Tuesday, July 28, 2009

எங்க ஆயாகிட்ட பிடிக்காத பத்து..

எங்க ஆயாவுக்கு என்கிட்ட பிடிக்காத ஐந்து விஷயங்கள் :

1 அவங்க டீவி சீரியல் பாக்குறப்ப கண்டமேனிக்கு சேனலை மாற்றுவது..

2 அவங்க சாப்பிடுரப்ப "வயசானா கம்மியா சாப்பிடனும் இப்படி ரைஸ் மெஷின் மாதிரி
அரைச்சு தள்ள கூடாது"..அப்படின்னு கண்ணு வைக்கிறது.

3 எதாச்சும் பூஜை நடக்குறப்ப வரிசையா மாட்டி இருக்குற எல்லா ஃபோட்டோவையும் தொட்டு கும்பிட்டு விட்டு இறந்துப்போன தாத்தா ஃபோட்டோவ மட்டும் கும்பிடமா நக்கலா திரும்பி எகத்தாளமா அவங்களை பார்த்து சிரிக்கிறது.

4 எங்க அப்பா அம்மா வீட்டுல இல்லாதப்ப என்கிட்டே அவங்கள பத்தி பொலம்ப்பரப்ப.."அய்ய..நான் என்ன உன் புருஷன்னா என்கிட்டே இன்னமோ உன் மாமியார் மாமனாரை கொற சொல்லுற மாதிரி பொலம்புற"..என்று பொறியறது.

5 பக்கத்து வீடு கிழவிக்கிட்ட என்ன பத்தி பெருமையா "வினோத் ரொம்ப அமைதியான மரியாதை தெரிஞ்ச பையன்" என்று சொல்லும்பொழுது "ஏய் கிழவி டிவி ரிமோட் எங்க வச்ச"..என்று நான் கேக்குறது.

எனக்கு எங்க ஆயாகிட்ட பிடிக்காத ஐந்து விஷயங்கள்..

1 எல்லா பசங்களும் பொதுவா விளையுடுரப்ப என்ன மட்டும் தனியா கூப்பிட்டு வாயுல லட்டு, ஜிலேபின்னு திணிக்கிறது..எவனாச்சும் அதை உற்று பார்த்தான் என்றால்.."கொள்ளியுல போறவன் வளருற புள்ள சாப்பிடறத இப்படியா பார்ப்பான்"..என்று அவங்களை திட்டுறது.

2 நான் வீட்டுக்குள் நுழைவதை பார்த்தவுடன் ரிமோட்டை எடுத்து ஒளித்து வைப்பது.

3 யாராச்சும் பொண்ணுங்க தப்பி தவறி வீட்டுக்குள் வரப்ப அவங்க கேக்குற மாதிரி "ஏன்டா வினோத், பல்லு விளக்கிட்டு சாப்டா என்னடா" என்று தெளிவாக சொல்லுவது.

4 டீவில எதாச்சும் "முக்கியமான" அக்ஷன் படங்கள் இரவு நேரங்களில் பார்க்கும் பொழுது "டக்" என்று விளக்கை போட்டு என்னை "திக்" ஆக்குவது..

5 "அய்யயோ அந்த ரவி பயலுக்கு இப்படி ஆயிடுச்சே" என்று சீரியல்லில் வரும் பாத்திரங்களை எல்லாம் நினைத்து கண்ணீர் விட்டு புலம்புவது.

டிஸ்கி: எது எப்படி இருந்த என்ன மொத்தமா பத்து வருது இல்ல அதான் மேட்டர்..

Monday, July 27, 2009

தீதும் நன்றும்

சங்கர் சோற்றை பிசைந்து விட்டு கையை பார்த்தான்..
மாயா உள்ளே நுழைந்தான்.

"எலே..சங்கரு..நான் சொல்றத கொஞ்சம் கேளுடா..வேலை முடிஞ்சு ஒழுங்கா வீட்டுக்கு வந்தருப்ப..அந்த பசங்க சகவாசம் வேணாம்ப்பா.."..சங்கரின் அம்மா.

"எம்மா..சோத்த போடுறியா..உபதேசம் அப்புறம் பண்ணு.."..சங்கர்.

"சங்கர் அண்ணா இப்ப தான் S.I கிட்ட பேசுன்னேன்.. சேத்தியாதோப்பு, மீன்சுருட்டி ரெண்டு செக்போஸ்டும் பயங்கர அலேர்டா இருக்கு.. காடுவெட்டி பாலம் வரைக்கும் ஒரு வண்டியுல போய்..கிழ்பக்கம் ஆத்தோட நடந்து போய்..அங்க இருந்து வேற வண்டியுல போவ சொன்னாரு..வண்டி ஏற்பாடு பண்ணிட்டேன்.."..மாயா.

"வக்கீல்கிட்ட பேசுனியா.."..சங்கர்.

"பேசுனேன்..அவரும் அதன் சொல்றாரு..ஜாமீன் கிடைக்காது..தஞ்சவூர் கோர்ட்ல சரண்டர் ஆகுறது தான் நல்லதுன்னு சொல்றாரு.."

"சரி நான் வரேன் போ.."..சங்கர்.

மறுபடியும் சோற்றை பிசைய ஆரம்பித்தான்.

மாரியப்பன் சமாதி முன்பு எருக்கன்னும் அவனுடுய வக்கீலும் நின்று கொண்டு இருந்தனர்..

"சின்ன பையன் அண்ணன் இவன்..என்கிட்ட மோத வேண்டியது தானே பொட்டை பசங்க..த்தா அந்த புருஷோதம்மன் கதை நாளைக்கு ஊரு பாக்கணும்"..எருக்கன்.

"நாளைக்கு சங்குமரம் பக்கத்துல பாண்டியன் கடை 8 மணிக்கு புருஷோத்தமன் வருவான்.. அவன் தம்பியும் அவனும் மட்டும் தான்..முடிச்சிட்டு..பெரியமடு கிட்ட வண்டி நிக்கும்.. க்வாலிஸ்..பச்ச கலர்..மெட்ராஸ் வண்டி..நான் தான் லோக்கல் வண்டி வேணாம்னு சொன்னேன்..எறிடுங்க..மூணு மணி நேரத்துல மெட்ராஸ்..அங்க நான் கொடுத்த அட்ரஸ்ல தங்கிகுங்க..அப்புறம் நான் போன் பண்ணதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்.." ..வக்கீல்.

கோபி அவன் கூட சங்கரை அழைத்து கொண்டு வந்தான்..

"டேய்..இவன் பொட்டலம் போடுற பையன் தானே இவன எதுக்கு கூப்பிட்டு வந்த.."..எருக்கன்.

"அண்ணா..ஷார்ப் கை..நாளைக்கு வரேன் ஒத்துகிட்டன்..எல்லாம் பேசிட்டேன்..நீ ஒன்னும் பயப்புட வேணாம்.."

"டேய்..நாளைக்கு பெரிய வேலை தெரியும்ல..எஸ்கேப் ஆச்சு அதுக்கு அப்புறம் பையன் உஷார் ஆயுடுவான்.."..வக்கீல்.

"அது பாத்துக்கலாம் எல்லாம் பேசியாச்சு..பையன் நம்ம பையன்.."

சங்கர் சாப்பிட மனது இல்லாமல் சோற்றையே பார்த்து கொண்டு இருந்தான்.

"அண்ணா இந்த தடவை சரண்டர் ஆனோம்னா லைப் நிச்சயம்னு வக்கீல் சொல்றாரு..கொஞ்சம் கஷ்டாமா தான் இருக்கு.." ..மாயா.

சங்கர் மாயவை பார்த்தான்.

சங்கு மரத்திற்கு கீழ் தெளிவான போதையில் சங்கர், கோபி கூட நின்று கொண்டு இருந்தான்.

"பொருளா பின்னாடி வைக்காத சங்கரு..இடுப்புக்கு சைடுல வை.. என்னை மட்டும் பாலோ பண்ணு..நான் சொல்றத மட்டும் செய்.."..கோபி.

புருஷோத்தமன் தன் தம்பியுடன் பாண்டியன் கடைக்குள் நுழைந்தான்.
ஒரு நிமிடம் கழித்து பக்கத்தில் இருந்த இருட்டு சந்தில் இருந்து எருக்கன் நான்கு பேரோடு திடிரென்று பாண்டியன் கடைக்குள் நுழைய..
கோபியும் சங்கரும் சங்கு மரத்தில் இருந்து வேகம் எடுத்து பாண்டியன் கடைக்குள் நுழைந்தனர். "..த்தா சாவுடா.." .. எருக்கன் பாண்டியனை சரமாரியாக வெட்டி கொண்டு இருந்தான்.

கடைக்குள் நுழைந்த வேகத்தில் கோபி சங்கரை பார்த்து..
"இடுப்புக்கு கிழ சொருகுடா..மவனே பொழைக்கவே கூடாது அவன்.."..கோபி.

சங்கர் கோபி சொன்னதை போல் இடுப்புக்கு கிழே விலா எலும்பின் சற்று மேலே குத்தினான். புருஷோதமன்னும் அவன் தம்பியும் கிழே ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

எருக்கணும் மற்றவர்களும் வக்கீல் சொன்ன மாதிரி பச்ச கலர் வண்டியில் ஏறியவுடன் வண்டி சிட்டாக பறந்தது. இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு.. கோபி இட்லி பொட்டலத்தை பிரித்து சங்கரிடம் நீட்டினான்..

"சாப்பிடு மாமு..முதல் தடவை பீலிங்கா தான் இருக்கும்..அப்படியே பழகிடும்.. பயபுடாத வக்கீல் பாத்துப்பாரு..எல்லாம் துட்டு மாமு.."

சங்கர் கையை கழுவி விட்டு இட்லியை எடுத்தான்.. அவனுக்கு கையில் ரத்த வாடை அடிப்பது போல இருந்தது..
கையயை உற்று நோக்கினான்.

ரத்தகறை அப்படியே இருப்பதாய் போல் இருந்தது.

மாயா சங்கரை பார்த்து.."அண்ணா சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிங்கனா கிளம்பிடலாம்.. அண்ணா அப்புறம் அம்மாவிற்கு நாளைக்கு நினைவு நாள் நியாபகப்படுத்த சொன்னிங்க.."

"ம்ம்ம்.."..சங்கர்.

அவனால் சாப்பிட முடியவில்லை..பத்து வருடங்களுக்கு முன்னால் பண்ண முதல் கொலையின் ரத்தகறை இன்னும் அவன் கையில் படிந்து இருந்தது.

டிஸ்கி: கொஞ்சம் Non-Linear அடிப்படையில் ட்ரை பண்ணி இருக்கேன்.

Saturday, July 25, 2009

வாழ்க்கை ஒரு வட்டம்..


எனக்கு இந்த 'விருது' "பிரியமுடன் வசந்த்" அவர்களால் கொடுக்கப்பட்டு ஒரு பத்து நாட்களுக்கு மேலேயே ஆயிடுச்சுன்னு நினைக்குறேன். அதுக்கப்புறம் நம்ம ஜெகநாதன் வேற கொடுத்தாரு. என்னா அப்படி யாரும் கொடுக்காமா இருந்து இருந்தாங்கனு (அப்படி ஒரு நிலைமை வந்து இருக்காதுன்னு நினைக்கிறேன் ஏன்னா ஆரம்பிச்சி வச்சதுமே ஜெட் வேகத்துல எல்லோரிடமும் போய் சேர்ந்துடுட்டுச்சு) நானே யாருக்காச்சும் 'மெயில்' அனுப்பி கேட்டு வாங்கி இருப்பேன்..

ரூல்ஸ்ப்படி பார்த்திங்கனா இந்த விருதை ஒரு ஆறு பேருக்காவது கொடுக்கனுமா..நான் யாருக்கு கொடுக்க வேண்டும்னு நினைக்கிறப்பவே நிறையா பேர் 'துண்ட' போட்டு அந்த இடத்தை பிடிச்சிடாங்க..ஆஹா இப்படியே போச்சுனா நம்மாலே "ஆறு ப்ளாக்" ஆரம்பிச்சு அதுக்கு தான் கொடுக்கணும்னு நிலை வந்த்ருச்சுனா என்ன பண்ணுறதுன்னு உடனடி முடிவு எடுத்து த்தோ ஆறு பேரு செலக்ட் பண்ணிட்டேன்..

நல்ல வேளை இதுவரைக்கும் அங்க யாரும் துண்டு போடலுன்னு நினைக்குறேன்..

செந்தழல் ரவி..

இது என்னடா சூரியனுக்கே 'டார்ச்' காட்டுறியானு கேக்கலாம்..அவர் தான் இந்த விருது வைபோகத்தை ஆரம்பிச்சது..அதுக்காக அவருக்கு கொடுக்க கூடாதுன்னு ஆயிடுமா..
அதனால் "வலையுலகின் முடிச்சுடா மன்னன்", "டெக்னிகல் சமச்சரங்களின் அண்ணன் ", "பதிவுலகின் வேலை வாய்ப்பு மையம்", "கலாய்த்தல் கண்ணன்"..எங்கள் அண்ணன் "செந்தழல் ரவி" அவர்களுக்கு வழங்குகிறேன்.."வாழ்க்கை ஒரு வட்டம்" ஆரம்பிச்ச இடத்துல முடியனும்மில அதான்.

கிஷோர்..

பதிவுலகத்திற்கு வரும் முன்னரே என் நண்பன்..நக்கல், நையாண்டி மற்றும் நகைச்சுவை கலந்து எழுதுரதானாலையே அவன் சீரியஸ் பதிவு போட்ட கூட அது "நகைச்சுவையாவே" தெரியுது..இப்ப வேலையுல மும்முரமா இருக்கறதால முன்போல் எழுதுவது இல்லை (என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு பாருங்க)..மறுபடியும் அதே வேகத்துல எழுத ஆரம்பிச்சானா நல்லா இருக்கும் (அவ்வளவு சீக்கிரத்துல பதிவுலகை விட்டு வெளியே போய் உருப்பட விட்ருவோமா)..இருந்தாலும் அவனோட இந்த நேர்மையையும், திறமையையும் மற்றும் ...(அவசரத்துக்கு வார்த்தை வாயுல சீக்கிரம் சிக்க மாட்டுதே ம்ம்ம்...ரைட்டு) அவனோட இந்த அர்பணிப்பு உணர்வையும் கண்டு இந்த விருதை அவனுக்கு கொடுக்குறேன் (அய்..அடுத்த வாரம் சிதம்பரம் சாரதாராம்ல ட்ரீட் நிச்சயம்).

முனியப்பன் சார்..

ஆரம்பத்தில் இருந்தே என்னை ஊக்குவிக்கும் நல்ல மனிதர் மற்றும் பதிவர்..இவருடுய பல பதிவுகள் அனுபவ பதிவுகள் தான்..மருத்துவராய் இருப்பதால் அவருக்கு மருத்துவ உலகில் நேர்ந்த அனுபவங்கள், அப்புறம் அவரிடம் சிகிச்சைக்கு வரும் அன்பர்களிடம் ஏற்படும் அனுபவங்கள், அவர்களின் நோய்களை பற்றிய குறிப்பு, நோயின் தீவிரத்தை அவர்களின் வாழ்கையில் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி கூறி அதை எளிதாக நம் மனதில் ஏற்றுவது போல் பதிவிடுகிறார்.அப்புறம் அவரின் "நீதிபதி" அப்பாவை பற்றியும், குடும்பத்தை பற்றியும் அவ்வபொழுது எழுதுகிறார்.கவிதையிலும் அவ்வபொழுது கலக்குகிறார். இந்தாங்க நீங்களும் பிடிங்க விருதை.

.செந்தில்வேலன்..

அமீரக பதிவரான இவரின் ப்ளாக்கை திறந்தாலே "பட்டாம்பூச்சி" பறப்பதை போல் உணர்விர்கள்..அவ்வளவு நேர்த்தியாக,அழகாக இருக்கும்.அழகு தமிழில் எழுதி வருகிறார்..அவரின் பல பதிவுகள் கண்டிப்பாக பல பேருக்கு உபயோகமா இருக்கும்..குறிப்பா "நமது பயன்பாட்டில் தமிழ்" அப்படிங்கிற ஒரு தொடர் எழுதிக்கிட்டு இருக்காரு..அவ்வளவு தமிழ் வார்த்தைகள் அதுல கொட்டி கிடக்கு..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்ற மாதிரி இந்த ஒரு இடுகை போதும் நம் அவரை பற்றி தெரிந்துக்கொள்ள.தொடர்ந்து எழுதுங்க "வாழ்க தமிழ்".

புதுவை சிவா..

எங்க ஊருக்காரரு..அதனால மட்டும் இல்லை விருது..இவர் தொடர்ந்து வெளியிடும் ஈழம் மற்றும் ஈழத்து மக்களை சார்ந்த செய்திகள் தான் காரணம்..அவர் அதில் காட்டும் ஈடுப்பாடு, அதற்காக அவர் சேகரிக்கும் செய்திகள்,செலவிடும் நேரம் எல்லாமே காரணம்..அதனால கண்டிப்பா இந்த விருதை நீங்க வாங்கி தான் ஆகணும்.

???

இவரு ரொம்ப நாளா நல்லா எழுதிக்கிட்டு இருந்தாரு..நான் யாரு பதிவை திருப்பி திருப்பி படிக்கிறேனோ இல்லையோ இவர் பதிவை விழுந்து விழுந்து, முட்டி மோதி திரும்ப திரும்ப படித்து இருக்கிறேன்..இவர் இருக்கருதால தான்(!!!) இன்னும் நான் அடிக்கடி எதாச்சும் பதிவு போடுறேன்..ரொம்ப நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவரு..இப்படி இருந்தவரு கொஞ்ச நாளுக்கு முன்னாடி காணாம போய்ட்டாரு..அவர் யாரும் இல்ல நம்ம "வினோத்கெளதம்" தான்..(த்தூ) அப்படி எல்லாம் சொல்லாம கொள்ளாம துப்பக்கூடாது.

Monday, July 20, 2009

பதிவர் சந்திப்பு-துபாய்.

முதல் நாள் இரவு :

துபாயில் பதிவர் சந்திப்பு அண்ணாச்சி தலைமையில் நடைப்பெறுகிறது என்று பதிவை பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன்..இந்த தடவையும் போய் விடுவது என்று..
முதல் நாள் இரவே ஆப்பரசன் ச்சே கலையரசன் அறையில் போய் தங்கிவிட்டேன்.நான் வருவதை முன்னாடியே தெரிந்து வைத்து இருந்ததால் என்னை எப்படி சீக்கிரம் துரத்தவது என்று அவர் செய்த பிரியாணியை கொடுத்து முதல் அஸ்திரத்தை எனக்கு எதிராக வீசினார்..அசருவேனே நான் அசால்ட்டா ஒரு முழு ப்ளேட் அடிச்சிட்டு அப்புறம்னு திரும்பினேன்..இரண்டாவது அஸ்திரமாக அவர் தனக்கு தானே எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எல்லாம் தன்னுடுய கணினியை திறந்து எனக்கு போட்டு காட்டினர்..இந்த தடவை சற்று கிர் அடித்தாலும் சுதாரித்து கொண்டேன்..அதற்கு அப்புறம் எனக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாமல் இங்கேயே தங்கி தொலை என்று மனதில் நினைத்து கொண்டார்..

பதிவர் சந்திப்பு நடந்த நாள்..

சாயங்காலம் கிளம்பி நின்று கொண்டு இருந்த என்னையும் கலையையும் சுந்தர்ராமன் சார் வந்து அழைத்து கொண்டார்..அவரின் வீட்டுக்கு சென்ற பின்னர் அங்கு இருந்து கிளம்பி கரமா பூங்காவை சென்று அடைந்தோம்..நாங்கள் வருவதற்கு முன்பே செந்தில்வேலனும், கார்த்திகேயனும் வந்து இருந்தனர்.

அதன்ப்பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கினர்..அண்ணாச்சி என்று சொன்னவுடன் நான் எதோ பெரியவர் என்று நினைத்து எதிர்ப்பார்த்து வந்தவுடன் பார்த்தால் வந்தவர் 'யூத்'..சரி தான் என்று நினைத்துக்கொண்டு வடை டப்பாவை பார்த்தால் கலை கையில் கெட்டியாக பிடித்து இருந்தார் ஆனால் குசும்பன் 'கால்' செய்து தான் வரும் வரை யாரும் அதை திறக்க கூடாது என்று சொல்லி இருந்ததால் அவர் வந்தப்பிறகு தான் திறந்தனர்.. அதன்ப்பிறகு விவாதிக்க தொடங்கினோம்..

முக்கியமான துளிகள் சில..

* இனிமேல் யாரும் மொக்கை போடுவதாக இருந்தால் கூட அதை வேறு தளத்தில் மொக்கை போடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.

* புது பதிவர்கள் பழைய பதிவர்கள் என்று யாரும் கிடையாது..உங்களுக்கு எதாவது பண உதவி தேவைப்பட்டால் கூட நான் மூத்த பதிவர் தானே என்று எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் என்னை அணுகலாம் என்று அண்ணாச்சி ஒருஅதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

* குசும்பர் ரொம்ப வேர்த்ததால் அங்கே ஆசாத் அண்ணாச்சி எடுத்து வந்து ஒரு புஸ்தகத்தில் ஒரு புத்தகத்தை தேடி கண்டுப்பிடித்து ரொம்ப வேகமாக விசிறினார்..அந்த புஸ்தகம் எந்த புஸ்தகம்ன்னு சொல்லி பதிவு 'உலகில்' நான் 'விளம்பரம்' தேடி கொள்ள விரும்பவில்லை.

* "கிழை ராசா" எல்லாரையும் வளைத்து வளைத்து படம் பிடித்து கொண்டுஇருந்தார்..அதே மாதிரி படம் எடுத்த வேகத்தில் முதல் பதிவை போட்டு தான் 'கில்லி' என்பதை நிருபித்து விட்டார்..

* அய்யனார் எப்பொழுதும் போல் "எதாவது உருப்படியா பண்ணுவோம்" என்றுசொல்லி கொண்டு இருந்தார்..ஆனால் அதை 'என்னை' தவிர யாரும் காதுகொடுத்து கேட்டதாக தெரியவில்லை..

* பதிவர் நாகா இப்பொழுது தான் எழுத தொடங்கி..அவரின் எழுத்து நடையின்முலம் குசும்பன் மாதிரி சற்று வயதான,அனுபவ பதிவரில் இருந்து என்னைமாதிரி இளைய பதிவர் வரை கவர்ந்து உள்ளார் என்பதை ஒருமனதாக எல்லோரும் ஒத்துக்கொண்டோம்..அவரோடைய வாசிப்பனுபவம்(கொஞ்சம்சீரியஸ்ஸா தாங்க சொல்றேன்) தான் இதற்கு காரணம் என்று அய்யனார் சொன்னார்.

* செந்தில்வேலனின் எழுதிய 31 பதிவுகளில் 24 பதிவுகள் யூத்ஃபுல் விகடனில் வந்து இருக்கும் பொழுதே அவரின் பதிவு தரத்தை நம்மால் உணர முடிகிறது என்று பேசிக்கொண்டோம்.

* தினேஷ் என்ற இலங்கை தமிழ் அன்பரும் வந்து இருந்தார்..அவரின் தமிழ் கேக்க அழகாக இருந்தது.

* ராஜேந்திரன் என்ற அன்பரும் இந்த பதிவர் சந்திப்பு விஷயத்தை தெரிந்துக்கொண்டு கலந்துக்கொண்டார்.

* நான் ஆதவன்,கோபிநாத் அப்புறம் சென்ஷியும் ஒரு குருப்பாக வந்துஇறங்கினார்கள்..நான் சென்ஷி வயதானவராக இருப்பார் என்று கற்பனை செய்துகொண்டு இருந்த எனக்கு பெரும் அதிர்ச்சி.. "சற்று வயதானவர்" அவ்வளவே மடை திறந்த வெள்ளம் போல் பேசி கொண்டு இருந்தார்..

* ஆசாத் அண்ணாச்சி நமக்கு தெரிந்ததில் ஒரு 10% தான் பதிவாக எழுத வேண்டும் என்றார்..அப்படி பார்த்ததால் நான் எல்லாம் ஒரு இடுகைக்கு ஒரு வரி மட்டும் எழுதிவிட்டு ஓடி விட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டேன்.

* ஆசிப் அண்ணாச்சி "யாராச்சும் எதாச்சும் பேசுங்கப்பா, அட வாய திறந்து பேசுங்கப்பா " என்று சொல்லியும் யாரும் பேச முன் வராததால் அவர் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தது போல் எனக்கு ஒரு பிரமை..(பிரமை தான் உண்மைஅல்ல.)

* படகு என்ற பெயரில் எழுதும் ஒரு பெண் பதிவரும் கலந்துக்கொண்டார்.

* ஆப்பு மற்றும் ஆப்பரசன் யாராக இருக்கும் என்று பயங்கரமாக விவாதம் நடைப்பெற்றது..கடைசி வரை என்னால் யூகிக்க கூட முடியவில்லை.

* கிளியனூர் இஸ்மத்
தன்னுடுய முந்தைய ப்ளாக் தொலைந்து விட்டது என்று வருத்தப்பட்டார். என்னோட ப்ளாக் கூட தொலஞ்சு போச்சு தல என்று சொல்ல நினைத்தேன் ஆனால் மறந்து விட்டேன்.

* ஜுபேர் அவ்வபொழுது அனைத்து பதிவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தார்.

* சுல்தான் அண்ணாத்தே கடைசியா வந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார்..

* இன்னும் சில பதிவர்கள் க்ருப்பாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

* யார் பேராவது விடப்பட்டு இருந்தால் மனிக்கவும்.

டிஸ்கி: கலையரசன் சுந்தரராமன் சார் வீட்டிலேயே ஒரு வடை டப்பாவை காலி செய்து விட்டார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

Wednesday, July 15, 2009

என்னை பார்த்தா எப்படிங்க தெரியுது..

அது ஏன் எனக்கு மட்டும் இப்படி..இல்லை நான் மட்டும் தான் எல்லோருக்கும் இப்படி தெரியுரனா..என்னன்னு கேக்குறிங்களா..இருங்க சொல்றேன்..

முதல்ல
லவ் மேட்டர்ல இருந்து ஆரம்பிப்போம்.

நான்
பாட்டும் காலேஜ்ல படிக்கிறப்ப செவ்வனேன்னு ஹாஸ்டெல்ல படுத்து தூங்கிட்டு இருப்பேன் அங்க இருந்து நம்ம பய வருவான்..வந்த வேகத்துலேயே என்க்கிட்டசொல்லமாட்டன் ஆர்டர் தான் போடுவான் "மச்சான் கிளம்பு போகலாம்"..

"எங்கடா"..நான்.

"அகிலாண்டேஸ்வரி காலேஜ் வரைக்கும்"..(அது நாங்கள் படித்தகாலேஜில் இருந்து ஒரு பத்து மைல் தள்ளி உள்ளது)

"டேய்..உன் ஆள பார்க்க நீ போற நான் எதுக்குடா"..நான் .
"மச்சான் நீ வந்த தாண்டா ஒரு கெத்தா இருக்கும்..எனக்கு ஒரு சப்போர்ட்தான்..ஒரு பிரச்சனைனு வந்த கூட நீ ஒரு ஆள சமாளிப்ப இல்ல அதான்.."


இதுக்கு அப்புறம் நான் போவாம இருக்க முடியுமா அதான் வாயே திறக்கமுடியாதப்படி வாயுல ஐஸ் கட்டிய வச்சி தினிச்சிட்டானே..

ஆனா அங்கபோனப்பிறகு தான் தெரியும் அவன் காதல் பிரகாசமா "ஆயிரம் வாட்ஸ்" பல்பு மாதிரி எரியறதுக்கு நம்மள 'ஃபியுஸ்' போன பல்பு ஆக்கி மூலையில உக்கார வச்சு இருப்பான்னு..அட அவன் ஆளு அதுக்கு சப்போர்ட்ட்டா என்னை மாதிரி ஒரு "அல்லகையை" (பெண்ப்பால்) அது கூட கூப்பிட்டு வரும் அவன் ஆளு என்ன பார்த்த உடனே என்ன நினைக்குமுன்னு தெரியாது உடனே "உனக்கு டைம்ஆயுடுச்சில நீ போனு" அதை கிளப்பி விட்டுரும்..என்ன வில்லத்தனம் இல்ல.


இது மாதிரி சம்பவம் காலேஜ் படிச்சு முடிச்சப்புறம் கூட என்னை விடமா தொரத்திட்டு வந்து இருக்குங்க..


வீட்டுல அமைதியா உக்கார்ந்து இருப்பேன்..ஒரு கால் வரும்..


"மச்சான் என் ஆளை பார்க்க தஞ்சாவூர் வரைக்கும் போறேன் கூட வாடா அப்படின்னு"..கூப்பிடுவான் "இவன்" சிதம்பரத்துல இன்னொரு ஃப்ரென்ட்..


"டேய்..உன் ஆளு இருக்குறது தஞ்சாவூர்..நீ இருக்கிறது சிதம்பரம்..நீஅங்கே இருந்து போக வேண்டியது தானே..இதுக்கு எதுக்குடா பாண்டிச்சேரில இருந்து நான் வரணும்.."


"இல்லை..மச்சான் நம்ம செட்ல நீ தான் ரொம்ப நல்லவன்..மத்தவன் எல்லாம் வந்தா எதாச்சும் பிரச்னை பண்ணுவானுங்க..உன்ன மாதிரி டிசென்ட்டா வரமாட்டனுங்க அதாண்டா உன்னை கூப்பிடுறேன்..வந்தா திருப்பி வரப்ப வேணா பார்க்கு போலாம்டா"..அப்படின்னு ஒரு பிட்டு சேர்த்து ஓட்டுவானுங்க..இதுக்கு அப்புறம் நான் போகம்மா இருப்பன ஏன்னா அடிப்படையா எனக்கு ரொம்ப இளகின மனசு வேற..அதனால போயுடுவேன்..


இது எல்லாம் கூட பொறுத்து போலமுங்க சில நாதாரிங்க நான் வீட்டுல பெரும்பாலும் தனியா இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டு..


"மச்சான்..ஏன் ஆளு கூட பேசணும்டா வெளியே கூப்டிக்கிட்டு போன பிரச்னை ஆகிடும்..உங்க வீடு ச்சும்மா தானே இருக்கு..ஒரு அரை மணிநேரம் பேசிட்டு ஓடி போய்டுவோம்டா மச்சி.."


"டேய்..இங்க என்ன நான் வீட்டுக்கு வெளியே எதாச்சும் போர்டு மாட்டி தொங்க விட்டுருக்கான..என்ன நினைச்சிட்டு இருக்க.."


"மச்சி..சத்தியமா சொல்றேன் அரை மணி நேரம் தான்டா..பேசிக்கிட்டுதான் இருப்போம்..நீ வேணா பக்கத்துல உக்கார்ந்து பாரு"


"டேய்..அப்புறம் வாயுல எதாச்சும் வந்துற போகுது..சான்சே இல்லை வேற வீடு பாரு..ச்சே வேற ஆளு பாரு..."


"சரிடா..நாளைக்கு அவ ஃபிரென்ட் மீனா வேற ஏன் ஆளு கூட வரேன்னு சொன்ன..அவ வேற எதோ உன்னை பத்தி விசரிச்சாலம் "வினோத் எப்படி நல்ல பையனா"..அப்படினு..ஏன் ஆளு சொன்னஅதுக்கப்புறம் உன் இஷ்டம்டா.
" ..

"டேய்..அரை மணி நேரம் தானே பேசப்போற சரிடாப்போ.,ஆமாம் மீனா எப்படி இருப்பா.."..நான்.


இதுக்கு அப்புறம் ஒரு கோஷ்டி இருக்கு..வருவானுங்க கிளம்பி பாண்டிக்கு வந்து மூக்கு முட்ட குடிச்சிட்டு போறப்ப ஏன் பாக்கெட்ல ஒருமூநூறு ரூபா வச்சிட்டு..


"மச்சான் வரப்ப ரெண்டுபுல் புடிச்சிட்டு வந்துரு "


"ஏன்,நீங்க ஊருக்கு தானே போறீங்க நீங்க வாங்கிட்டு போகமாட்டிங்களோ.."..நான்.


"டேய்..இருந்தாலும் உனக்கு தானே செக் போஸ்ட் தாண்டி எப்படி எடுத்துட்டு வரர்தன்னு அந்த நேக்கு போக்கு தெரியும்.."


"டேய்..நான் என்ன கள்ளகடத்தல் பிசினஸ் பண்ணுரனா என்னா.."


"அதுக்கு இல்லை மச்சான் நீ தான் நம்ம செட்ல ரொம்ப தைரியசாலி,திறமையானவன்..எந்த பிரச்னை வந்தாலும் ஒத்த ஆளா நின்னு சமாளிப்ப அதான் சொல்றேன்.."


"..."..நான்.


இவ்வளவு ஏங்க இப்ப வேலை பாக்குற இடத்துல ஆபீஸ்பாய் ஆயிரம் பக்கத்துக்கு மேல மத்தவங்க சொல்ரங்கனு ஜெராக்ஸ் போடுவான்..இதே நான் ஒரு பத்து பக்கத்துக்கு போய் நின்ன கூட..


"பத்து பக்கம் தானே..நீயே போட்டுக்கோ வினோத்..இதை நான் வேற யாருக்கிட்ட சொல்லமுடியும் சொல்லு உன்கிட்ட தான் சொல்லமுடியும்..ஏன்னா எனக்கு தெரியும் நீ ரொம்ப நல்லவன்..அப்படியேஎனக்கு ஒரு பத்து பக்கம் போடணும் அதையும் போட்டு கொடேன்.."


இப்ப சொல்லுங்க இவங்களுக்கு எல்லாம் என்ன பார்த்த எப்படிங்க தெரியுது.

Saturday, July 11, 2009

கனா காணும் காலங்கள்

இந்த தொடர் பதிவிற்கு அழைத்த கலையரசனுக்கு நன்றிகள் பல..

பள்ளி நினைவுகள் பத்தி

சேரன் ஸ்டைல்ல சொல்றதுனா ..

வாழ்க்கையில பல கட்டங்களை ரொம்ப சாதரணமா கடந்து வந்த பிறகு ஒருஇடத்துல நின்னு திரும்பி பாக்குறப்ப சில விஷயங்களை ஏன்டா கடந்துவந்தோம்ன்னு இருக்கும், அந்த கட்டத்துலயே நம்ம வாழ்கை முழுவதும் இருந்துஇருக்குலம்னு தோணும்..
அப்படி ஒரு சந்தோசம் எங்க திரும்பினாலும் நம்ம எங்க ஓடி போய் ஒளிஞ்சாலும்நம்மள விடாமா நமக்கு தெரியமா நம்ம பின் தொடர்ந்து வந்து இருக்கும்..
பின்னாடி நம்ம மாட்டிக்கப்போற பெரும் சூறாவளி பத்தி தெரியாமலே அப்பபெய்த சாரல் மழையில் சந்தோஷமா அனுபவச்சி நனஞ்சி இருப்போம்..அப்படிஒரு பருவம் தான் அது..

கெளதம் மேனன் ஸ்டைல்ல சொல்றதுனா...

ம்ம்ம்..இன்னும் சில விஷயங்கள் நல்ல நியாபகத்துல இருக்கு..
I had some good friends,
enjoyed a lot, packed with fun.. With great passionate I have crossed that period.
என்னால சுலபமா மறக்க முடியாது actually those memories is a way of holding onto the things you love, the things you are, the things you never want to lose ..இன்னும்சொல்லிக்கிட்டே இருப்பேன்..எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமா wat a peaceful days I once enjoy'd! How sweet their memory still..

சசிகுமார் ஸ்டைல்ல சொல்றதுனா..

இப்ப வாழுற வாழ்கை எதோ ஒரு வித எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை,க்ரோதம்,வன்முறை இப்படி எதாவது ஒன்னு எதுக்காகவோ எதையோஎதிர்ப்பார்த்து நம்ம கையை பிடிச்சு அது கூடவே நம்மையும் இழுத்துக்கிட்டுபோகும்..ஆனா இப்படி எதுவே மனசுல இல்லமா சந்தோசம் மட்டுமே மனசுமுழுசா நிறைஞ்சு இருக்கும் பாரு அது தாண்ட மாப்பிள்ளை ஸ்கூல்லைப்..அடிச்சிப்போம், கடிச்சுப்போம் மறுப்படியும் புடிச்சிப்போம் அந்த நேர்மைதாண்ட நொண்ணைகளா எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும்..

இப்படியே சொல்லிகிட்டே போன எழுந்து ஓடிடுவிங்கனு தெரியும்..இப்பஎன்னோட அந்த பள்ளிக்கால நினைவுகள்:

அனுபவங்கள்:

எனக்கு நியாபகம் தெரிஞ்சு என்னோட பள்ளிக்கு போன நாட்கள் இப்படி தான்ஆரம்பிச்சிச்சு..நான் போகவே மாட்டேனு ஒரே அழுகாச்சி..எங்க அப்பா என்னைமிரட்டி கிரட்டி ஒரு வழியா அவரோட சைக்கிள்ல ஏத்தி உக்கார வச்சு கொஞ்சதூரம் போனதுமே ஒரே டைவ் அடிச்சு கிழே எகிறி விழுந்தேன்..அப்ப அடிச்சாருபாருங்க சும்மா ஊரே கூடி நின்னு பாக்குற மாதிரி துரத்தி துரத்தி அப்ப போகஆரம்பிச்சிது தாங்க அந்த பயணம்..

பரங்கிபேட்டை(கடலூர் மாவட்டம்) சேவாமந்திர் ஸ்கூல் தான் ஆறாப்புவரைக்கும் படிச்சேன்..
ஆரம்பத்துல வினோத்,ரஜனி அப்புறம் ஜாபர்,காமில்,நகுதா இப்படி நிறையாநண்பர்கள் வந்து சேர்ந்தங்க..குட்டையில மீன் பிடிக்கிறதுல இருந்து பனைமரத்துல கல் எரிஞ்சு பனம்ப்பழம் சாப்பிட ஆரம்பிச்சு மசூதியுல வெள்ளை குல்லாபோட்டுக்கிட்டு நோன்பு கஞ்சி குடிக்கிற வரைக்கும் அப்படியே போச்சு..
அப்புறம் கிளாஸ் லீடர் கல்பனா என் கையுல கட்டுன சாமி கயிறு பிரிஞ்சு திரிஞ்சுகறுத்து போற வரைக்கும் என் கையுல கட்டி இருந்தேன்..
நான் முதல்ல அடிச்ச நசுருதீன், என்னை முதல்ல அடிச்ச இம்தியாஸ் இப்படி சிலபேர் இன்னும் நியாபகத்தில் இருக்காங்க..

அப்புறம் காட்சிகள் மாறின..

எழாவதுல இருந்து
புதுவை திருவீகா பள்ளி ..படிப்பில் என்னையும் அறியாமல்ஈர்ப்பு..
அம்மாவையும் அப்பாவையும் பிரிந்து இருந்த தனிமை என்னை இன்னும்வேகமாக படிப்பில் தன்னை இழுத்து கொண்டது..அப்ப கிடைத்த நண்பர்கள் தான்இது வரை என் புதுவை நண்பர்கள் பழனி,விஜய்,ரகு இன்னும் நிறையா..பெரியவிஷயங்கள் சொல்ற மாதிரி எதுவும் இல்லை ஆண்கள் பள்ளி அதனால் வேறுவழி இல்லாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியநிலைமை..பத்தாவது வரைக்கும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பெயரோடும்புகழோடும்(நம்புங்க) படித்தேன்..

மறக்கவே முடியாத ஆசிரியர்கள் :

பரங்கிபேட்டை சேவாமந்திர்:

என் மேல ரொம்ப பாசமா இருந்த செந்தமிழ் செல்வி மிஸ் அவங்க அன்பு மறக்கமுடியாதது இப்ப எங்க இருக்காங்கனே தெரியுல..

இவ்வளவு அழகா கூட ஒரு மிஸ் இருப்பாங்களா என்று நினைத்த
மாலதி மிஸ்..அவங்க கடைசியா எங்க கிளாஸ்க்கு வந்தப்ப பக்கத்துல இருந்தபையன் சொல்லி தான் கவனிச்சேன் அவங்க அழுவதை..அன்றோடு போனவர்தான் இதுவரை அவர் அழுததற்கான காரணமும் தெரியவில்லை..எங்கேஇருக்கிறார் என்றும் தெரியவில்லை..

அப்புறம் மேரி மிஸ்..மார்கழி மாசத்துல நடுங்குற குளிர்ல காலையில அஞ்சுமணிக்கும் டியூஷன் வச்சப்பவும் நான் விறைப்பா சுவட்டர் மாட்டிகிட்டுபோனதுக்கு காரணம் உண்மையுல படிப்பு மேல இருந்த ஆர்வமா இல்லை மேரிமிஸ் வர சொல்லிடாங்க
அப்படிங்கிற ஒரே காரணமா என்று இன்று வரை தெரியவில்லை.

புதுவை திரு.வி .க :

இங்கு பல ஆசிரியர்கள் இருந்தாலும் நான் மிகவும் மதிக்கும் ஒரு ஆசிரியைஹேமலதா மேடம்.
மிகவும் நேர்மையானவர், கண்டிப்பானவர் , கடமை தவறாதவர்..
பல ஆசிரியர்களும் சுயநோக்குடன் மட்டுமே செயல்ப்படும் இக்காலத்தில்கொஞ்சம் கூட சுயநலம் இல்லாமல் எல்லா மாணவர்களும் நல்வழியில் நல்லமதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக தன்னுடுய பல மணிநேரங்களைமாணவர்களோடு மட்டுமே தியாகம் செய்தவர்..நான் பத்தாவது படிக்கும் பொழுதுபல ஆசிரியர்களும் டியூஷன் வைத்து வருமானம் பார்த்து கொண்டு இருந்தநேரத்தில் ஒரு சிறிய பலன் கூட எதிர்ப்பார்க்காமல் எங்கள் வகுப்பு மாணவர்கள்அனைவரையும் ஆங்கில மட்டும் கணித வகுப்புகள் சிறப்பு வகுப்புகள் எடுத்துநல்ல மதிப்பெண்களில் தேற செய்தவர்.
கிட்டதட்ட ஐம்பது வயது ஆகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல்கல்விக்க்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.

கலை அவர் கூட படித்த
தம்பியை பற்றி சொல்லியதால் நானும் கூட படித்த என் தங்கையை பற்றி சில வார்த்தைகள்..

ஆறாவது வரை ஒரே ஸ்கூல், ஒரே டியூஷன், ஒரே வேன், வேற வேற கிளாஸ்..
நான் கல்லை எடுத்துக்கொண்டு துரத்தி கொண்டுப்போனால் அது பதிலுக்குகடப்பாரையை எடுத்துக்கொண்டு துரத்தும்..அவ்வளவு பாசக்கார பசங்களாபள்ளிக்கு போய்க்கொண்டு வந்துக்கொண்டு இருந்தோம்..இப்ப நிலைமைஅப்படியே தலைக்கிழ் ஒரு பொறுப்பு உள்ள குடும்ப பெண்மணி ஆயிட்டாங்க..

தங்கை உடையான் தோல்வி அடையான் (இது நம்ம பழமொழிங்க)..

நான் கூப்பிடப்போகும் நண்பர்கள்..

நாகா
செந்தில்வேலன்
கார்த்திகேயன்
ஜப்பான் ஜோ
பித்தன்
கிஷோர்