Thursday, December 24, 2009

முற்பகல் செய்யின்..

டிசம்பர் 23 காலை 6 மணி :

ஒரு நாளிதழ் : ஒரு பெண், ஒரு வாலிபர் அடித்து கொலை..கள்ளகாதல் காரணமா..சென்னையை சேர்ந்த வாலிபர் கைது.

டிசம்பர் 22 மாலை 6 மணி :

கேமராக்களில் இருந்து வெளிப்பட்ட பிளாஷ்க்கள் என் முகத்தில்ப்பட்டு கண்களை கூச செய்தன..உண்மையில் கண்களை மட்டும் அல்ல..விதியின் செயல் என்று கூச்சப்படாமல் என்னால் பொய் சொல்லமுடியவில்லை..விருப்பபட்டு செய்த காரியத்தின் விளைவுகள் விபரிதமாக போகும்பொழுது விதியின் மீது பழியை போட்டு செல்ல நான் விரும்பவில்லை.. ஆம் இது நான் விருப்பபட்டே செய்த கொலைகள் தான்..அதற்க்கான தண்டனையை அனுபவிக்கவும் தயாராகி விட்டேன்.

டிசம்பர் 22 மதியம் 12:30 மணி :

எதிர்ப்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த என்னை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க வாய்ப்பில்லை..கற்பனை கூட செய்துப்பார்க்க முடியா காட்சியை அன்று நேரில் கண்டதும் என்னுள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை கொலைவெறி..கையில் அப்பொழுது கிடைத்த அந்த இரும்பு தடியால் அவனை கண்மூடிதனமாக தாக்கினேன்..அவன் ரத்தவெள்ளத்தில் மிதக்கும் வரை..அடுத்து என் கோபமும் வெறியும் என் மனைவியின் மேல் சென்றது..உறைந்துப்போனஅவளை பேசுவதற்கு கூடவிடாமல் அவளையும் தாக்கினேன்..நிமிடங்கள் கரைந்தது..அங்கேயே மணிக்கணக்காக உக்கார்ந்து இருந்தேன்..போலீஸ் வந்து என் தோள்களை உலுக்கியப்பொழுது தான் மறுபடியும் சுயநினைவு வந்தது.

டிசம்பர் 10 இரவு 11:30 மணி :

ரொம்ப நேரம் என் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்..அவளுக்கு எடுத்து விளக்கினேன்..அவள் புரிந்துகொண்டதை போல் காட்டிகொண்டாலும் அவளுடுய செய்கைகள் 'நீ மட்டும் என்ன யோக்கியமா' என்பதைப்போல் தான் அமைந்து இருந்தன. டாக்டர்க்கிட்ட போனது கூட அந்த பையன் சொல்லி தான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. இப்பொழுதுகூட அந்த பையனையும்,இவளையும் தியேட்டரில் பார்த்ததை பற்றி என் நெருங்கிய நண்பன் சொல்லாமல் போயிருந்தால் எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை..குழப்பத்துடனேயே படுக்க சென்றேன்.

நவம்பர் 15 மதியம் :

தி.நகரில் அன்று சவாரிக்காக நின்றுகொண்டு இருந்தப்பொழுது தான் ஏரியா டாக்டரை எதிர்ப்பாராமல் சந்தித்தேன். சவாரியின் பொழுதே அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது..நான் இதுவரையில் 'எதிர்ப்பாராத' நடந்த சம்பவம் என்று நினைத்தது எதிர்பாராமல் நடந்தது இல்ல..அவள் வேண்டுமென்றே செய்துக்கொண்ட கருக்கலைப்பு தானென்று.இதைப்பற்றி அவளிடம் கேக்கலாமா.
ஒருவேளை குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டாளா..எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..ஆனால்..இதைப்பற்றி அவளிடம் கேக்கவேண்டாம் என்று மட்டும் முடிவு செய்தேன்..நான் அன்று செய்ததை கண்டிப்பாக சொல்லிகாட்டுவாள் என்பதால்.

நவம்பர் 2 இரவு 8 மணி :

வீட்டுக்குள் நுழைந்தபொழுது அழுதுக்கொண்டு இருந்தாள்..என்னவென்று கேட்டபொழுது எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது அவள் 'கலைந்துவிட்டது' என்று சொன்னபொழுது..கொஞ்சம் நேரம் கழித்து அவளை சமாதானப்படுத்தினேன்..ஒருவேளை அன்று செய்த செய்கையின் வினையோ என்றுகூட யோசிக்க தோன்றியது.

செப்டம்பர் 4 :

அன்று தான் அந்த வீட்டுக்கு புதுசாக குடியேறி இருந்தேன்..வீடு என்று சொல்லமுடியாது வீட்டில் ஒரு பகுதி..நானும் அவளும் என்பதால் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிகொள்ளலாம் ஒன்றும் பிரச்னை இல்லை..மேல்வீட்டை மூன்றாக பிரித்து வாடகை விட்டு இருந்தனர். இன்னொரு குடும்பமும் இருந்தது. அப்புறம் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பையன் ஒருவனும் தங்கி இருக்கிறான். அவனே வந்து முதல்நாள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். இடம் ஒன்றும் பிரச்னை இல்லை என்று தான் தோன்றுகிறது.

ஆகஸ்ட் 29 :

சென்னைக்கு வந்ததில் இருந்து இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் தெரிந்த நண்பன் ஒருவனின் அறையிலேயே கழித்துவிட்டோம்.அவனுக்கு எங்க கதை தெரியும் ஒன்னும் பிரச்னை இல்லை..அடுத்தமாதம் இந்த ஏரியாவிலியே வீடு கிடைத்துவிடும் என்று சொல்லி இருக்கான் பார்ப்போம்..எனக்கும் இந்த ஏரியா தான் ஆட்டோ சவாரிக்கு எல்லாம் வசதியாக இருக்கும்னுப்படுது.

ஆகஸ்ட் 3 இரவு 10:30 :

ரொம்பநேரம் நின்றுகொண்டு இருந்தேன் ஆரப்பாளையம் பஸ்-ஸ்டாப்பில்..நேரம் இப்பொழுதே பத்து ஆகிடுச்சு..ஒருவேளை எதாச்சும் பிரச்னை ஆகியிருக்குமோ..இருக்காது..ஒருவழியாக வந்து சேர்ந்தாள்..ஆனால் நான் எதிர்ப்பார்க்காமல் கையில் குழந்தையுடன் வந்து இருந்தாள்..அவக்கிட்ட 'நம்ம ஆரம்பிக்கப்போறது புது வாழ்க்கை, நீ எதுக்கு கையில் குழந்தையே வேற தூக்கிட்டு வந்த, புருஷனையே விட்டுட்டு வந்துட்ட அப்புறம் எதுக்கு குழந்தை வேற'.. என்று குழந்தையை பறித்தேன். அவளிடமும் எதிர்ப்பு இல்லை. இருக்குற நேரத்தில் இந்த குழந்தையை வேறு இவள் வீட்டில் எல்லாம் போய் வைத்துவிட்டு வர முடியாது என்று முடிவு செய்த நான் கொஞ்சம் கூட யோசிக்கமால் பக்கத்தில் இருந்த குப்பைதொட்டியில் யாரும் பார்க்காத மாதிரி வைத்துவிட்டு பஸ் ஏறினேன்.



Sunday, December 20, 2009

பாசில்-2

1991
முதல் தொடங்கி 2005 வரை தமிழில் பாசில் இயக்கிய படங்களில் வெற்றியடைந்ததுஒரே படம் தான். மலையாளத்தில் பத்து படங்களை இந்த இடைப்பட்டகாலங்களில் இயக்கி உள்ளார். தெலுங்கில் கில்லர் என்ற படத்தை நாகர்ஜுனவை வைத்தும் இயக்கினார். ஏனோ, மலையாளம் போல் அதன்ப்பிறகு தமிழில்வெற்றிப்படங்களை தரமுடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தஇரண்டு திரையுலகிற்கும் இடையில் ஏற்ப்பட்ட 'தொழில்நுட்ப' மாற்றத்தின்காரணமாக கூட அவரால் மலையாளம் அளவுக்கு தமிழில் கவனம் செலுத்தமுடியாமல் இருந்து இருக்கலாம் அல்லது நேர பற்றாக்குறை காரணமாக இருந்துஇருக்கும். அதேப்போல் பிறமொழியில் இயக்கும்பொழுது தனக்கு தமிழில்கிடைத்த சுதந்திரமும்,திருப்தியும் கிடைக்கவில்லை என்றும் கூறி உள்ளார். தமிழில் இயக்கும்பொழுது பெரும்பாலான காட்சிகளை இவர் இயக்குவதற்குமுன்பே "அந்த காட்சியை" பற்றிய ஒரு அனுமானம் இவரின் தமிழ்உதவியாளர்களுக்கு இருக்குமாம். ஏனென்றால் அந்த படத்தின் மலையாளபதிப்பை அவர்கள் முன்பே கண்டிருந்ததால். அதனால் 'தமிழில்' வேலைவாங்குவது இவருக்கு சுலபமாக இருந்தது என்று சொல்கிறார்.

ஒரு கானொளியில் குறிப்பிடும்பொழுது தமிழில் "சந்திரமுகி" படத்தை பார்த்தப்பொழுது, தான் எதிர்ப்பாராதவிதமாக "பலக்காட்சிகள்" இடைசொருகலாக இருந்தது எனவும், கதையின் அமைப்பையே சிதைத்துவிட்டது என்றும் வருத்தப்பட்டு உள்ளார். ஒருவேளை அதேபடத்தை பாசிலே 2005ல் இயக்கி இருந்தால் கூட வெற்றிப்பெற்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் "ரஜினிக்கு" ஏற்றமாதிரி படம் பண்ண கொஞ்சம் திணறி இருப்பார்.காலத்திற்கு ஏற்ற படங்களை தமிழில் இப்பொழுது தராவிட்டாலும் முன்பு தந்த படங்களின் மூலம் என்றென்றும் நம் மனதில் நிலைத்து நிற்பதே இவரின் சிறப்பு.


வருஷம் 16 ( 1989 ) :
தனது சொந்த ஊரில் ஒரு கோவில் விசேஷத்திற்காக கூடும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பையனுக்கும், முறைபெண்ணுக்கும் இடையில் நடக்கும் காதல் அதன் காரணமாக வரும் மோதல் தான் கதை என்றாலும் அதை சொன்ன விதத்தில் பாசில்க்கு மேலும் தமிழில் ஒரு மிகப்பெரிய ஹிட். சுவாரஸ்யமாக ஒரு குடும்பம் சார்ந்த படத்தை தந்து இருப்பார். கார்த்திக் மற்றும் குஷ்பு இருவருக்கும் அவர்களின் "எதிர்ப்பால் விசிறிகள்" அதிகரிக்க காரணமாக இருந்த இன்னொரு படம். இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை அங்கு வரும் "ஊர் சுற்றிகளுக்கு" வருஷம்16 வீடாகவே அடையாளம் காட்டபடுகின்றது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.


அரங்கேற்ற வேளை ( 1990 ) :
வேலைக்காக பட்டணபிரவேசம் செய்யும் ஒருவன், அவன் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டில் ஏற்கனவே தங்கியிருக்கும் பெண் இந்த மூவருக்கும் இடையில் வாழ்கைக்காகவும், பணத்துக்காகவும் நடக்கும் "ஜாலி சடுகுடு" தான் படம் முழுவதும். பணத்தின் பொருட்டு இவர்கள் மூவரும் இணைந்து பண்ணும் 'தில்லாலங்கடி' வேலை தான் படத்தின் உச்சம். இன்றளவும் டிவியில் இந்த படம் ஒளிபரப்பானால் அப்படியே உக்கார்ந்து விடுவேன். காரணம் இயல்பாக இருக்கும் நகைச்சுவை. அதுவும் வீ.கே. ராமசாமி, பிரபு, ரேவதி இணைந்து நடத்தும் 'காமெடி மேளா" பார்த்தவர்கள் உணர்த்து இருப்பார்கள். அதுவும் போதாகுறைக்கு கடைசியில் 'ஜனகராஜ்' வேறு வந்து சேர்ந்துகொள்வார். "ஆகாய வெண்ணிலவே" இன்றளவும் மறக்கமுடியாத பாடல்.


கற்பூர முல்லை ( 1991 ) :
மலையாளத்திலும், தமிழிலும் ஒன்றாக வெளிவந்த படம். உறவை அறிந்த அம்மாவுக்கும், உறவே அறியாத மகளுக்கும் இடையில் நடக்கும் கதை. அம்மாவாக ஸ்ரீவித்யா, மகளாக அமலாவும் நடித்து இருந்தனர். மறுப்படியும் ஒரு "பூவே பூச்சுடவா'' மாதிரியான முயற்சி. ரிசல்ட் வேறுவிதமாக. தமிழில் எதிர்ப்பாராத 'அடி'. வழக்கம்போல் ராஜாவின் இசை இதிலும் சுகம்.


கிளி பேச்சு கேக்க வா ( 1993 ) :
வாத்தியார் வேலை வேண்டும் என்றால் 'போனசாக' ஒரு பேய் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஊருக்கு வேலைக்கு வரும் மம்முட்டிக்கும், 'பேயாக' நடிக்கும் கனகாவுக்கும் இடையில் நடக்கும் காதலும் இடையில் ஊர் பொல்லாப்பும் தான் கதை.
இதிலும் மறுப்படியும் 'சறுக்கல்'.பாடல்கள் மறுபடியும் ஹிட்.


காதலுக்கு மரியாதை ( 1997 ) :
விஜய்க்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம். தயரித்தர்வர்களே இந்த வெற்றியை எதிர்ப்பார்தர்களா என்று தெரியவில்லை. வந்த சமயத்தில் பலப்பேருக்கு 'காதலை' தூண்டிவிட்ட படம். தமிழ்நாட்டில் அந்த சமயத்தில் காதல்வயப்பட்ட பலப்பேர் விஜயாகவும்,ஷாலினி அஜித்தாகவும் தான் வலம் வந்துக்கொண்டு இருந்தனர். கதை என்னவென்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன..அல்லது இந்த கதை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரவது உண்டா..காதல்னா இப்படி தான் இருக்கணும் என்று பல பெற்றோர்களே 'சான்றிதழ்' கொடுத்தார்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு. காதலை கண்ணியமாக சொன்ன படத்தில் இந்த படத்திற்கு எப்பொழுதும் தனி மரியாதை உண்டு. "என்னை தாலாட்ட வருவாயா" என்று எல்லோரும் ஒரு காலத்தில் இல்லை இப்பொழுதும் முனுமுனுக்கும் பாடலே இசைக்கு சான்று.


கண்ணுக்குள் நிலவு ( 2000 ) :
எதோ ஒரு பெண்ணை தேடும் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்..அவனை 'சுயநினைவுக்கு' கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பெண்.
விஜய் & ஷாலினி அஜித்..மறுப்படியும் அதே காதலுக்கு மரியாதை என்று எதிர்ப்பார்த்து சென்றவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம். கதையின் தெளிவில்லாத போக்கு ஒரு காரணம். சில பேருக்கு பிடித்து இருந்தது அதுவும் பாடல்களுக்காக. இன்றளவும் இந்த பாடல்கள் கேக்க மிக இனிமையாக இருக்கும்.


ஒரு நாள் ஒரு கனவு ( 2005 ) :
இந்த படத்தை மட்டும் நான் பார்க்கவில்லை..பார்த்தவர்கள் விருப்பபட்டால் கதை சொல்லவும். கதாபாத்திர தேர்விலேயே பாசில் தப்பு பண்ணிய படம். வேறு என்ன சொல்லுவது.


டிஸ்கி: நல்லவேளை பாசில் பத்து படத்தோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.. "கை" எல்லாம் வலிக்குது..A-Z எல்லாம் எப்படி தான் எழுதுறாங்களோ..சாமி கோவில் தான் கட்டனும்.

Wednesday, December 16, 2009

பாசில் ..(பாகம்-1 )

தமிழ் படங்களில் எத்தனை படங்கள் காதலை மையப்படுத்தாமல் நம் மனதை விட்டு அகல மறுக்கும் திரைப்படங்களாக வந்து உள்ளன என்று தெரியவில்லை. அப்படியே வந்து இருந்தாலும் ரசிக்கும் விதத்தில், ஜனரஞ்சகமாக, மக்கள் ஏற்றுகொள்ளும் விதத்தில் இருந்து ஓடிய படங்கள் குறைவு தான். அப்படி தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் காதலை மட்டும்மெயின் தீமாக எடுத்துக்கொள்ளாமல்..ஆனால் படத்தோடு நம்மை உணர்வுபூர்வமாக ஒன்றசெய்து தனக்கென ஒரு தனி பாணியை ஏற்ப்படுத்திக்கொண்டவர் 'டைரக்டர்' பாசில். மலையாளப்பட இயக்குனரான இவர் தமிழில் பிரவேசம் செய்தது "பூவே பூச்சுடவா" முலமாக. இவர் தமிழில் இயக்கிய படங்கள் முக்கால்வாசி இவரே ஏற்கனவே மலையாளத்தில் இயக்கியதாக தான் இருந்தது ஒருசில படங்கள் தவிர்த்து.ஆனால் இவர் தமிழில் அதை கொடுத்தப்பொழுது அதை தமிழ்படுத்துக்கிறேன் பேர்வழி என்று அதன் ஜீவனை கெடுக்காமல் அழகாக தமிழ் சமுதாயத்திற்கு எற்றமாதிரியே படத்தினை அளித்தார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7uRqvIn2hd0XkmQ_wVEm3yxiyte5Y_fN4X94Yiw93T8K9ONF6riJlVJsKTiqJhhHthS5d3Gz-A7BCgdULUUeKbQF8LZr16i5eckFHyWw4kwXPFe9i2UicfPLUrHlTDF7ZmYXJJHJ5XoCa/s400/fazil.jpg

அதற்கு காரணம் தமிழிலும் அவரே இயக்கியதால் கூட இருக்கலாம்..அநேகமாக எந்த தயரிப்பாளரும் அவருடுய பணியில் குறுக்கிடாத காரணத்தினால் அவரால் சுதந்திரமாக செயல்ப்பட்டிருக்க முடியும். மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் வெற்றிக்கரமாக இருந்த ஒரே இயக்குனர் இவராக தான் இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். தமிழில் அவருக்கு பிரமாதமாக எல்லாம் படங்களிலும் கைகொடுத்தவர் 'இசைஞானி' இளையராஜா( ஒரு நாள் ஒரு கனவு படம் தவிர்த்து). பாடல்கள் ஆகட்டும், பின்னணி இசை ஆகட்டும் ராஜா தனி ராஜாங்கமே நடத்தி இருப்பார். இன்று அளவும் அந்த படங்களை நம் தொலைக்காட்சியில் பார்கும்ப்பொழுது அந்த இசை நம்மை அப்படியே உருக்கும். அதே மாதிரி பாசில்க்கு என்று தனியாக ஒரு நடிகர் பட்டாளம் தமிழில் அமைந்தது அல்லது அவர் தேர்வு செய்தார். சத்யராஜ், ஜனகராஜ்
, வீ.கே.ராமசாமி இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்த நடிகர்கள் சிலர்.

மலையாளத்தில் 'மஞ்சில் விரிந்த பூக்கள்' தான் இவர் இயக்கிய முதல் படம். மோகன்லாலை அந்த படத்தின்
மூலம் அறிமுகப்படுத்தியவர்.
இன்று அளவும் இவருடுய பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சந்திரமுகியின் ரியல் வெர்ஷனான 'மணிசித்திரதாழ்' இவர் இயக்கியது தான். தமிழில் இவர் இயக்கிய படங்கள்..

பூவே பூச்சுடவா (1985 ) :

ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசப்பிணைப்பை மிக மிக அருமையாக சொன்ன படம். நகைச்சுவையோடு கலந்து அந்த உணர்ச்சி போராட்டதையும் அழகாக படமாக்கி இருப்பார். அதுவும் நதியா, எஸ்.வீ.சேகர், சார்லி, வீ.கே.ராமசாமி மற்றும் அந்த சின்ன பசங்க காமெடியில் கலக்கி இருப்பார்கள். இறுதிக்காட்சிகளில் மனம் கனத்துப்போகும். இந்தப்படத்தின் மூலம் நதியாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாசில். இதே கேரக்டரை மலையாளத்திலும் நதியா&பத்மினியே பண்ணி இருப்பார்கள். இந்த படத்திற்கு பிறகு நதியாவிற்கு தமிழில் கிடைத்த வரவேற்பு நாம் அறிவோம்.ராஜாவின் உருக்கும் இசை இந்த படத்தில் பாசில்க்கு பேருதவியாக இருந்தது.
நல்லதொரு சித்திரம்.

பூவிழி வாசலிலே (1987 ) :

தமிழில் வந்த மிகசில "திரில்லரில்" இந்த படத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு. தன் தாய் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த வாய்பேச முடியாத, காது கேளாத ஒரு குழந்தை. அந்த குழந்தையை 'எதேச்சையாக' எடுத்து வளர்க்கும் ஒருவன், அந்த குழந்தை எங்கே சாட்சியாக மாறிவிட போகிறதோ என்று அந்த குழந்தையை அவனிடம் இருந்து 'மீட்க' நினைக்கும் கொலையாளிகள். இது தான் கதை. ஆனால் அதை சொன்ன விதம்..கடைசி வரை என்ன ஆகபோகிறதோ என்று ஒரு 'பதைபதைப்பு' இருந்துகொண்டே இருக்கும். அதுவும் அந்த குழந்தையின் நடிப்பு எளிதில் மறக்க முடியாத ஓன்று.(சுஜி?!). இளையராஜாவின் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களோடு வந்து இருக்கும். இதில் சிறிதாக ஒரு காதலை சொல்லி இருப்பார் பாசில். ஆனால் கிளைமாக்ஸ்ல் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து இருக்கலாம்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( 1988 ) :

இந்த பதிவை எழுததூண்டிய படம். இன்றளவும் அந்த படத்தை பார்க்கும்பொழுது நம்மிடம் ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது .
தன் குழந்தை இறந்தப்பிறகு ஒரு சிறுமியை ஆஸ்ரமத்தில் இருந்து தத்தெடுக்கும் ஒரு பெற்றோர். அதன்ப்பிறகு அந்த சிறுமியை எதிர்பாராதவிதமா பிரிந்து சென்ற தாயை அந்த பெற்றோர்கள் சந்திக்க நேரிடும்ப்பொழுது நடக்கும் உணர்சிப்போரட்டங்கள் தான் படம்.
சத்யராஜ் முதற்கொண்டு அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் ரகுவரன் குறைந்த காட்சிகளே வந்தாலும் கலக்கி எடுத்திருப்பார் மனிதர். ஒரு நல்ல கலைஞனை சீக்கிரமாக இழந்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
இந்தப்படத்திலும் ராஜாவின் இசை நம்மை கலங்க செய்து இருக்கும்..

(தொடரும்)

Tuesday, December 15, 2009

கார்த்திகை மாதமும், ஐய்யப்ப சாமியும்..


கார்த்திகை மாதம் என்றால் என்ன நியாபகத்துக்கு வரும் கார்த்திகை தீபம், சிலருக்கு திருவண்ணாமலை, அப்புறம் கொஞ்சம் குளிரான சீதோஷன நிலை அப்புறம் மிக முக்கியமா ஐய்யப்ப சாமிகள். காய்கறி விற்பவர்கள் முதல் ஆட்டோ ஓட்டுனர் வரை, காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடனே மாலை போட்டுகொண்டு கருப்புவேஷ்டியில் வலம் வர தொடங்கி விடுவார்கள். அதுவும் "சபரிமலைக்கு" நம் தமிழ்நாட்டில் இருந்து போகும் "பக்தர்கள்" கூட்டம் தான் அதிகம். அதேப்போல் பழனிக்கு கேரளாவில் இருந்து வரும் "கூட்டம்" அதிகம்..காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான். 'ஐயப்பன்' தமிழ்நாட்டை நோக்கி அருள்பாளிப்பதும்.."பழனிமலை ஆண்டவன்" கேரளாவை நோக்கி அருள்ப்பாளிப்பதும்.
http://photos.merinews.com/upload/imageGallery/bigImage/1251565532774-swami%20ayyappa.jpg

தமிழ்நாட்டில் உள்ளோருக்கு இந்த "மாலைப்போடும்" ஆர்வத்தை தூண்டிவிட்டதில் "நம்பியாரின்" பங்கு அதிகம்.அதற்குமுன்பு எப்படி என்று தெரியவில்லை ஆனால் அவரின் தாக்கத்தினால் இந்த பழக்கம் மற்றவர்கள் இடையில் 'ஆர்வமாக' பரவியது.இதில் "உண்மையில்" பக்தியோடு 'மாலை' போடுபவர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை.ஆனால் வேற எதோ ஒரு காரணத்திற்காக மாலை அணிபவர்கள் அதிகம். வீட்டில் கிடைக்கும் "நானும் கடவுள்" என்ற "அந்த" பிம்பத்திற்கு கிடைக்கும் மரியாதை, அதிகமாகி போன "கெட்டபழக்கத்தை" தற்காலிகமாக ஒரு மண்டலத்திற்கு விட்டுவிடுவதால்..யப்பா நம்ம ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை..நம்மாலும் இந்த பழக்கத்தை நிறுத்தமுடியும் என்ற எண்ணத்தின் முலம் கிடைக்கும் அந்த நிம்மதி(நான் இதுவரை மாலை போட்டதில்லை), குறிப்பா நம்ம "அந்த சமயத்தில்" யார் மீது வேணாலும் அதிகாரம் செலுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை. இப்படி பல காரணங்கள் பலப்பேருக்கு. ஆனாலும் மாலை போட்டுக்கொண்டும் சிலபேர் "காமெடி" பண்ணுவார்கள்..கல்லூரி படிக்கும்ப்பொழுது 'மாலை அணிந்த' என் நண்பன் இன்னொரு நண்பனை திட்டுவதற்கு என்னை கூப்பிடுவான்.

உண்மையில் அந்த "ஒரு மண்டலத்தில்" நம் பின்ப்பற்றும் அந்த ஒழுக்கமான நடைமுறைகள் தரும் எண்ணங்கள், அதன்முலம் மாறும் நம் அன்றாட அமைப்பு..அதை நம் "மாலையை" கழட்டி வைத்தபின்பும் "அப்படியே" தொடர்வது தான் கான்செப்ட்.ஆனால் "ஃபாஸ்ட் புட்" கலச்சரம்ப்போல் கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் மாலை அணிந்துகொள்கிறோம். இந்த "பழக்கவழக்கங்களை" கூட விட்டு தள்ளுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். உண்மையான "கடவுள்பக்தி" என்பது நம் மற்றவர்கள் மீதும் செலுத்தும் அன்பே( அன்பே சிவம்)..இந்த "அன்பே சிவம்" மேட்டர் மாலைப்போடும் காலகட்டங்களில் மட்டும் அல்ல "பக்தியை" ஆராதிக்கும் எல்லோருக்கும் எல்லா காலகட்டங்களிலும் பொருந்தும். சிலப்பேர் "நாத்திகர்களாக" ஆவதற்கு "கடவுள்" என்ற ஒன்றின் மீது நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம் என்றால்.."பொருள்ப்பித்து" பிடித்து அன்பில்லாமல் திரியும் சில "பக்திமான்களின்" செய்கையும் இன்னொரு காரணம். எதுக்கு இந்த "அன்பே சிவம்" மேட்டர் சொல்லுறேன்னு பாக்குறிங்களா..சொல்லுறேன்..

இந்த "ஐயப்ப சாமிகளில்" பெரும்பாலான மக்கள் தங்கள் தற்காலிமாக ஏற்றுக்கொண்ட அந்த "கதாப்பாத்திரத்தின்" காரணமாக எப்பொழுதும் 'உர்ரென்று' திரிவது, எதாவது ஒரு விஷயம் மற்றவர்கள் "சொதப்பினாலும்" மாலைபோட்ட காரணத்தை சாக்காக வைத்து அவர்கள் மீது எரிந்துவிழுவது..பெரும்பாலும் இந்த "இருமுடி" கட்டும்ப்பொழுது இந்த 'குருசாமிகள்' பண்ணும் ஆர்ப்பாட்டம் இருக்கும் பாருங்கள்..கண்டிப்பா எதாவது ஒரு கோவிலில் பார்த்து இருப்போம்..என்னா இதெல்லாம்.."அன்பா இருங்க..சகஜமா பழகுங்க"..இதான் "அந்த நாட்கள்" நமக்கு போதிக்கும் முக்கியமான விஷயம்..அதுவும் "அரசு அலுவகங்களில்" மாலைபோட்டு கொண்டும் 'கை' நீட்டுவர்..மற்ற நாட்களில் "கை" நீட்டினால் தவறில்லையா என்று கேக்ககூடாது..அந்த சமயத்தில் அந்த "ஒழுக்கமான வாழ்க்கை" கொடுக்கும் அனுபவம் தான் நமக்கு பாடம்..அதன்ப்பிறகு அதை தொடர்ந்தால் 'கடவுளும்' நம்மை எப்பொழுதும் பின் தொடர்வார்.

அதுவும் வீட்டில் இருக்கும் "சின்ன பசங்களக்கு" கூட மாலை அணிவித்து விடுவார்கள்..அந்த "ஒரு மண்டல" கட்டுக்கோப்பான வாழ்கை அவர்களுக்கு "ஒரு பாதையாக" அமைந்தால் பரவில்லை..ஆனால் பெரும்பாலனவர்கள் ஏற்ப்படுத்தும் 'நான் கடவுள்' பிம்பம் பெரியவர்களின் செய்கையால் அந்த சிறுவனின் "மனதிலும்" பதிந்து விட்டால்.."அன்பை போதியுங்கள்" ..வேறு சில விஷயங்களை தினிக்காதிர்கள்.(அப்படி பார்த்தால் "சாமி கும்பிடுவதே" பெரியவர்கள் கற்றுக்கொடுக்கும் திணிப்பு என்று சொல்லலாம்.ஆனால் அது நம் கலச்சரத்தின்ப்பால் இயற்கையாக அமைந்தது 'திணிப்பு' அல்ல). மாலை அணியும் சமயத்தில் அந்த செய்கையை மற்றவர்கள் மேல் காட்டும் 'அன்பாலும்' செய்யும் 'நேர்மையான செய்கையாலும்' நியாயப்படுத்துங்கள். அது தான் சரியான வழி.


(டிஸ்கி: நான் நாத்திகன் இல்லை சாமிகளா ஆத்திகன் தான்..என்னோடைய மதத்தில் நான் "அபத்தங்களாக"..அதுவும் மாலை போடும் சமயத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து, எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களின்ப்பால் என்னால் முடிந்த வரை எழுதி உள்ளேன். கருத்து
கொஞ்சம் அதிகமா சொல்லிட்டனோ..)

Monday, December 14, 2009

திங்கள் இனிதே-4

அமீரகத்தில் ஒரு மழைக்காலம்:

எப்பொழுதும் கானல்நீரையே உமிழ்ந்துகொண்டு இருக்கும் சாலைகள் ஆச்சரியமாக இரு நாட்களாய் மழைநீரை தெறித்துக்கொண்டு இருக்கிறது...ச்சும்மா ஊரே மழையில் நனைந்த கொண்டு "சில்" என்று இருக்கிறது.. வெளியே கொட்டும் மழையை ஆர்வமாய் பார்த்தாலும் கொஞ்சம் மனசுக்குள் "திக் திக்"ன்னு தான் இருக்குது திடிர்னு தலைகாட்டும் சூரியனை பார்த்து..இதே மாதிரி ஒரு ஊரில் மழை பெய்வதே அபூர்வம்..அதனால் முடிந்தவரை ரசித்துக்கொள்ள வேண்டியது தான். என்னா கொஞ்சநேரம் மழை பெய்தாலே சாலையெங்கும் ஒரே வெள்ளக்காடாக ஆகிவிடுகின்றது..அது ஓன்று தான் குறை..நம்ம ஊரிலும் மழை என்று தான் கேள்விப்பட்டேன் "ஜமாய்ங்க".
....................................................................................................................

ஷார்ஜா அனுபவம்:

போன வாரம் "கலையரசன்" அறைக்கு சென்று இருந்தேன். சென்ஷி, நான் ஆதவன், கலை அப்புறம் நான் ஒன்றாக 'கூடி' வெகுநேரம் உலகஅரசியலையும் சமக்கால இலக்கியத்தை பற்றியும் விவாதித்து கொண்டு இருந்தோம்.நேரம் போவதே தெரியாமல் விடியும்வரை "உலக படங்களை" பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்புறம் அவரவர் இடங்களுக்கு கிளம்பினோம்.நிறையா தமிழ் முகங்களை ஷார்ஜாவில் பார்க்க முடிகிறது. ஷார்ஜா பேருந்து நிலையம் துபாயைப்போல் இல்லாமல் நான் சென்ற ரெண்டு தடவையும் சுலபமாக பஸ்சை பிடிக்க முடிந்தது.ஒரு வேளை நான் 'பிஸி' அல்லாத சமயத்தில் வந்தேனா என்று தெரியவில்லை.. "துபாய்" கூட ஒப்பிடும் பொழுது எவ்வளவோ தேவலாம்..துபாய் பேருந்து நிலையத்தை பற்றி ஒரு தனி பதிவே போடலாம்..இருந்தாலும் இப்ப வேண்டாம்..இந்த ஊரைவிட்டு "வந்தப்பின்" போடுகிறேன்.
....................................................................................................................................................

கிரிக்கெட்:

இந்தியா "டெஸ்ட் ரேங்கிங்"கில் முதலிடம் பிடித்து இருக்கிறது தோனி தலைமையில். வாழ்த்துக்கள். ரெண்டு மேட்ச்சில் தொடர்ந்து இன்னிங்க்ஸ் வெற்றி அதுவும் இலங்கைக்கு எதிராக. சேவாக் அபார பார்மில் இருக்கிறார்..பின்னி பெடலெடுக்கிறார் மனிதர். உலக சாதனை படைப்பார் என்று மறுபடியும் ஒரு தடவை எதிர்ப்பார்த்து ஏமார்ந்துபோனோம்..இந்திய அணி "தோனி" தலைமையில் கொஞ்சம் துடிப்புடன் செயல்ப்படுவதுப்போல் தான் உள்ளது அல்லது "துடிப்பான அணி" அமைந்துள்ளது. இருந்தும் ஆஸ்திரேலியா அல்லது சவுத் ஆப்ரிக்கா போல ஒரு ஆல்-ரவுண்டு அணியாக இன்னும் இந்தியா வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். BCCI என்ற தனியார் அமைப்பு இன்னும் நிறையா செலவு செய்ய முன்வர வேண்டும் பல புதுமையான முறைகளை கையாள்வதற்கு. இந்தியா அணி இன்னும் சில மைல்கள் கடக்க வேண்டியது உள்ளது.
........................................................................................................................................................

விஜய் & விஜய் அந்தோணி

விஜய் அந்தோணி பாடல்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை ..துள்ளலான இசை. "நினைத்தாலே இனிக்கும்" வரை பட்டையை கிளப்பி உள்ளார். அப்பேர்ப்பட்டவர் விஜய் படத்தில் இணைந்து உள்ளார் என்றால் பாடல்கள் சாதரணமாக அமைந்து விடுமா..
"வேட்டைக்காரன்" பாடல்களை கேக்கும்ப்பொழுது 'உச்சிமண்டை' ச்சும்மா கிர்ர்ருனு' தான் இருக்கு. படமும் நன்றாக வந்து இருக்கும் என்று நம்புவோமாக..ஒரு "மாஸ் ஹீரோ"வின் படம் தொடர் தோல்வியடைவது சினிமாவிற்கும் நல்லது அல்ல. படம் வெற்றிப்பெற்றால் மற்ற வளரும் படங்களுக்கும் ஒரு "நம்பிக்கை" பிறக்கும்..படம் லாபகரமான வகையில் இருந்தால் சன் பிக்சர்ஸ்ம்
வணிகரீதியான படங்களை மட்டும் எடுக்காமல் இன்னும் சில சோதனை முயற்சிகள் கூட பண்ணி பார்க்க வாய்ப்புண்டு.
................................................................................................................................

ஆனந்த விகடன்:

ரொம்பநாள் கழித்து "ஆனந்த விகடன்" வாங்கினேன்..ஏனோ "சின்ன புத்தகமாய்" வந்தப்பொழுது இருந்த மனதுக்கு நெருக்கமான "ஃபீல்" இப்ப அவ்வளவாக இல்லை..எங்கும் ஒரே வண்ணமயமாக உள்ளது "ரங்கோலி" கோலபுத்தகத்தை திறந்ததுப்போல். இந்த மாற்றம் அவர்கள் வரும் தலைமுறையை கவர கொஞ்சம் முன்கூட்டியே வைத்த "அடி"(ஸ்டேப்) போல் தான் உள்ளது. எது எப்படியோ இந்த "ப்ளாக்" பக்கம் வந்ததில் இருந்து கொஞ்ச நஞ்சம் இருந்த புஸ்தகம் படிக்கும் பழக்கமும் அறவே ஒழிந்தது. அந்தவகையில் "ப்ளாக்" பல புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு உள்ளது.
..................................................................................................................................................................

கவிதை(அப்படியும் சொல்லலாம்)

சாலையின்
ஓரங்களில் உள்ள மரங்களை கடக்கையில்
வேதனையாக உள்ளது இன்னும் சில தினங்களில் வரப்போகும்
"சாலை விஸ்தரிப்பை நினைத்து".


Saturday, December 12, 2009

உலக சினிமாவும், உள்ளூர் சினிமாவும்.

உலக சினிமாவும் உள்ளூர் சினிமாவும்..

http://ecx.images-amazon.com/images/I/41V9VCY174L._SL500_AA240_.jpg

உலக சினிமா..உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்க..நம்ம தமிழ் சினிமாவை பற்றி பேசுனாலே டெரரா பாக்குறாங்க
..நானும் சரி உலக சினிமா உலக சினிமா அப்படின்னு சொல்லுறாங்களே ''அதுல'' அப்படி என்ன தான் இருக்குனு சில உலகசினிமாக்களை பார்த்தேன்.. நம்ம ஊரு சினிமாவுக்கும் அந்த "உலக" சினிமாவுக்கும் உள்ள வேறுப்பாடுகளை முடிந்தவரை பட்டியலிட்டுள்ளேன் ..

நம்ம ஊரு
சினிமா: ஹீரோ படத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல மூச்சே விடாமடயலாக் பேசுறதை காட்டுவாங்க..
உலக சினிமா: ஹீரோ மூச்சு பிடிக்கறதை மட்டும் பத்து நிமிஷம் "க்ளோஸ்-அப்" காட்டுவாங்க..அதுக்கு அப்புறம் தான் அவரு வசனமே பேச ஆரம்பிபாரு.(படத்துல டயலாக் எல்லாம் கம்மியா தான் இருக்கும்..எல்லாமே "உணர்வுபூர்வமான" வெளிப்பாடுகள் தான்)

நம்ம சினிமா: எதாச்சும் சில கதாபாத்திரங்கள் புரிஞ்சிக்கவே முடியாத,எந்தசமயத்துல எதாச்சும் ஏடாகூடமா லூசுத்தனமா பண்ணப்போறன்களோ என்பதைபோல் இருப்பார்கள்.
உலக சினிமா: இங்க பெரும்பாலான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் "அதேமாதிரி" தான் அலைந்துகொண்டு இருக்கும்.

நம்ம சினிமா : பாட்டு ஃபைட்ன்னு இசை நம்ம காதுல கடைசி வரைக்கும் "நங்குநங்கு"ன்னு வந்து விழும்.
உலக சினிமா: ஒரு உடைஞ்சப்போன வயலின் இசை படம் முழுவதும் கூடவே வந்துக்கிட்டு இருக்கும். இசையமப்பாளர் எதோ "கருமாதிக்கு" வாசிக்கிற மூட்லையே கடைசி வரைக்கும் வாசிச்சிக்கிட்டு இருப்பாரு.

நம்ம சினிமா: குடும்பத்தோடு பார்க்கிறப்ப சில இடங்களில் கொஞ்சம்பயந்துக்கொண்டே இருக்க வேண்டும்..எதாவது "ஏடக்கூட" காட்சிகள் வந்துவிடபோகிறதோ என்று.
உலக சினிமா: இங்க எந்நேரமும் கையுல ரிமோட்டை கெட்டிய புடிச்சிக்கிட்டு உக்கார்ந்து இருக்கணும்..கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும்..வீட்டுல பார்த்தோம் அப்படிங்கிற பட்சத்தில் நம்ம கதை முடிஞ்சது.

நம்ம சினிமா: படம் முடியறதுக்கு முன்னாடியே எழுந்து வீட்டுக்கு ஓடுறதுக்கு தயாரா இருப்போம்..ஏன்னா படம் முடிய போகுதுன்னு முன்னாடியே யூகித்து வைத்து இருப்போம்..
உலக சினிமா: இங்க "ரோலிங் டைட்டில்" போட்ட தான் "ஓஹோ, படம் முடிஞ்சிருச்சா" அப்படிங்கிறதே தெரியும்..ஏன்னா "கதை" அந்த அளவுக்கு தெள்ள தெளிவா இருக்கும்.

நம்ம சினிமா: மத்தவங்க எல்லாம் ஆடுவாங்க..ஓடுவாங்க..கேமரா மட்டும் ஒரே இடத்தில நிற்கும்
( விஜயகாந்த் படத்தில் வரும் பாடல் காட்சிகளை தவிர்த்து..அவர் பட பாட்டுல மட்டும் தான் அவரோடு சேர்ந்து காமெராவும் ஆடும்..உதாரணம்: "உன்ன நினைச்சேன் நான் உன்ன நினைச்சேன்" பாட்டு)
உலக சினிமா: இங்க மத்தவங்க எல்லாம் ஒரே இடத்தில நின்னாலும்..கேமரா மட்டும் "குளிர் ஜுரம்" வந்த மாதிரி நடுங்கிகிட்டே இருக்கும் .


இப்ப உலக சினிமா ரசிகர்களையும், நம்ம ஒரு சினிமா ரசிர்களுக்கும் உள்ள வேறுப்பாட்டை பார்ப்போம்:

http://www.ajithfans.com/article-uploads/2007/12/billa-tamilcinema-fans.jpg

நம்ம சினிமா ரசிகர்கள்
: தியேட்டர்ல ஆடுவாங்க, பாடுவாங்க, ஓடுவாங்க, சத்தமா சிரிப்பாயிங்க
..ஒரு "உணர்ச்சி மிகுதில" தான் எப்பொழுதும் இருப்பார்கள்..
உலக சினிமா ரசிகர்கள்: எந்த உணர்ச்சியும் காட்டமா கடைசி வரைக்கும் "கட்டிப்போட்ட" மாதிரியே உக்கார்ந்து இருப்பார்கள்.

நம்ம சினிமா ரசிகர்கள்
: அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் கொண்டாட்டம் தான்.
உலக சினிமா ரசிகர்கள்: அந்த மாதிரி நடிகர்களின் போஸ்டரை பார்த்தாலே "டாரு டாரை கிழித்து'' தொங்கவிட்டு விடுவார்கள்.

நம்ம ரசிகர்கள்
: பெரும்பாலும் ஒரு "எடக்கூடமாய்" காட்சி வந்தால் உள்ளே ரசித்தாலும் பிடிக்காத மாதிரி வெளியே காட்டி கொள்வார்கள்.
உலக சினிமா ரசிகர்கள்: தமிழ் படங்களில் எதாவது "அதே மாதிரி" காட்சி அமைப்புகள் வந்தால் "வக்கிரம்" என்று சொல்லிவிட்டு..கிட்டதட்ட "உறவுகளையே" வக்கிரமாக சித்தரிக்கிற "உலக படங்களை" "கலைப்படங்கள்" என்பார்கள்.

நம்ம சினிமா ரசிகர்கள்
: ஆனந்த விகடன், குமுதம், கேபிள் சங்கர் அவர்களின் "தமிழ்ப்பட" விமர்சனங்களை படித்துவிட்டு ஓடியே போய் விடுவார்கள்.
உலக சினிமா ரசிகர்கள்: IMBD, Rotten tomatoes என்று இரவெல்லாம் "கண் விழித்து" ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.
சுருக்கமா

நம்ம சினிமா ரசிகர்கள்
கே.எஸ்.ரவிக்குமார் பட "ஹீரோ" மாதிரினா
உலக சினிமா ரசிகர்கள் செல்வராகவன் பட "ஹீரோ" மாதிரிங்க ..

டிஸ்கி: சும்மா ஒரு "இதுவா" தான் எழுதி இருக்கேன் யாராவது "அதுவா" எடுத்துக்க போறீங்க..


Wednesday, December 9, 2009

டிசம்பர் 10


















"Composite materials எக்ஸாம்க்கு எப்படி படிச்சாலும் புட்டுக்க தான் போகுது..தூக்கி போட்டுட்டு வாடா சீர்காழி வரைக்கும் போய்ட்டு வரலாம்" என்று பார்த்திபன் அழைக்க..எனக்கும் அதுவே சரி என்றுப்பட வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.


திருப்பி சிதம்பரத்துக்கு வர்றப்ப எல்லாம் வடிந்து இருந்தது. "மச்சான் திருப்பி சாப்பிட்டு ரூம்க்கு போயிறலாம் என்ன சொல்ற"..என்று பார்த்தி கேக்க..


"அதான் சரி..ஆனா ரெண்டு பேருகிட்டயும் அஞ்சு ரூபா கூட இல்லை என்ன பண்ணுறது..என்று நான் சொல்ல..

"மச்சான் என் ஃபிரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவனை போய் பார்த்து காசு வாங்கிட்டு போலாம் வா.." பார்த்தி சொன்னான்.

"டேய்..இந்த சமயத்துல போறியே..உன் கூட சாதாரணமா வந்தாலே எவனா இருந்தாலும் காரி துப்புவான்..அதுவும் "தீர்த்தவாரிக்குனு" காசு கேட்டு போய் நின்னா
கண்டிப்பா என்னை கேவலாமா நினைப்பான் உன் ஃபிரெண்ட்.." ..நான்.

"அதுல்லாம் அவன் எந்த சமயத்தில் போய் கேட்டாலும் கொடுப்பான் வா.." என்று என்னை கிஷோர் வீட்டுக்கு அழைத்து போனான்..அது தான் எங்களுக்கான முதல் சந்திப்பு..சத்தியமா அன்னிக்கு என்னை பத்தி என்ன நினைச்சன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாது..

அப்புறம் இரண்டாவது சந்திப்பு எதோ ஒரு மருத்துவமனையில் சந்தித்தோம்..பின் "ராம்" படம் பார்க்க "வடுகநாதன்'க்கு"அவன் "செலவில்" அனைவரையும் அழைத்து சென்றது..இது வரை மட்டுமே என்னால் "கிஷோரை" பார்த்திபனின் நண்பனாக பார்க்க முடிந்தது.. "

இந்த ஐந்து வருடங்களில் என் வாழ்வில் நடந்த அத்தனை முக்கியமான நிகழ்வுகளிலும் உடனிருந்து இருக்கிறான்..முக்கியமாக "மனம் உடைந்துபோன" பல தருணங்களில் உடனிருந்து ஆறுதல் கொடுத்திருக்கிறான். அதுவும் பலசமயங்களில் "எக்ஸாம் ஃபீஸ்" எல்லாம் கூட "அவன் இருக்கிறான் பார்த்துக்கொள்ளுவான்"..என்று நானும் பார்த்திபனும் கடைசி சமயம் வரை கட்டாமல் இருந்திருக்கிறோம். அவன் கூட பழகியவர்களுக்கு அவன் "இயல்பு" புரியும்..நான் கூட என்னால் ஏன் "இதே மாதிரி இருக்க முடியவில்லை" என்று பல சமயங்களில் அவனை பார்த்து நினைத்ததுண்டு. அவன மாதிரி ஒரு கேரக்டர் சான்சே இல்லை பழகி பாருங்க தெரியும்..

அவன் நன்றி சொல்றானோ இல்லையோ..அவனை மாதிரி ஒரு ஆளை இந்த டிசம்பர் 10ல் பிறக்க வைத்து..அவனை சந்திப்பதற்க்கான வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுத்த இறைவனுக்கு நான் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

Last but not least "Many more happy returns of the Day Machi"

உன் வாழ்வு சிறக்கவும் உன் மேல் பிறரின் அன்பு மென்மேலும் படரவும்..

(கிஷோர் இதை நீ மட்டும் படி : மச்சி கொடுக்கறன்னு சொன்ன காசுக்கு மேலே ஓவரா கூவிட்டேன்..சொன்ன மாதிரியே என் அக்கௌன்ட்க்கு பணம் வந்துடனும் சொல்லிப்புட்டேன்)

Wednesday, November 18, 2009

காட்சிகளும் கதையும் - 1

கதை 1 :

விக்னேஷ் காரை வழக்கம்போல் பார்க் பண்ணிவிட்டு வீட்டின் காலிங் பெல்லை அழுத்த முற்ப்பட்டபொழுது தான் கவனித்தான் கதவு வழக்கத்திற்கு மாறாக மெலிதாக திறந்து இருந்ததை.
"இவளுக்கு என்ன ஆச்சு"..என்று நினைத்தான். வாணி என்று அழைத்தும் எந்த பதிலும் இல்லை. ஒரு வினோதமான நிசப்தம் வீடு முழுவதும் நிலவியது.. சமையலறையில் நுழைந்து பார்த்தான் ஆளை காணவில்லை..மெலிதாக ஒரு சந்தேகம் படர்ந்தது.."ஒரு வேளை..ச்சே..அப்படி நினைக்க கூட முடியாது..வாணி அப்படி இருக்கமாட்டா..அது வேற இல்லமா நேத்து தான் அவ கூட இரவு முழுக்க உக்கார்ந்து பேசினோம்..
கல்யாணத்திற்கு முன்பு காதல் என்பது பெரும்பாலனவங்க வாழ்கையில சகஜமானது..இப்ப அது குறுக்கிட்ட அதை நம்ம எதார்த்தமா எடுத்துக்கிட்டு கடந்து போய்டனும்..மனசுல அந்த நினைவுகள் எப்பயாவது வந்தா கூட அது உறுத்தலா இல்லாத மாதிரி நம்ம தான் பார்த்துக்கணும்..ஒரு கணவனா இதுக்கு மேல நான் எப்படி உனக்கு விளக்க முடியும்..அது வேற இல்லாமல் நமக்கு குடும்பம் குழந்தைன்னு ஆகிட்ட பிறகு"..என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே "குழந்தை" என்ற வார்த்தை..ஆமாம் மிருதுளா கூட இல்லையே எங்க என்று குழம்பினான்..அவள் மொபைலுக்கு ட்ரை பண்ணால் அனைக்கபட்டு இருந்தது.
"எங்க போய் தொலைஞ்சா.." என்று நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுதே அறையின் உட்புறம் இருந்த பாத்ரூமில் இருந்து விசும்பல் சத்தம் கேட்டது..உள்ளே நுழைந்து பார்த்தவன் முதலில் கண்ணாடியில் 'ரத்தத்தில்'எழுதி இருந்த வார்த்தைகளை பார்த்து மிரண்டு போனான்.."விலகி போகிறேன் விட்டு விடுங்கள்.."..அதற்கு மேல் பாத் டப்பின் பின்ப்புறம் நிழறுவமாய் ஸ்க்ரீனுக்கு பின் தெரிந்த குழந்தை மிருதுளாவின் உருவத்தை பார்த்தவுடன் தலை சுற்றியது..
(நிகழ்வுகளால் நிரப்பப்பட்டதே சம்பவம்..அனால் நிகழ்வுகளை மட்டும் வைத்தே நம் சம்பவத்தின் தன்மையை அறிவது கடினம்..ஏன் என்றால் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பார்வையில் மாறுப்படும்..பலரின் பார்வையை வைத்து தீர்மானிப்பதே நிகழ்வின் உண்மையை விளக்கும்)..

கதை 2 :

ராஜா அந்த நள்ளிரவிலும் தன் ஜீப்பை வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான்..இங்கே "புதுசத்திரத்திற்கு" ட்ரன்ஸ்ஃபர் ஆகி பத்து நாட்கள் தான் ஆகி இருந்தது.வரிசையாக நடந்த நான்கு கொலைகள் தான் அவனை இந்த ஊருக்கு மாற்றி இருந்தது .மேலதிகாரிகள் இவன் மேல் வைத்து இருந்த நம்பிக்கை.முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் ஒரு அடி கூட இந்த கேசில் முன்னேற முடியாதது.இவை எல்லாம் காரணமாக இருந்து மூனே மூன்று நாட்களில் எல்லாம் முடிந்து ட்ரான்ஸ்ஃபர் நிறைவேற்றப்பட்டு இருந்தது.பத்து நாட்கள் ஆகியும் ராப்பகலாக அலைந்தும் ஒரு துப்பு கூட அவனுக்கும் கிடைக்கவில்லை..ஒரே ஒரு விஷயம் தவிர்த்து ..

இறந்தவர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்கள்..குறிப்பாக கல்யாணம் ஆன பெண்கள்..அதுவும் அந்த உள்ளுர் "பிரபல சாமியாரை" பார்த்துவிட்டு வந்தப்பிறகு தான் அனைத்து கொலைகளும் நடந்து உள்ளது..ஆனால் எதனால்?..இதற்கு மட்டும் ராஜாவால் அத்தனை எளிதாக விடை கண்டுப்பிடிக்கவில்லை இவ்வளவு விசாரனைக்களுக்கு பின்பும்..

வண்டியில் வேகமாக வந்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது ரோடு ஒரமாக நின்று கொண்டு லிஃப்ட் என்று கேட்டவனின் செயல்..இந்த நள்ளிரவில்..அதுவும் இந்த இடத்தில் யார் அது என்று ஜீப்பை மெதுவாக அவன் அருகே செலுத்திய பொழுது ஜீப்பின் வெளிச்சத்தில் அவன் 'ரத்தம்' வடியும் முகத்தை கவனித்தான்..அந்த முகம்..அந்த முகம்..இதற்கு முன்பு அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட முகம் ..ஜீப்பை அவன் அருகில் சென்று நிறுத்தினான்..

(ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன் இருக்ககூடும்..ஆனால் நாயகனை தீர்மானிப்பது கதை இல்லை..எவன் ஒருவன் சிந்தனையில் இருந்து அந்த கதை உருவகிறதோ அவனே அந்த கதையின் நாயகன்)

கதை 3 :

நெருக்கடி மிக்க அந்த தெருவின் உள்ள "ஆதர்ஷ் மந்திர்" என்ற பிரபலமான பள்ளியின் மாடியில் நின்று கொண்டு இருந்தனர் சரவணனும் கனகவேலும்..

"டேய் இந்த இடத்தை எதுக்கு முடிவு பண்ண..எனக்கு இன்னமோ எங்கயோ தப்பு பண்ணுரமோன்னு தோனுது.."..வேலு.

"இல்லை வேலு இந்த இடம் தான் சரியா வரும்..அவனை பல நாளா ஃபாலோ பண்ணதால சொல்லுறேன்.."..சரவணன்.

"நம்ம ரெண்டு பேரு பசங்களும் இங்க தான் படிக்கிறங்க அது நியபகம் இருக்குல..பார்த்துட்டங்கனா ரொம்ப கஷ்டம். சொல்லி புரிய வைக்கவும் முடியாது"..வேலு.

"ம்ம்..அது கூடவா மறந்து இருப்பேன்..ஆனா இந்த இடத்தை விட்டா அவனை அடிக்கிறது ரொம்ப கஷ்டம்..அதான்..".சரவணன்.

"வாட்ச்மேனை கரெக்ட் பண்ணி இங்க வந்துட்டோம்..ஆனா எனக்கு இன்னமோ ரொம்ப சந்தேகமா இருக்கு அவன் மேல.."..வேலு.

"எல்லாத்துலயும் சந்தேகம் தான் உனக்கு..போலிஸா போக வேண்டியவன்டா நீ.." என்று சொல்லிக்கொண்டே கிழே அந்த பள்ளியின் மைதனத்தை நோக்கினான் சரவணன்.

அங்கே கூட்டம்மாய் நின்று கொண்டு இருந்த மாணவர்களுக்கு மத்தியில்..அவனிடம் சற்று நேரத்திற்கு முன்பு காசு வாங்கி சென்ற வாட்ச்மேன் 'ரத்த' வெள்ளதில் துடித்துகொண்டு இருந்தான்.

(ஒருவன் விளக்கும் காட்சிகள் யாவும் மெய் என்று சொல்லமுடியாது..ஏன் என்றால் கண்ணால் கானும் காட்சியே பொய்த்து போக கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது)

டிஸ்கி : மிக முக்கியமா மூன்று கதையும் ஒரே கதை தான்.

தொடரும் ..

Sunday, November 15, 2009

திங்கள் இனிதே -3

அண்ணன் கேபிள்"ஷங்கர்" அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
....................................................................................................................................................................

ஒரு இருபது நாளுக்கு மேலேயே அலுவலகத்தில் இணைய தொடர்பு இல்லை கொஞ்சம் பிரச்னை. ஆனா பாருங்க இப்ப தான் வேலை எல்லாம் ஒழுங்கா செய்யுற மாதிரி ஒரு ஃபீலிங்..இதுவும் நல்லா தான் இருக்கு(டேய் கதை விடுறியா அப்படின்னு சொல்றது காதுல கேக்குது) அப்ப அப்ப வீடியோ கேம்ஸ் விளையாதடறோடு சரி. ரூம்க்கு வந்து அதுக்கப்புறம் முடிக்க வேண்டிய வேலை எல்லாம் முடித்து விட்டு தூங்குவதற்கு 12 மணி ஆகுது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூக்கம்.(ஏழு மணி நேரத்துக்கு குறைவா தூங்குற தூக்கம் எல்லாம் தூக்கமே இல்லைங்க அப்படி என்ன பெருசா சாதிக்க போறோம்) இப்பயும் 24 மணி நேரமும் இந்த கணினியை கட்டிக்கொண்டு அழுவதைப்போல் ஒரு ஃபீலிங். ஊரில் இருந்தப்பொழுது வெறும் டிவி பார்ப்பதோடு சரி இங்க வந்து கிட்டதட்ட இதுக்கு(கணினி) கொஞ்சம் 'அடிக்ட்' ஆனா மாதிரியே இருக்கு.ஆனாலும் வேறு வழி இல்லை. என்னை கேட்டா நான் இதை தான் "இடியட் பாக்ஸ்" என்பேன்.
....................................................................................................................................................................

தினம் இரவு 11:30 மணிக்கு(இந்திய நேரம்) ..வசந்த் டீவியில் "ரகசிய கேள்விகள்" என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகின்றது. Dr.காமராஜ் என்பவர் தொகுத்து வழங்குகின்றார்..
அவ்வளவு உபயோகமாக இருக்கின்றது. கண்டிப்பாக நேரம் கிடைத்தால் பாருங்கள் தனியாக.கல்யாணம் ஆனவர்களும் சரி, ஆகாதவர்களும் சரி பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. எவ்வளவோ தெரியாத விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியுது. இந்த வாரம் "இன்டர்நெட்டால் எவ்வாறான பிரச்சனைகள்" டீன்-ஏஜ் பசங்களுக்கு ஏற்ப்படுகின்றது என்பதை பற்றிய டாபிக்.ஆனால் டாபிக் அது சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை..நீங்களே பார்த்த தெரிஞ்சிங்க.

அவர் சொன்ன ஒரு விஷயம்..

"குழந்தை இல்லை என்ற பிரச்னை என்றால் பெண்களையும், "உறவு" சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் ஆண்களையும் அவர்கள் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்..இது ஒரு மாதிரி 'ட்ரிக்கி'யான விஷயம்"..எந்த பிரச்னை என்றாலும் இருவரும் சேர்ந்தே வர வேண்டும்"..என்றார். யோசிச்சிப்பார்தால் அப்பட்டாமான உண்மை தான்.
....................................................................................................................................................................
நாணயம் ட்ரைலர் பார்த்தேன். மேக்கிங் அசத்தி இருக்கிறார்கள்..எதோ ஒரு ஆங்கில படம் உல்ட்டா மாதிரி தெரிஞ்சாலும்..பார்க்க நல்லா இருக்கு..எப்படி இருந்தாலும் படம் வெளியே வந்தப்பிறகு நம்மோட சில பதிவர்கள் அந்த படத்தை கிழிகிழி என கிழித்து காயப்போட்டு தொங்கவிட்டு அது என்ன "ஆங்கில படம்" என்று சொல்வார்கள் அப்பொழுது தெரிந்துக்கொள்கிறேன். S.P சரண் ஓரளவு வித்தியாசமான கதை களத்தையே தேர்ந்து எடுத்து படம் பண்ணுகிறார்.


.......................................................................................................................................................................

இது ஒரு பதிவர் பற்றிய "புதிர்" மாதிரி சின்னதா ஒரு "ட்ரை"..வார வாரம் எழுதுலம்னு இருக்கேன்..என்னா மேட்டர்ன்னா அது யார்னு நீங்களே கண்டுப்பிடிச்சிக்க வேண்டியது தான்..

CATக்கு படிக்கிறேன்னு சொல்லுவாரு
ஆனா எப்பொழுதும் Mouseம் கையுமா தான் உக்கார்ந்து இருப்பாரு..

படிக்கிற மேஜைக்கு பக்கத்துலையே Window இருந்தாலும்
இவரு நூலு விடுறது எல்லாம் Windows வழியா தான்..

GOD பற்றி எழுத ஆரம்பிச்சிட்டாலும்..
இவரு Blog மேட்டர்ல ஒரு பெரிய Devil..

இவரு எழுதறதை பார்த்தா Futureல பெரிய விஞ்ஞானியா வருவார்னு எல்லாம் நினைக்கலாம்
ஆனா நான் இன்னமோ இவர்
"அனு" விஞ்ஞானியா வருவார்ன்னு தான் நினைக்கிறேன்.

Friday, November 13, 2009

எனக்கு பிடித்த நடிகர்

காயாத கானகத்தே..

எனக்கு பிடித்த நடிகர் M.K தியாகராஜ பாகவதர்
http://www.tamilnation.org/images/culture/music/mkt.jpg


ஒரு சம்பவத்தை என் அப்பா அடிக்கடி கூறுவர்..

அதாகப்பட்டது என் அப்பாவின் பாட்டி காலத்தில் அவரின் பக்கத்து ஊருக்கு ஒரு நாள் தியாகராஜ பாகவதர் வந்து இருக்கிறார்..அவரை பார்ப்பதற்கு என் அப்பாவின் பாட்டி ஊரே திரண்டு பக்கத்து ஊருக்கு சென்று இருக்கிறது.ஆனால் அதற்குள் தியாகராஜ பாகவதர் கிளம்பி சென்று விட்டார்.ஆர்வத்தோடு கிளம்பி சென்ற ஊர்க்காரர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடு திரும்பி கிளம்பினர்.அந்த ஏமாற்றத்தை சற்றுக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத என் அப்பாவின் பாட்டி "சரி அவரை தான் பார்க்க முடியவில்லை..அவர் நடந்து சென்ற பாதையின் காலடி மண்ணையாவது எடுத்துக்கொண்டு செல்வோம் என்று "அந்த தெய்விகத்தன்மை வாய்ந்த மண்ணை" ஒரு கவலம் எடுத்து புடவையில் ஒரு முடிச்சு போட்டு அதை வீட்டுக்கு பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்தார். ஃபிளாஷ் பேக் இதோடு ஓவர்.

ஆமாம் இதுக்கு இப்ப என்ன அப்படிங்கிரிங்கள..அந்த நாளில் இருந்து என் பரம்பரையில் வந்த அனைவரும் அந்த மண்ணை ஒரு பொக்கிஷமாக பாதுக்காத்து வருகிறோம்.எங்கே வெளியே சென்றாலும் அந்த மண்ணை 'தொட்டு' கும்பிட்டு விட்டு தான் கிளம்புவோம்..நான் இங்கே அமிரகம் கிளம்பி வருவதற்கு முன்பு என் தந்தை அந்த மண்ணின் கொஞ்சம் எடுத்து என் கையில் கொடுத்து "இது உனக்கு துணையா இருக்கும் வினோத்..பாகவதர் அய்யா எப்பொழுதும் உனக்கு பக்கத்தில் இருக்கார்னு நினைச்சிக்கோ" அப்படினாரு.நானும் வேலைக்கு செல்வதற்கு முன்பு அதை தொட்டு கும்பிட்டு விட்டு தான் செல்வேன்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பல தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டாலும்..எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை தலைமுறை தலைமுறையாக அவர் தான் எங்கள் ஆதர்ச நாயகன்.."காயாத கானகத்தே" என்று இன்றளவும் அவரின் குரலை கேக்கும் பொழுது எனக்குள் இன்ப வெள்ளம் உற்சாக ஊற்றெடுக்கும்.அவரின் "பவளக்கொடி" தொடங்கி ஒரு படத்தை விட்டு வைத்தது இல்லை. அவரின் தன்னம்பிக்கை வாய்ந்த வாழ்கை எனக்கு உற்சாக டானிக்.

சுருக்கமா சொல்லபோன்னா அவர் தான் எனக்கு "ரோல் மாடல்".."தல" எல்லாமே. அதாவது தலைவன் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற வேற எதாச்சும் நினைச்சிக்க போறீங்க. சரி நான் போய் அவரோடு பாட்டு ஓன்று கேட்டு விட்டு வருகிறேன்.

என் அப்பாவின் ஆயாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

Tuesday, November 10, 2009

பிடித்தது, பிடிக்காதது.

நம்ம "ஷார்ஜா புலி" "சிக்ஸ்பேக் சிங்கம்" "பதிவுலகின் இளம் சூறாவளி" "'ஆதவன்"' 'சூர்யா' அழைத்து கொண்டதின் பேரில் இந்த தொடர்ப்பதிவை(யும்) எழுதுகிறேன்..(இப்படி எல்லாம் எழுதுனா தான் உண்டுன்னு நினைக்குறேன்)

பிடித்தவர், பிடிக்காதவர்..பற்றி எழுத வேண்டும் குறிப்பா அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை..

என்னை பொறுத்தவரை எல்லா காலங்களிலும் பிடித்தவர், பிடிக்காதவர் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு இல்லை சில பேரை தவிர்த்து. சூழ்நிலைகளையும், சந்தர்பங்களையும், காலத்தையும் பொறுத்து அது மாறிக்கொண்டே இருக்கும்..இன்று நமக்கு பிடிப்பவர் நாளை எதோ ஒரு காரணத்துகாக நமக்கு பிடிக்காமல் போகலாம்.. இன்று நம் காரணமே இல்லாமல் வெறுக்கும் சிலரை கூட நாளையே நமக்கு மிகவும் பிடித்தவராக மாறலாம்.

தொழில்அதிபர் :

பிடித்தவர் :

எங்க ஏரியால இருந்த பானிபுரி கடைக்காரர்..எங்கயோ வடமாநிலத்தில்(தமிழர்) இருந்து பத்து வருடங்களுக்கு முன்பு வந்த அவர் தன்னுடுய கடின உழைப்பின் முலம் இன்று நல்ல நிலையில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு சொந்தக்காரர். என் கண் முன்னாடி அவர் வளர்ச்சியை கண்டு இருக்கிறேன். அவரும் இப்ப தொழில் அதிபர் தாங்க.

பிடிக்காதவர்கள் : இதான் பிரச்சினையே, பிடிக்காதவங்கன்னு உடனே யாரையும் சொல்ல முடியாது..இருந்தாலும் முயற்சி பண்ணுறேன்..

தன் முன்னேற்றத்தின் பின்னுள்ள எந்த ஒரு உழைப்பாளியின் நலனை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்கள் தான் இப்பேர்ப்பட்ட வளர்ச்சிக்கு காரணம் என்பதை மனதார உணராத எந்த ஒரு தொழில் 'அதிபனையும்' பிடிக்காது.

விஞ்ஞானி :

பிடித்தவர்:

அப்துல் கலாம்..இந்தியாவின் ஏவுகணை மனிதர்..எந்த ஒரு பின்புலமும் இன்றி ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய அறிவின்,திறமையின்,உழைப்பின் மற்றும் வாழ்வில் தான் கடைப்பிடித்த ஒழுக்கத்தின் முலம் நாட்டின் ஜனாதிபதியாக மாறியவர்..

எம்.எஸ்.சுவாமிநாதன்..(வேளாண்மை துறை விஞ்ஞானி)

நம்மாழ்வார்( இயற்கை அறிவியலாளர்)

பிடிக்காதவர் :

யாரும் இல்லை..

தமிழக கல்வியாளர் :

பிடித்தவர்: குறிப்பாக யாரையும் சொல்ல தெரியவில்லை..

பிடிக்காதவர்: கல்வியாளர்னா என்னனே தெரியமா தன்னை கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் ஜேப்பியார் போன்ற சிலர்கள்.

எழுத்தாளர்

பிடித்தவர் : சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சிலர். தீவிரமான வாசிப்பனுபவம் என்று ஒன்றும் இல்லை..நான் படித்த வரைக்கும் இவர்கள் என் மனம் கவர்ந்தவர்கள்.

பிடிக்காதவர் : ஒருவன் சமுகம் சார்ந்து எழுதுகிறான் என்றால் அவன் அந்த சமுகத்தின் மனிதர்களை நேசிக்க தெரிந்தவனாக இருக்க வேண்டும்..அப்படி நேசிக்காமல் கர்வம் பிடித்து அலையும் எவனையும் பிடிக்காது.

இயக்குனர் :

பிடித்தவர் : அது பெரிய லிஸ்ட்..பாலா, அமீர், மிஷ்கின், மணிரத்னம்,கெளதம்,சேரன் மற்றும் சிலர்..

பிடிக்காதவர் : S.A சந்திரசேகர் மற்றும் சிலர்.

நடிகர்:

பிடித்தவர் :

ஒரே ஒருவர்..தோல்விகளை அதிகமாக சுமப்பதால் மட்டுமே மற்றவர்களால் அதிகம் தூற்றப்படும் ஒருவர்..அதுவும் இவ்வளவு தோல்விகளுக்கு பிறகும் தமிழ்திரையில் தனக்கு என்று ஒரு இடத்தை இது வரை தக்கவைத்து கொண்டு இருக்கிறவர்..எத்தனை சோதனைகளை எதிர்க்கொண்டாலும் இதுவரை துணிவுடன் அதை எதிர்த்து களத்தில் உள்ளவர்..என்னுடுய உற்சாக டானிக்..மனிதாபிமானம் உள்ளவர்..குறிப்பாக மற்ற எந்த நடிகரையும் போல் இல்லாமல் திரையில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்..என்னுடுய ரோல் மாடல்..பெயரை விட்டு விடுகிறேன்..அந்த பெயரை சொன்னாலே சிலபேர் எரிந்து விழுவார்கள்.முடிந்தால் இந்த லிங்க் போங்கள்.

பிடிக்காதவர் : நடிப்பால் நாட்டை ஆளத்துடிக்கும் அனைவரையும்..

நடிகை:

பிடித்தவர் : சிம்ரன் அப்புறம் த்ரிஷா.

பிடிக்காதவர் : அசின், சில படங்களை தவிர்த்து ஜோதிகா.

இசையமைப்பாளர்:

பிடித்தவர் : இந்தியாவின் இரண்டு பெரிய இசை சகாப்தங்கள் A.R ரெஹ்மான் மற்றும் இளையராஜா

பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை எந்த ஒரு இசையமைப்பளரின் ஒரு பாடலையாவது மிகவும் ரசித்து இருப்பேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்:

பிடித்தவர்:

முன்னாடி ZEE தமிழ்ல வந்தாங்க..அவங்க பெயர் தெரியாது அதாங்க வெண்ணிலா கபடிக்குழு படத்தில கூட வந்தாங்க..இப்ப கூட மதுரை டூ தேனீ அப்படிங்கிற மொக்கை படத்தில் நாயகியாக வந்தார்கள்..அவங்களை பிடிக்கும்.

பிடிக்காதவர்: சன் மீயூஜிக்கில் வரும் அனைத்து காட்டேரிகளும்! (பெப்சி உ'ப்பு'மாவும் சேர்த்துதான்!) (ரொம்ப நேரம் யோசித்து எழுதியது)

வானொலி பண்பலை தொகுப்பாளர்

பிடித்தாவர் - சமிபத்தில் மறைந்த 'தென்கச்சி' சாமிநாதன்

அரசியல்வாதி:

பிடித்தவர்: அது மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப கருணாநிதி அப்புறம் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்கும்..

பிடிக்காதவர்: அதுவும் மாறிக்கிட்டே இருக்கும்..இப்ப இந்த நிமிஷத்தில் சொல்வது என்றால் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரையும் பிடிக்காது.

அப்புறம் முக்கியமா இந்த தொடரை தொடர இந்த தளத்தின் சொந்தக்காரர்களை அழைக்கிறேன் இஷ்டம் இருந்தா எழுதுங்க இல்லைனா எழுதாதிங்க ..அவங்க தமிலிஷ்
மற்றும் தமிழ்மணம்.

Monday, November 9, 2009

திங்கள் இனிதே-2

பயணம்:

போன வாரம் அமீரக பதிவர்களின் கோர்ஃபக்கான் பயணம் இனிதே முடிந்தது.
பயணதூரம் கருதி முதலில் நான் போக தயங்கினாலும்..அதன்ப்பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளும் அவர்கள் என்ப்பால் வைத்திருந்த அன்பும் என் மனதை வெகுவாக மாற்றி இருந்தன..என் இரண்டு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அல்-அய்னில் இருந்து புறப்பட்ட நாங்கள் அங்கு இருந்து 'கோர்ஃபக்கான்க்கு' நேராக பேருந்து இல்லாததால் முதலில் 'மதாம்' என்கிற இடத்திற்கு சென்றோம்..அங்கு இருந்து 'புஜைரா' செல்லும் ஒரு டாக்ஸியில் ஏறியப்பிறகு "அப்பாடா" என்று மூச்சு விடுவதற்குள் ஒரு தெருவை சுற்றி வந்த டாக்ஸி டிரைவர் வேறு ஆள் கிடைக்காததால் எங்களையும் இறக்கி விட்டு விட்டான்..சரி மூன்று பேரை மட்டும் ஏற்றி செல்ல எவ்வளவு என்று கேட்ட தொகையை கேட்டு என் நண்பன் அங்கேயே மயங்கி விழாத குறை..சரி சிறிது நேரம் வேறு டாக்ஸி கிடைக்குமா என்று அங்கேயே சுற்றி சுற்றி வந்த நாங்கள் அதன்ப்பிறகு வேறு வழி இன்றி மறுப்படியும் அல்-அய்ன் டாக்ஸி பிடித்து ஊரு வந்து சேர்ந்தோம்..எப்படி இருந்தாலும் அடுத்த இது போன்ற ஒரு பயணத்தில் கண்டிப்பாக நான் இருப்பேன் என்று இப்பொழுதே முடிவே செய்து விட்டேன்.

சினிமா :

போன வாரம் சிறிது நேரம் கிடைத்தப்பொழுது எல்லாம் டவுன்லோட் பண்ண ஆங்கில படங்களையும், கார்த்தியிடம் இருந்து எடுத்து வந்த படங்களையும் பார்த்துக்கொண்டு இருந்தேன்..வரிசையில் சொல்வது என்றால் The shawshank redemption, A clockwork orange, Full metal jacket, Kite runner etc.,கிட்டதட்ட அனைத்து படங்களுமே நமை வேறு மாதிரியான மனநிலைக்கு எடுத்து செல்ல கூடியவை..சாதரணமாக நடந்து செல்லும் பொழுதும்,சாப்பிடும் பொழுதும், உக்கார்ந்து இருக்கும் பொழுதும் கூட அதை பற்றிய சிந்தனைகளே எழுந்தன..உண்மையில் நல்ல படங்கள் என்று பார்க்கும் பட்சத்தில் ஒன்றும் இல்லை ஆனால் அது நம் உளவியல் சிந்தனையை மாற்றி அமைக்கும் பட்சத்தில் கொஞ்சம் கஷ்டம்..இதை பிரேக் பண்ணவும் மறுபடியும் இயல்பான மனநிலைக்கு திரும்புவதர்க்காகவே திரும்பவும் தமிழ் படங்களை பார்க்க செய்தேன்.உலக சினிமா என்றாலே இதுப்போல் கசக்கி பிழிந்து காயப்போடும் வகையில் தான் இருக்குமா..பார்த்ததில் சுத்தமான மொக்கை படம் என்று சொல்லப்போனால் பைட் கிளப் தான்..நல்ல வேளை நம்மூர் தியேட்டர்களில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் ஆகவில்லை..ஆகி இருந்தால் ஸ்க்ரீன் கிழிந்து இருக்கும்..மிகவும் ரசித்த படங்கள்
The shawshank redemption, A clockwork orange .

போன வாரம் அப்படி திரும்பவும் என்னை உற்சாக மனநிலைக்கு கொண்டு வர நான் பார்த்த படத்தில் மிகவும் ரசித்த வசனம்:

"ஜெயிக்க மாட்டோம்னு நினைச்சி ஆடதிங்க..தோற்க மாட்டோம்னு ஒரு பிடிவாதத்தோடு விளையாடுங்க..கண்டிப்பா ஜெயிப்பிங்க.."..

என்ன படம்னு சொல்லுங்க பாப்போம்..

இந்த கொசு தொல்லை பெரும் தொல்லைடா சாமி..

என் ரூம்மேட் ஹிந்திக்கார பய..எப்பொழுதும் டிவில இந்த 'ரியாலிட்டி ஷோவும்','சீரியலும்' தான் பார்த்துக்கிட்டு இருப்பான்..சீரியல்ல அழுவுற மாதிரி இப்ப எல்லாம் ரியாலிட்டி ஷோல கூட யாராச்சும் ஒருத்தர் அழுதுக்கிட்டே இருக்காங்க..
தமிழ் சீரியல் கூட பார்த்துரலம் ஆனா இந்த 'ஹிந்தி சீரியல்' கொடுமை இருக்கு பாருங்க..ஆண்கள் முதல் பெண்கள் வரை எப்பொழுதும் ஃபுல் மேக்அப்பில் தான் திரிவார்கள்..எப்ப பார்த்தாலும் 'சென்டி' டயலாக் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்..இப்படி பார்த்துகிட்டு இருந்த அவன் போனவாரம் you tubeல் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்..என்னடா பாக்குறனு நான் கேட்டதுக்கு அவன் சொன்னான் பாருங்க.."சாந்தி"ன்னு..நியாபகம் இருக்கிறதா வருடக்கணக்கில் தூர்தர்ஷனில் போட்டு தாக்கிய சீரியல்..இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண..ஒரே ஆறுதல் அவன் விடுமுறையில் ஊருக்கு செல்வது தான்..

ஒரே ஒரு ஜோக்:

மகன் அழுவதை பார்க்கும் அம்மா அவனிடம் சென்று..

"ஏண்டா அழுவுற.."
"கீழ விழுந்துட்டேன்ம்மா.."
"எப்ப விழுந்த.."
"அரை மணி நேரம் ஆச்சு.."
"அப்ப விழுந்ததக்கு இப்ப அழுவுறியா.."
"நீங்க வீட்ல இல்லை வெளியே போய் இருக்கிங்கன்னு நினைச்சேன்.."

டிஸ்கி:

எப்ப இருந்து இந்த திங்கள் இனிதே ஆரம்பித்தேனோ அப்பயில இருந்து வாரத்துக்கு ஒரு பதிவு தான் போடுறேன்..இந்த வாரம் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..



Monday, November 2, 2009

தொடர்கிறேன்..

1. A- Available/single - single.

2. B - Best friend - நிறையா உண்டு.

3. C- Cake or pie - ரெண்டும் தான்..பார்பி கேக் அப்புறம் மஞ்சள் பை ..

4. D - Drink of choice - நண்பர்களுக்கு தெரியும் எதுன்னு..இருந்தாலும் 'டீ' எப்ப கிடைத்தாலும் விரும்பி சாப்பிடுவேன்.

5.E - Essential items you use everyday - Water

6. F- Favorite colour - கருப்பு மற்றும் சாம்பல்.

7. G - Gummy bears or worms - அட போங்க நானும் எத்தனை தடவை தான் டிக்ஷனரிய பாக்குறது.

8. H - Hometown - பரங்கிபேட்டை .

9. I - Indulgence - தெரியுல ..!!

10. J - January/February - பொங்கல் அப்புறம் பெப்ரவரில எப்பயாச்சும் வரும் மாசி மகம் ரொம்ப பிடிக்கும்.

11. K - Kids and their names - செல்லாது செல்லாது ..

12. L - Life is incomplete with out - Friends

13. M - Marriage date - செல்லாது செல்லாது ..

14. N - Numberof siblings - 2

15. O - Oranges or Apples - ரெண்டும்..இலவசமா கிடைக்குற பட்சத்தில்.:)

16. P - Phobias/ Fears - ஒரு பெரிய பட்டியலே போடலாம்..

17. Q - Quotes for today - உப்பு விக்க போன மழை பெய்யுது..மாவு விக்க போன காத்து அடிக்குது..
இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ண ..

18. R - Reason to smile - Friends & Friends only.

19. S - Season - Winter

20. T- TAG 4 PEOPLE - கிஷோர், கார்த்திகேயன், Varadaradjulu.P, 'காலடி' ஜெகநாதன்.

21. U- Unknown fact about me - Most Laziest guy in the world.

22. V - vegetables you dont like - கத்திரிக்காய்.

23. W - Worst habbit - நிறையா இருக்கு குறிப்பா சோம்பேறித்தனம்.

24. X - Xrays you had - எதுவும் இல்லைன்னு சொல்லறதுக்கே பயமா இருக்கு..

25. Y - Your favourite food - இப்போதைக்கு எங்க வீட்டு சாப்பாடு கிடைத்தாலும் என்னோட விருப்பமான உணவு தான்.

26. Z - Zodiac sign -
virgo

தொடர்ப்பதிவிர்க்கு அழைத்த thenammailakshmanan அவர்களுக்கு நன்றிகள் பல..


Saturday, October 24, 2009

திங்கள் இனிதே-1


அடியேனும் இனிமேல் திங்கள்கிழமை திங்கள்கிழமை போன வார நியாபகங்களை 'நான் தூசி தட்டி உங்களை தும்ம விடலாம்னு' இருக்கேன் எதாச்சும் ஒரு பெயர் அதற்கு பொருத்தமா வைக்கனுமே..என்ன வைக்கிறது..'காபி வித் வினு' எப்படி இருக்கு..கொஞ்சம் ஓவரா இருக்கு இல்ல..சரி 'மொக்க முருகேசு' ..ம்ம்ம்..இதுக்கு மட்டும் எல்லாம் கோரசா ஓகே சொல்லுவிங்களே..அதுவும் இல்லை..திங்கள் இனிதே..இதான் சரி..இனி இனிதே ஆரம்பிப்போம்...

-------------------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி போன வாரமே முடிஞ்சு போனாலும் அதை பற்றி போன வாரம் எழுத முடியவில்லை..சரி அதனால என்ன இப்ப பார்க்கலாம்..பொதுவா தீபாவளினா எல்லாம் பொதுவா நம்ம ஊருல தீபாவளி கொண்டாடுற சுகமே தனின்னு சொல்லுவாங்க..யாரு சொன்னது..இல்ல யாரு சொன்னதுன்னு தான் கேக்குறேன்..நான் இங்க(அமிரகம்) வந்து இது இரண்டாவது தீபாவளி..துபாய்ல தீபாவளி கொண்டடங்களை பார்க்க வேண்டும்..அது போதுங்க..அதுக்கு அப்புறம் தீபாவளி ஆச்சுனா நீங்க இங்க வந்து தீபாவளி கொண்டாடுவிங்க வருஷா வருஷம்..அவ்வளவு கொண்டாட்டங்கள்..அஞ்சு நாள் விடுமுறை எப்படி போனது என்றே தெரியவில்லை..பட்டாசுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சப்ளை செய்யப்படும் நாம் வெடிக்கிறமோ இல்லையோ..ஒரு பெரிய திடலில் பந்தல் அமைத்து வருகிறவர் போகிறவர்களை எல்லாம் கூப்பிட்டு கறிசோறு பரிமாறுவார்கள்..தீபாவளி அன்று மட்டும் எல்லாருடய வீடு தண்ணீர் குழாய்களிலும் காலையில் இருந்து எண்ணெய் தேய்த்து குளிக்க எதுவாக எண்ணையும் தண்ணீரும் மாற்றி மாற்றி வர ஆரம்பித்து விடும்..அன்னிக்கு மட்டும் எல்லா திரை அரங்குகளிலும் ரசிகர் மன்றகாட்சிகள் இலவசம் தான்..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இதுபோதும் என்று நினைக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------- பேராண்மை படம் பார்த்தேன்..சத்தியமாக தியேட்டரில் இல்லை.எதோ ரஷ்ய மொழியோ இல்லை ஜெர்மனி மொழி தழுவல் என்கிறார்கள்..எனக்கு என்ன தெரியும்..தமிழில் இதுப்போல் ஒரு படத்தை இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்..திரைக்கதையில் பெரிய தொய்வு என்றாலும் மிக வித்தியாசமான முயற்சி..இயக்குனர் முதல் அனைவரும் கடுமையாக உழைத்து இருப்பார்கள்..ஏன் என்றால் படம் முழுவதும் மலையும் அதை சார்ந்த இடங்களில் மட்டுமே எடுத்து உள்ளனர்..அயங்காரின் முதல் உருப்படியான படம்.ஜெயம் ரவிக்கும் இப்படம் ஒரு மைல்கல். அவரும் கடுமையாக ஹோம் வொர்க் செய்து இருப்பார்.வாய்ஸ் மாடுலேஷன் முதற்கொண்டு கவனம் செலுத்தி இருக்கிறார்..வித்யாசாகர் பாடல்களை 'இயற்கை' அளவிற்கு போட்டு கொடுத்து இருந்தால் கூட படம் இன்னும் பெரிய அளவில் பிக்-அப் ஆகி இருக்கும்..ஜனநாதன் தான் சொல்ல வந்த 'கருத்து' ஓவர் டோசாக போகாமல் பார்த்துக்கொண்டு மற்ற ரசிக்கும் அம்சங்களையும் சேர்த்து படத்தை தருவார்..(உதா - ஈ )..இந்த படத்திலும் அதே மாதரியே முயற்சி செய்து எங்கயோ கோட்டை விட்டு இருக்கிறார்..இருந்தாலும் ரசிக்கலாம்..

-----------------------------------------------------------------------------------------------------------------


ஒரு ஜோக்..

ஒரு வெள்ளைக்கார சுற்றுலாப்பயணி டெல்லியை சுற்றிப்பார்க்க வருகின்றார்.

ஒரு 'கைட்'டை அழைத்துக்கொண்டு முதலில் தாஜ்மஹால் செல்லும் அவர்..
அந்த கைட்க்கிட்ட "இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆச்சு" என்று கேக்க..

"சுமார் 200 ஆண்டுகள் ஆனது".. கைட்

"எங்க ஊரா இருந்தா இதை 40 வருடத்திலேயே கட்டி முடித்து இருப்போம் என்ன ஊரோ இது"..வெள்ளைக்காரர்.

அதன்ப்பிறகு இருவரும் செங்கோட்டை செல்ல அங்கயும் அந்த வெள்ளைக்காரர் இதே கேள்வியை அந்த கைட்க்கிட்ட கேக்க..


"50 ஆண்டுகள் ஆனது" என்று கைட் சொல்ல..

மறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் "எங்க ஊரா இருந்தா இதை ஐந்து வருடத்தில் முடித்து இருப்போம் என்ன சோம்பேறி மக்களோ நீங்கள்"..என்கிறார்.

கடைசியாக இருவரும் குதூப் மினார் செல்கின்றனர்.

மறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் "இதை முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது".?

"நேத்து நான் இந்த இடத்துக்கு வந்தப்ப கூட இந்த இடம் காலியா தான் இருந்தச்சு..இன்னிக்கு தான் இது இந்த இடத்துல இருக்கு"..கைட்.

"....?!" ..வெள்ளைக்காரர்.

Thursday, October 22, 2009

அன்று ஒரு இரவில்..

சிவா தன் கையில் பிடித்து இருந்த லார்ஜ் வோட்காவை போதையில் சரிந்து இருந்த கண்களால் பார்த்துக்கொண்டு இருந்தான்..

மேலே சுழன்று கொண்டு இருந்த அலங்கார மின் விளக்குகள் அங்கே சுற்றி இருந்த மனிதர்களை இன்னும் பல வண்ணங்களில் காட்டியது.

துபாய்க்கு டெபுடேஷனில் வந்ததில் இருந்து சிவா தனியாக பார்ஃக்கு வருவது இதான் முதல் முறை.எப்பொழுதும் கம்பெனி கொடுக்கும் விஷ்ணு இந்த முறை விடுமுறைக்கு இந்தியாவில்.
முதல் வெளிநாட்டு பயணம்..தப்பு செய்ய அதிக சந்தர்ப்பம் இருந்தும் தடுத்த ஒரே விஷயம் காதல் மனைவி ஸ்வேதா.கல்யாணத்திற்கு பின்பு தான் அதிகம் காதலிக்க தொடங்கி இருந்தான்.

இங்கு வந்த எட்டு மாத காலங்களில் ஒரு நாள் கூட சிவாவோ இல்லை அவளோ ஃபோன் செய்யாமல் இருந்தது இல்லை..இப்பொழுது தான் புதுசாக ஒரு MNC கம்பெனியில் சேர்ந்து இருக்கிறாள் என்று ஸ்வேதாவின் நினைவுகளை மேலும் வார்த்தைப்படுத்த முடியாமல் கலைத்தது சிவாவின் எதிரே சற்று நேரத்திற்கு முன் வந்து அமர்ந்த ஒரு இளமங்கையின் செயல்.

சிவாவை நோக்கி தான் எதோ சைகை செய்தாள்..

"if u don mind, Can u buy some drink for me "..அவள்.


"ya..Sure "..சிவா.

அவன் நிலை தடுமாறி அவனை அறியாமல் வாயில் இருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்..

ரஷிய பெண் சாயல்..பார்த்தவுடன் கிறங்கடிக்கும் அழகு..கண்டிப்பாக carl girlஆக தான் இருக்க வேண்டும்..ஏன் என்றால் அவர்கள் தான் பேச்சை இதே மாதிரி ஆரம்பிப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த பொழுதே அதை உறுதிப்படுத்தும் விதமாக..


"Do u need a company for this Night"..என்று சிவா வாங்கி தந்த வோட்காவை பருகியப்படியே கேட்டாள்..

அது வரை அவனுக்கு அந்த எண்ணம் இல்லாவிட்டாலும் ஒரு சின்ன சபலம் தட்டியது..
விஷ்ணு உடன் இல்லாமல் ஃபிளாட்டில் அவன் மட்டும் தனியாக இருந்ததை எண்ணிய பொழுது ஆசை-சபலம் பல மடங்கு கூடி இருந்தது..

மறுபடியும் காதில் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள்..


"Do u need a company for this Night"..

"yaa..Wait"..சிவா.

உள்மனம்.."டேய்..ஸ்வேதா, காதல், கலாச்சாரம்" என்று பல குறிச்சொற்களை அலறிக்கொண்டு இருந்தது..இருந்தாலும் "டேய்..ச்சீ..காமத்தில் என்னா இருக்கு..நீயும் ஆசைய மறைக்க கலாச்சாரம்னு முகமூடிய போட்டுக்க பார்கிறியா என்ன.. வெட்க்கபடாம இழுத்துட்டு போ" என்று சிவாவுக்கு உள்ளே இருந்த தத்துவ ஞானி ஃபுல் போதையில் உளறிக்கொண்டு இருந்தான்..

எதோ தப்பு பண்ண போறோம்னு அவன் உள்மனம் நினைத்துக்கொண்டு இருந்தப்பொழுதே மொபைல் அலறியது..

"ஸ்வேதா காலிங்.."

என்ன ஆச்சு மணி நைட்டு 12 ஆகுது..இந்தியாவில் 1:30 ..இந்த சமயத்தில் என்று நினைத்துக்கொண்டே ரஷியாக்காரியிடம் "ஒரு நிமிஷமுன்னு" சைகை மட்டும் காட்டிவிட்டு வெளியே வந்தான்..

"யே என்ன ஆச்சு..இந்த சமயத்தில் Anything serious"..சிவா.

"இல்லை..அது எல்லாம் ஒன்ணும் இல்லை..தூக்கம் வரல அதான் பண்ணேன்.."..ஸ்வேதா.

"ஏன்..என்ன ஆச்சு.."

"நீ எப்படா வருவா..ஊருக்கு.."..ஸ்வேதா.

"அதான் தெரியும்ல..இன்னும் நாலு மாசம் பொறுத்துக்கோ..ஓடியந்த்ருவேன்..இன்னும் நீ விஷயத்தை சொல்லலை.."..

"இல்லை சிவா..அதான் சொல்லி இருக்கேன்ல என் டீம்ல வேலை செய்யுற பார்த்தி.."

"ஆமாம் அவனுக்கு என்ன உடம்பு எதாச்சும் சரி இல்லையா..அதான் இவளோ நேரம் அந்த வருத்தத்துல தூக்கம் வரலையா உனக்கு.."..சிவா.

"யே..ஓத வாங்குவ..அது எல்லாம் ஒன்ணும் இல்லை.."..ஸ்வேதா.

''ம்ம்..பின்ன''..

"இல்லை..நல்லா தான் பேசிக்கிட்டு இருப்பான்..திடிர்னு இன்னிக்கு சினிமாக்கு போலாமான்னு கேக்குறான்..கண்டிப்பா அவன் பார்வை வேற அர்த்தம் சொன்னுச்சு "..ஸ்வேதா.

"......".. சிவா..

''ரொம்ப பயமா இருக்கு..அவன் கேட்டதால சொல்லல..எதோ ஒரு தெளிவு இல்லாம இருக்கு..நான் எதையோ சமிபமா ரொம்ப மிஸ் பண்ணுறேன்..கண்டிப்பா அது நீ தான்.. இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரியுல..வேலையே விட்டுடலாம்னு பாக்குறேன்.."

"யே..நீ தான் போர் அடிக்குது வேலைக்கு போறேன்னு சொன்ன..அதனால தான் நான் ஓகே சொன்னேன் ஸ்வெத்..மத்தப்படி அது உன் இஷ்டம் தான்..ஆனா ஒன்னு உன் மேல எனக்கு உன்னை விட நிறையா நம்பிக்கை இருக்கு..சோ..எதை பத்தியும் அலட்டிக்காம தூங்கு.."

"ம்ம்..முடிஞ்சவரைக்கும் ஊருக்கு சீக்கிரம் வர பாருடா.."..ஸ்வேதா.

"கண்டிப்பா..குட் நைட்"..சிவா.

''குட் நைட்"..ஸ்வேதா.

போதை தெளிந்தது போல் இருந்தது..எதையோ மறந்தவனாக பார் உள்ளே போனான்..க்ளாசில் இன்னும் இரண்டு சிப் வோட்கா பாக்கி இருந்தது அதை மட்டும் அடித்து விட்டு சுற்றி முற்றி பார்க்காமல் காதில் விழுந்த வார்த்தைகளை வாங்காமல் சிவா ஃ பிளாட்டை நோக்கி நடையை கட்டினான்.