேன்.."டேய்.. Horror ஃபிலிம்னா இப்படி தாண்ட இருக்கணும்" என்று சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நெத்தியடி அடித்து இருக்கிறார் அதன் இயக்குனர் அப்பொழுதே(1980) . இது வரை நீங்கள் எது மாதிரி ஹாரர் அல்லது த்ரிலர் படம் பார்த்து இருந்தாலும் கண்டிப்பாக இது வேறு ஒரு வகையான அனுபவத்தை உங்களுக்கு கொடுத்து விடும்..காட்சிகள் ஒவ்வொன்றும் ஒளிப்பதிவும் மற்றும் ஒலிப்பதிவும் நம்மை இணைந்து கொண்டு மிரட்டி இருக்கின்றன...அருவெறுக்கதக்க காட்சிகள் எதுவும் இல்லாமலேயே மூன்று பிரதான கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் நம்மை மிரட்டி இருப்பது பிரமிப்பை ஏற்படுத்துக்கிறது. படம் பார்க்கும் நமக்கும் உளவியல்ரீதியாக அந்த திரைக்கதை அமைப்பு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி அந்த கதையின் ஊடே அழைத்து செல்வது தான் இந்த படத்தின் வெற்றி..
அந்த சிறுவன் அந்த "சகோதிரிகளை" பார்ப்பது, நம் புருஷன் விடிய விடிய அப்படி என்ன தான் உக்கார்ந்து டைப் பண்ணிட்டு இருக்கான் என்று அந்த பெண்மணி அந்த பேப்பரை பார்ப்பது(சில பதிவர்கள் வீட்டுல கூட இதே மாதிரி நினைக்க வாய்ப்பு உண்டு), அந்த சிறுவன் RedruM என்ற வார்த்தையை கண்ணாடியில் பார்த்து கொண்டே அலறுவது இப்படி நிறையா காட்சிகள் அட்டகாசம் குறிப்பாக க்ளைமக்ஸ்.

கொஞ்சம் கவிதை:

நான் மீட்டிய வீணையில் அன்று மட்டும்
அபஸ்வரம் இல்லாமல் நல்ல ஸ்வரம்..
உற்றுபார்கையில் வீணை கம்பிக்கு இடையில்
உன் முடி கற்று..


Monday, October 5, 2009

வெயில்..


sun-rays-coming-out-of-the-cloudfs-.jpg image by salviaforme

வெயிலோடு உறவாடி வெயிலோடு விளையாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே..என்ற பாடல வரிகள் தான் நியாபகத்தில் வருகின்றது..

எனக்கு நியாபகம் தெரிந்து சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களின் வெப்பத்தை, அந்த வெயிலை சிறுவனாக இருந்தப்பொழுது முதன்முறையாக அனுபவித்தது மார்கழி மாத குளிரில் என் அப்பாவின் பின்னால் மிதிவண்டியில் திரும்பி அமர்ந்துக்கொண்டு அந்த வெயில் என் மேல் முழுவதும் படும்ப்படி பயணிப்பேன்..குளிரையும் போக்கி என் உடம்பில் உற்சாகம் ஊட்டியது உன் வெப்பம்..

கையில் பூதகண்ணடியை வைத்து கொண்டு அதன் கிழே ஒரு காகிததையும் வைத்து உன்னை(சூரியனை) நெற்றியில் கை வைத்து மறைத்தப்படி வெகுநேரம் உற்று நோக்கி கொண்டு இருப்பேன் காகிதம் பொசுங்கும் வரை..உன் ஆற்றல் கண்டு வியந்து இருக்கிறேன்..

நண்பர்களோடு குளத்தில் குளித்து விட்டு ஆற்றில் ஓரத்தில் இருக்கும் மணலில் உருண்டு பிரண்டு படுத்து இருப்போம் அப்பொழுது உன் வெப்பத்திற்கு உடம்பு ஏங்கும்..

என் தம்பி பிறந்தப்பொழுது என் அம்மா அவனை குளிப்பாட்டியப்பின் அவனை துடைத்து விட்டு நான் அவனை கையில் ஏந்த கேக்கும்ப்பொழுது.."கொஞ்சம் நேரம் இருடா" என்று சொல்லிவிட்டு அவனை உன் வெப்பத்தில் காட்டியப்பொழுது..உன் ஒளி அவன் மீது பரவி அவனை இன்னும் பிரகாசமாக காட்டியது கூட நியாபகத்தில் உள்ளது..

ஒரு நல்ல மழைக்காலத்தில் கொடைக்கானலில் காலையில் அடித்த சிறிய சாரலில் உன் கதிர்கள் வானவிலின் ஊடே வந்து அந்த ஊரை அந்த நேரத்தில் பல வண்ணங்களில் காட்டிய காட்சி இன்றும் நினைக்கையில் எனக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும்..அந்த கணங்களில் உன்னை முழுமையாக நேசித்தேன்..


பேருந்தில் செல்கையில் மரங்கள் படர்ந்து இருக்கும் சாலையில் மரங்களின் ஊடே மறைந்து மறைந்து வரும் உன் வீச்சினை வெகு நாட்கள் ரசித்து இருக்கிறேன்..

கொளுத்தும் வெயிலில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடும் பொழுதும்,

வீட்டில் இழுத்து போர்த்திக்கொண்டு படுத்து இருக்கும் நேரத்தில் நீ ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் பொழுது,

சென்னை மாநகரத்தில் அடிக்கும் வெயிலில் வேலை தேடி அலைந்தப்பொழுதும்,

இந்த பாலைவன தேசத்தில் நுழைந்தப்பின் ஏனோ என்னை அறியாமல் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க தொடங்கினேன் வெயிலே..

பிரிவின் துயரத்தால் என் கண்களில் இருந்து வழிய தொடங்கும் முதல் சொட்டு கண்ணீரை கூட உன் உக்கிரத்தால் தன்வசம் இழுத்துக்கொள்ளும் உன் சூடு இப்பொழுது எல்லாம் என் மேலே பட்டாலே அருவெறுப்பாக இருக்கின்றது..

என் நாட்டில் நான் உன் முலம் உணர்ந்த உணர்வுகள் இன்று எனக்கு இங்கு வேறு ஒரு விதமாக..

அதற்கு சாட்சி நீ என் அறையில் பாய்ச்சும் வெளிச்சம் பிடிக்காமல் நான் இன்று அடித்து சாத்திய ஜன்னல்கள்..


Thursday, October 1, 2009

மனசாட்சியின் குரல்..


நம்ம எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசுவது என்பது ரொம்ப கஷ்டம்..ஆமாம் அதுவும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க கிட்ட சில விஷயங்கள் அவங்க கேக்கும் பொழுது இல்லை எதாவது ஒரு விஷயத்தை பத்தி விவாதிக்கும் பொழுது நம்ம 'அவங்க மனசு கஷ்டப்பட பொழுதோ' இல்லை 'நம்ம பத்தி எதாவது தப்ப நினைச்சிக்க போறங்கனு' என்று எண்ணி சில "சின்ன சின்ன பொய்கள்" தேவை இல்லாமல் சொல்ல வேண்டியது வரும். ஆனா நம்ம மனசாட்சி சும்மா இருக்காது பட்டுன்னு அறையிற மாதிரி எதாவது நம்மகிட்ட சொல்லும்..அதாவது இப்படி கூட சொல்லலாம் "மனசு ஒன்னு சொல்லும் நம்ம ஒன்னு சொல்லுவோம்"..உதாரணத்திற்கு ஒரு "மொக்கை" பதிவு படிப்போம்..நம்ம மனச்சாட்சி "எப்பா என்னடா இப்படி மொக்கை போட்டு இருக்கானு".. அப்படின்னு சொல்லும். இருந்தாலும் வேற வழி இல்லாமல் "ஆஹா, அருமை,அட்டகாசம்,பின்னிடிங்க"..அப்படின்னு சொல்லிட்டு வருவோம்..

அதுப்போல் எனக்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளை தான் இங்கே தொகுத்து உள்ளேன்:

வீட்டுல அப்பா அம்மாவோடு பேசிக்கொண்டு இருக்கையில் ..

அம்மா ..:"வினோத் உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு முடிவு பண்ணியாச்சு"
நான்.."அதுக்குள்ள என்னமா அவசரம் பொறுமையா பார்க்கலாம்ல''..

மனச்சாட்சி.."எப்பா இப்பயாச்சும் அந்த எண்ணம் வந்துச்சே..சீக்கிரம் அதை பண்ணி தொலைங்க.."

அப்பா.."வினோத் பொண்ணு அமைஞ்சிருச்சினா அடுத்த வருஷத்துக்குள்ள கல்யாணம் உனக்கு பண்ணிர்லாம்னு இருக்கோம்.."
நான்.."அப்பா அப்படி எல்லாம் ஒன்னும் அவசரம் இல்லை இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.."

மனசாட்சி.."அது எல்லாம் நீங்க அடுத்த மாசமே பண்ணி வச்சாலும் நான் பண்ணிக்க தயார் தான்.."

இதே மாதிரி நண்பர்களிடம் பேசுறப்ப கூட மனசாட்சி ஏடாகூடமா குறுக்கிடும்..

உதாரணத்திற்கு நம்ம கிஷோர் கூட பேசிக்கிட்டு இருக்கன்னு வையுங்களேன்..

"மச்சான் கண்ணாடி எப்படிடா இருக்கு புதுசா வாங்குனேன்"..கிஷோர்.
"மச்சான் சூப்பர்டா உனக்கு ஏத்த மாதிரியே இருக்கு"..நான்.

"த்தூ..இது ஒரு கண்ணாடி..அதை வேற "மனசாட்சியே" இல்லாமல் மாட்டிக்கிட்டு வந்து கேக்குறியேடா"..மனச்சாட்சி.

"மச்சான் இதை போட்டுக்கிட்டு போய் தான் தஞ்சாவூர் வரைக்கும் போயிட்டு

என் ........ பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்"..கிஷோர்.
"மச்சி..இந்த கண்ணாடி ஒன்னு போதும் உன் ....... மயங்கி விழுந்த்ரும்''...நான்.

"டேய்..இதை போட்டுக்கிட்டு நீ பக்கத்து தெரு வரைக்கும் போனாலே கல்ல விட்டு அடிப்பானுங்க இதுல தஞ்சாவூர் வரைக்கும் போறியா.."..மனசாட்சி.

"மச்சான் நீயும் தஞ்சாவூர் வரில.."..கிஷோர்.
"டேய்..நான் வரமலயா..கண்டிப்பா வரேன்டா நம்ம நட்புக்காக இதை கூட பண்ண மாட்டேனா என்ன"..நான்.

"நாயே நாயே ..நீ வாங்கி தரப்போற ரெண்டு பீர்க்கு அவசரம் என்ன என்ன சொல்ல வேண்டி இருக்கு பாரு.."..மனச்சாட்சி.

இப்ப இங்க எதாவது ஒரு பதிவர் மற்றும் நண்பர் கூட போன்ல பேசிக்கிட்டு இருக்கன்னு வையுங்க..

உதாரணத்திற்கு நம்ம கலை மாதிரி ஆளுங்க கூட...

"டேய்..ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் படிச்சிட்டு வோட்டு போட்டுரு"..கலை.
"ஹை..போட்டுடிங்களா..எப்பா உங்க பதிவை படிக்காம ரொம்ப போர் அடிச்சது..உடனே படிச்சிடுறேன்.."..நான்..

"ஆரம்பிச்சிடியா உன் இம்சைய..கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன் அது பொறுக்கலையா இவனுக்கு.."..மனச்சாட்சி.

படித்து முடித்தவுடன் மறுப்படியும் போன்..

"டேய்..அந்த கடைசி பத்திய படிச்சியா அதான் அட்டகாசம் இல்லை.."..கலை.
"ஏங்க..உங்களலால மட்டும் எப்படிங்க இப்படி எல்லாம் எழுத முடியுது..சூப்பருங்க"..நான்.

"யோவ்..முதல் பத்திய படிக்கறுத்துக்கே மூக்கால அழுதேன்..இதுல கடைசி பத்தி வேறயா..போய போ அழுதுருவேன்.."..மனச்சாட்சி.

பதிவர் சந்திப்புல கூட நம்மையும் மீறி சில சமயம் மனசாட்சி பேசிடுது..

"வினோத் வடை சாப்பிடிருயா"..பிரபல பதிவர்.
"இல்லை வேணாம்ங்க..இப்ப தான் சாப்டேன்.."..நான்.
நீட்டின வடை டப்பாவை எடுத்து தன் பக்கத்தில் சட்டென்று அந்த "பிரபலம்" வைத்து கொள்ளும்.

"ஏங்க..சும்மா பேச்சிக்கு சொன்ன உடனே வடை டப்பாவ எடுத்து பக்கத்துல வச்சிக்கிறதா..அட்லீஸ்ட் ஒரு வடயாவது தாயா..வந்ததுக்கு வடயாவது மிஞ்சட்டும்"..மனச்சாட்சி.

"இப்ப எல்லாம் அதிகமா சாப்பிடிறது இல்லை.."..பிரபல பதிவர்.
"ஆமாங்க ஆளை பார்த்தாலே தெரியுது ரொம்ப இளைச்சு போய்ட்டிங்க.."..நான்.

"வடை டப்பாவ ரவுண்டு கட்டி அடிச்சிட்டு..பேசுற டயலாக் பாரு..நல்லா இருங்கப்பு.."..மனச்சாட்சி.