Sunday, February 21, 2010

டீன்-ஏஜ்

வணக்கம்..முதலில் என்னை இந்த தொடர்ப்பதிவுக்கு அழைத்த சூர்யாவுக்கு கோடானுக்கோடி வணக்கங்கள்..சூரியன் இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது..அதுப்போல தான் இந்த 'ஆதவன்' இல்லாத பதிவுலகத்தை கற்பனைக்கூட செய்துப்பார்க்க இயலவில்லை..பதிவுலகத்தின் முதல் வெளிச்சம் நமது 'ஆதவன்'..சிலப்பதிகாரத்தில் கூட சூரியனை பற்றி 'ஏதோ' சொல்லியுள்ளார்கள்.அது என்னானு அடுத்தப்பதிவில் சொல்கிறேன்..

சூர்யாவின் மேல் இருக்கும் மரியாதையின், அன்பின்ப்பால் இந்த தொடர்பதிவை தொடர்கிறேன்..பட்..இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்தி கொள்கிறேன்..தொடர்ப்பதிவில் கலந்துக்கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயங்கள்..ஆனால் சிலப்பேர் கட்டாயப்படுத்தி எழுதச்சொல்கிறார்கள்..எழுதமுடியாமல் போனால் கொஞ்சநாள் கழித்து 'பின்னூட்டம்' மூலமாகவோ 'அல்லது' தொலைப்பேசி மூலமாகவோ மிரட்டுகிறார்கள். அதையே காரணம்க்காட்டி நமது 'பதிவுலகு' பற்றை 'கேள்விக்குறியாக்கி' வேடிக்கை பார்கின்றனர்..இதற்கு யாரவது 'பெரிய மனிதர்கள்' முடிவு கட்டினால் நன்றாககிருக்கும்..ப்ளீஸ்..we are tired.

Let us move to our topic..

ஒரு 15 வயசு இருக்கும்

"டேய் இது அவுட் இல்லடா..சொன்னா கேக்கமாட்டிங்கலே 96 நாட்அவுட் செஞ்சுரி அடிச்சப்பிறகு நானே பேட்டை வச்சிட்டு போயிறேன்டா..சின்னபசங்க கூட இதுக்குதான் விளையாடக்கூடாது..போடுற போடுற போடா.." ..நான்.

"இதான் லாஸ்ட் சான்ஸ் இதுக்கப்புறம் பேட்டை கொடுக்கல..நாளையிலருந்து தயவுசெஞ்சு எங்ககூட விளையாட வராத..போய் உன் வயசு பசங்களோட விளையாடுப்போ.."..என் தம்பி.

"டேய் உங்க அண்ணன் சரியா ஓசி காஃச்சி அடிக்கறான்டா..நாமலே பாக்ஸ் போட்டு விளையாடுறோம்..இதுலயும் ஆறு தடவை அவுட்டாகி செஞ்சுரி போடுறான்..அவனுக்கு கொஞ்சம்கூட வெட்கமே இருக்காதா.." என் தம்பியின் நண்பன்.

இதையெல்லாம் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் 'செஞ்சுரியை' நோக்கி வேகமாக பயணப்பட்டு கொண்டிருப்பேன்.

17 வயசுல

"டேய்..உன் கிளாஸ்ல இருக்குற ஃ பிகர்ங்க பேரெல்லாம் சொல்லு"..சீனியர்.

"அண்ணன் அது எப்படி அண்ணன் நான் போய்..எல்லாம் சிஸ்டர்ஸ் மாதிரின.."

''டேய் மச்சான்..ஃ பிகர்ங்க பேரை சொல்லுரவன கூட நம்பிடலாம்..இதமாதிரி பசங்க சரியான மொள்ளமாரியா இருப்பானுங்க இவன விடாத"..இன்னொரு சீனியர்.

"டேய் சொன்னா இந்த இடத்தை விட்டு போகலாம்..இல்லை சாயங்காலம் வரைக்கும் இங்க தான் நிக்கணும் என்ன சொல்லுற.."..சீனியர் .

"அது ஒரு ஆறு, ஏழு பேரு இருக்காங்க..'க..தா', 'ப்..யா' அப்புறம் 'ஜெ..ந்தி'..".

"இன்னமோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அக்கா தங்கச்சின்னு டயலாக் எல்லாம் விட்ட..இன்னிமே உன்னை இந்த ஏரியாலையே பார்க்கக்கூடாது ஓடிபோடா.." ..சீனியர்.

18 வயசு இருக்கும்னு நினைக்கிறேன் !!

'மச்சான்..அந்த அண்ணன் ரொம்ப வேண்டப்பட்டவர்டா..நான் போய் எப்படிடா அவர்கிட்டப்போய் கேட்ப்பேன்..'..குமார்.

'டேய்..நீ கேக்கிறியா இல்லை உன் பெயரை சொல்லி நான் போய் கேட்கவா'..நான்.

'டேய்..நல்லா யோசிச்சியா
'அந்த பொருளோட' விலை வேற எழுபது ருபாய்..'.குமார்.

'மச்சான்..உன் ஷேர் வேணாலும் நான் தரேன்..இந்த விஷயத்தில் நான் காம்பிரமைஸ் பண்ணிக்க தயாரில்லை..நான் இன்னிக்கு பார்த்தே தீரனும்..இந்த சந்தர்ப்பத்தை விட்ட வேற சந்தர்ப்பம் கிடைக்காது ..ரகு வீட்டுல எல்லோரும் நாளைக்கு வந்துடுவாங்க சொல்லிட்டேன்..இன்னிக்கே பார்த்தா தான் உண்டு.." ..நான்.

--------------------------------------------------------------------------------
13 to 19 'டீன்-ஏஜ்' அனுபவங்கள், நல்லவேளை அதுக்குமேல தான் பல அழிச்சாட்டியங்கள் நான் ஆரம்பிச்சது..அது வரைக்கும் 'எதையும்' வெளிப்படையா சொன்னதோ இல்லை செஞ்சதோ இல்லை..'டீன்'ல பெரும்பாலும் கழிந்தது பள்ளிக்கூட மற்றும் டிப்ளோமா அனுபவங்கள்,புதுவையில். அதன்பின் 'படித்தது' 'சுத்துனது' எல்லாம் வெளியூரில் தான்..

படிப்பு, கிரிக்கெட் மிஞ்சிப்போனா தியேட்டர், பீச் இப்படியே போனது 'டீன்' முழுவதும்..தைரியமா ஒரு பெண்ணை 'சைட்' கூட அடித்ததில்லை..அப்புறம் எங்கிருந்து பேசியிருப்பேன்..சின்ன சின்ன தப்புகள் பண்ணியிருந்தால் கூட எல்லாவற்றையும் மீறி ஒரு 'குழந்தைத்தனம்' எப்பொழுதும் ஒட்டிக்கொண்டு இருக்கும் அந்த வயதில் நம் அனைவருக்கும்.அந்த நினைவுகளை நினைக்கும்ப்பொழுது இப்பொழுதும் இனம்புரியாத சந்தோஷம் நம்மை சூழ்ந்துக்கொள்கிறது.

ஆனால் அதை அனுபவிக்கும் காலத்தில் 'ஜஸ்ட் லைக் தட்' அதை கடந்துவந்து விடுகிறோம் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே..என்ன பண்றது யாராச்சும் ஒரு டைம் மெஷின் செஞ்சு கொடுந்திங்கனா நல்லாயிருக்கும்.

மேலும் இந்த தொடர்ப்பதிவுக்கு கிஷோர் மற்றும் விஜய் இவர்கள் இருவரையும் அழைக்கிறேன்.


Wednesday, February 3, 2010

தண்டனை காலங்கள்

இந்த பெருமழை எதையும் கரைக்கும் வல்லமை பெற்றதாக இருப்பின் என்னுள் நான் கரைத்துவைத்து இருக்கும் பாவத்தை அடியோடு கரைத்துவிட நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.

வெகுநேரம் அடித்து சாய்க்கும் பேய் மழையில் நனைந்துக்கொண்டு இருந்தேன்..மழையோடு சேர்ந்துக்கொண்டு என்னை வாட்டி வதைக்கும் சிந்தனைகளும் சிதறிக்கொண்டு இருந்தது..எனையறியாமல் கடவுளை கூப்பிடுகிறேன்..செய்த பாவத்துக்கு மனமாற அவனிடம் மண்டியிட்டு கதறியழுகிறேன்..கொஞ்சம் ஆறுதல் கிடைப்பதைப்போல் இருந்தாலும் மறுப்படியும் பாவசிந்தனைகள் வலுப்பெறுகின்றன..

உண்மையில் கடவுள் இருந்திருந்தால் என்னை அந்த காரியத்தை செய்ய வைத்திருப்பானா, நான் செய்த தப்புக்காக இத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தப்பின்னும், 'இல்லை, நீ மனம்மாற அனுபவிக்க வேண்டிய தண்டனை இதுவல்ல..சிறையை விட்டு வெளியேப்போ இதை விட பெரிய தண்டனையை உலகம் உனக்கு கொடுக்கும்' என்று ஆண்டவன் முன்னாடியே தீர்மானித்து வைத்திருப்பான்போல்..இந்த இடத்தில தான் ஒருவனை இந்தளவு வதைக்கும் கடவுளின் இருப்பின்மேல் இன்னும் சந்தேகம் வலுக்கிறது..சிந்தனைகள் மறுப்படியும் பின்னோக்கி நகர்கின்றன..

வயலுக்கு வரப்பு வெட்டுவதில் ஆரம்பித்தது 'அவனுடுனான' என்னுடுய பிரச்னை..நாளொரு வண்ணமாக பலரூபத்தில் விஸ்வரூபம் எடுத்து என்னில் இருந்த வன்மத்தை இன்னும் ஆழமாக வேர்ப்பிடித்து வளர செய்திருந்தது. எல்லாத்துக்கும் மேலாக மோட்டார் ரூமிற்கு திருட்டு மின்சாரம் எடுத்த விஷயத்தில் கையும் களவுமாக பிடிபட்டப்பொழுது..அவன் தான் அதற்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றிய எண்ணங்கள்..மூளையின் ஒவ்வொரு செல்லிலும் அவன் மீதான குரோதத்தை படிய செய்திருந்தது..மேலும் கூட்டாளிகள் போதையின் உச்சத்தில் எரிந்துக்கொண்டிருந்த நெருப்பை இன்னும் ஊதி பெருதாக்கி இருந்தார்கள்..எப்பொழுது வயலுக்கு மறுப்படியும் போனேன் என்றுக்கூட நினைவில்லை..அனால் அவன் தலையை என் மம்பட்டி பிளந்துது மட்டும் நினைவிருக்கிறது..போலீஸ் பிடித்தது..கோர்ட்..ஆயுள்..சிறை..இதோ கொஞ்ச நாட்களுக்கு முன் விடுவித்து வெளியே வந்தும் விட்டேன்..

மரண தண்டனையே கொடுத்திருக்கலாம் இப்பொழுதுப்படும் என் வேதனையை விட என்று நினைக்க ஆரம்பித்து சில நாட்கள் முடிந்துவிட்டன..ஒரு விடுதலையான கைதியை சமூகம் பார்க்கும் பார்வையை சிறையிலிருக்கும் பொழுதே ஓரளவு யூகித்து வைத்திருந்தேன்..ஆனால் குடும்பத்திலிருந்தே முற்றிலுமாக நிரகரிக்கப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.பெற்றோர்கள் என்னைபெற்ற பாவத்தை என்றோ மரணத்தை தழுவி போக்கிகொண்டனர்.இருப்பவன் தம்பி மட்டுமே,அவன் மட்டும் என்ன விதிவிலக்கா, என் தம்பியின் சிறு வயது மகன் கூட என்னை 'கொலைக்காரனாக' தான் அறிந்து உள்ளான்..

நான் சமுகத்தின் பார்வையில் தண்டனையை அனுபவித்து வந்தப்பின் கூட குற்றவாளியாக தான் தெரிகிறேன் என்ற வலியை விட..'அவனி'ன் குடும்பத்தின் இன்றைய நிலைமை எனக்கும் ஏற்ப்படுத்தும் வலி தான் என்னை நிலைகுலைய செய்தது..

அன்று ஓரளவு நன்றாக இருந்த குடும்பம்..இன்று சிதைந்துப்போய் உள்ளது..அவனின் பெண் தையல் வேலைக்கு போவதும், ஊதாரியான பையன் ஊரை சுற்றி வருவதும் அவர்களின் வறுமையை பறைசாற்றியது..அவன் மனைவி வீட்டினுள் முடங்கி போயிருக்ககூடும்.

அன்றுகூட நான் தெருவில் நடந்துபோய் கொண்டு இருக்கையில் அவனிடம் ஒரு பெரியவர் 'உங்க குடும்பம் சீரழிஞ்சதுக்கு காரணமே இவன் தான்'..என்று என்னை கைகாட்டியது அவன் வன்மத்தை மேலும் வளர்த்திருக்கும்..அந்த வன்மமே என்னை அவனிடம் ஒரு உதவிக்கு கூட நெருங்க விடாது என்பதை நான் நன்கு அறிவேன்..இந்த சிந்தனை தான் நான் செய்தது தப்பு என்பதை தாண்டி ''மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்'' என்பதை மறுப்படியும் மறுப்படியும் எனக்கு உணர்த்திகொண்டு இருந்தது.

ஆறுதல் சொல்ல நண்பர்கள் கூட இல்லாத இந்த இரவில் மழையோடு சேர்ந்து நானும் அழுதுக்கொண்டு இருக்கிறேன்..நடுமண்டையில் விழுந்த அடி சிந்தனையை கலைத்து இருந்தது..திரும்பவதற்குள் மின்னல் கழுத்துக்குள் இறங்குவதைப்போல் சுளிரென்று ஒரு வெட்டு..ரத்தம் வழிந்தோடும் என் பார்வையில் மங்கலான உருவத்தில் 'அவனின்' மகன் இன்னும் ரெண்டு பேரோடு அவன் பகையை தீர்த்து கொண்டிருந்தான்..சாவை நோக்கி வெகு வேகமாக விரைந்துக்கொண்டு இருந்தேன்..'நாளை இதேப்போல் நீயும் குற்றத்தை உணரும் ஒரு தருணம் வந்தால்'..என்று நினைத்தபொழுது எனக்கு அவன் மேல் பரிதாபமே வந்தது..



இருந்தும் ஒன்றை உணர்ந்தேன்..எல்லா
மரணங்களும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன வாழ்க்கை என்னும் நரகத்தில் இருந்து விடுப்பட.எனக்கு பாவ விமோசனம் தந்த 'ரட்சகன்' அவனின் மகன்..கடவுள் இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.