Tuesday, May 25, 2010

Why Like this..

என் கடைசி பதிவு ஏன் அப்டேட் ஆகல ..

Sunday, May 23, 2010

பிடித்த 10 தமிழ் படங்கள்

ரொம்ப நாளைக்கு முன்னாடி செந்தில்வேலன் அவர்களால் பிடித்த படங்கள் என்ற தொடர்ப்பதிவிற்கு அழைக்கப்பட்டு இருந்தேன்..இடைவிடாத பணி காரணமாக அப்பொழுது எழுத முடியவில்லை..(நானே சொல்லிகிட்ட தானுண்டு). இப்ப வேற ஏது ஏதோ தொடர்ப்பதிவு எல்லாம் வந்தப்பிறகு இதை நான் எழுதுறேன்.. பிடித்த படங்கள் லிஸ்ட் ரொம்ப பெருசு..அதுவும் பத்து படங்களை மட்டும் வகைப்படுத்துவது ரொம்ப கஷ்டம்..நான் 2000க்கு பிறகு வந்த பத்து படங்களை மட்டும் எழுதுகிறேன்..அதுவும் நியாபகத்தில் உள்ள படங்கள்..


பிடித்த பத்து தமிழ் படங்கள்..


கன்னத்தில் முத்தமிட்டால் (2002)

எத்தனை
முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத படம். கீர்த்தனா, நந்திதாவின் அபார நடிப்பு, கிளைமக்ஸ் காட்சி, சிம்ரனின் மேக்-அப் போடாத முகம், மாதவனின் இயலபான நடிப்பு, ரவியின் ஒளிப்பதிவு, ரெஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள் இவ்வற்றுக்கு மேலாக மணிரத்தினத்தின் இயக்கம்.


எனக்கு படமே பிடிக்கும் இருந்தாலும் மாதவன் சிம்ரனின் காதல் காட்சிகள் கூடுதல் அழகு. மாதவனும் சிம்ரனும் அவரவர் வண்டியை ஒட்டி கொண்டே பேசி கொண்டு வருவார்கள் அந்த ஒரு காட்சி போதும் அது மணிரத்னம் படம் என்று சொல்வதற்கு.அப்புறம் மாதவனின் அக்கா முன்பே இருவரும் காதல் செய்யும் காட்சிகள். நான் படிக்கும் பொழுது காலேஜ் ஆடிடோரியத்தில் இந்த படத்தை ஒளிப்பரப்பினர்கள் இந்த காதல் காட்சிகளுக்கு பெண்கள் பக்கத்தில் இருந்து விசில் பறந்தது..அதவும் சரி பாதி தெலுங்கு பெண்கள்..


மௌனம் பேசியதே (2002)

அழகான படம். சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்ப்பாராத ட்விஸ்ட் நிறைந்த கிளைமக்ஸ் ,சூர்யாவின் நடிப்பு, யுவனின் இசை, அமீரின் இயக்கம் படத்தின் பெரும்பலம். எனக்கு தெரிந்து புதுவையில்(அப்பொழுது) அதிகநாட்கள் ஷூட்டிங் நடந்த படம். வழக்கம்போல் அமீரின் அடாவடி ஆளுமை கொண்ட 'ஹீரோ' படம்..அவரின் முதல் படமும் கூட. காதலை முற்றிலும் வெறுக்கும் கதாநாயகன் காதலில் விழுந்தால் என்ற சாதாரண கதை தான் என்றாலும் சொன்னவிதம் புதுமை+அழகு. இதேமாதிரி முற்றிலும் வன்முறை இல்லாத ஒருப்படம் அமீரிடம் இருந்து மீண்டும் வருமா..?



பிதாமகன் (2003)


சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து பாலா இயக்கிய திரைப்படம். பாலாவின் மூலமே திரையுலகில் மறுபிரவேசம் செய்த இருவரும் இணைந்து அதிரடிப்படுத்திய படம். முரட்டுதனமான நடிப்பில் விக்ரமும், நகைச்சுவையான நடிப்பில் சூர்யாவும் பின்னியிருப்பர்கள். பாலாவிடமும் இதேமாதிரி படங்கள் வருங்காலங்களில் எதிர்ப்பார்க்கிறேன்.


கில்லி (2004)


கில்லியை பற்றி நான் சொல்லி தான் தெரியவேண்டுமா என்ன..மறுநாள் செமஸ்டர் எக்ஸாம்..நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும்..இருந்தாலும் முதல்நாள் இரவு நண்பர்கள் வற்புறுத்த சென்ற படம்..விஜய் படத்துக்கு செல்லும் பொழுதுதெல்லாம் அப்பொழுது 'கடவுளே படம் நல்லாவே இருக்ககூடாது'ன்னு நினைத்துக்கொண்டு தான் செல்வோம்..ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பை பெரும்பாலான படங்கள் சொதப்பிவிடும். இதுவும் அதேபோலவே..இடைவேளையில் எங்கள் நண்பன் வழக்கம்போல் 'என்னாடா படம் இது சொதப்பலா இருக்கு' என்று எங்கள் வழக்கம்போல் சொல்ல அனைவரும் அவனை முறைத்தோம்.

மறுநாள் காலை பயணிக்கும் பொழுது என்னையும் அறியாமல் வாயில் 'அர்ச்சுனரு வில்லு' என்று பாட்டு வர ''ச்சே ..ச்சே..தூ'' என்று துப்பினேன்..இருந்தும் மறுபடியும் பத்து நிமிடம் கழித்து அதே பாடல்..அது தான் கில்லி. விஜயிடம் இருந்து இதேப்போல் மீண்டும் ஒருபடம் ச்சும்மா விர்ரென்று எதிர்ப்பார்க்கிறேன்.


காதல் (2004)

கொஞ்சம் Immature காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிவந்த பிறகு அவர்கள் சந்திக்கும் அப்பொழுதைய கஷ்டமான சூழ்நிலைகளை கண்முன்னே காட்சிகளாய் நகர்த்திய படம். எல்லா பாத்திர படைப்புகளுமே மிக கச்சிதமாக இருந்தது.ஆரம்பக்கட்ட மதுரை காட்சிகள் மிகசுவாரசியம்

( இப்பொழுது வரும் மதுரை படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த படம் தான்னு நினைக்கிறேன்)..கிளைமக்ஸ் மட்டும் கொஞ்சம் சொதபல்ஸ்..பாலாஜி சக்திவேல் என்ன தான் ஆனாரு கல்லூரிக்கு பிறகு..?



தவமாய் தவமிருந்து (2006)


தாயின் அன்பை மட்டும் பிரதானமாக காட்டும் இந்திய சினிமாவில் தந்தையின் அன்பை இயல்பான வலியோடு சொன்ன படம். ராஜ்கிரணுக்கு இந்த ஒருபடம் போதும் அவர் பெயர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும்..பெரிய படம் என்றாலும் சொன்னவிதம், சொல்லிய கதை பல தகப்பன்களின் வாழ்க்கை..நிறையா காட்சிகள் வாழ்வில் ஒவ்வொரு தகப்பன்களும் கடந்து வரும் நிகழ்வை சித்தரித்து இருந்தன..சேரன் இந்த படத்திற்கு பிறகு ரொம்ப தூரம் பாதை மாறி வந்துவிட்டார்..


புதுப்பேட்டை (2006)


இந்தபடத்தை எத்தனை முறை பாத்திருப்பேன் என்று தெரியவில்லை..ஆனால் முழுவதும் அல்ல எதாவது ஒரு இடத்தில ஆரம்பித்து எங்கயாவது நிறுத்துவேன். அப்படிப்பட்ட காட்சியமைப்புகள் கொண்ட படம். நண்பனுக்கே நம்பிக்கை துரோகம், அப்பாவையே நம்பவைத்து போட்டு தள்ளுவது, தொழில் கற்றுக்கொடுத்த குருவை போட்டுதள்ளி விட்டு அந்த இடத்தை பிடிப்பது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு..கதையின் பிரதான பாத்திரம் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற அமைப்பை அடியோடு மாற்றிய படம். டிபிக்கல் செல்வராகவன் படம். தனுஷின் நடிப்பில் தி பெஸ்ட்.


சென்னை – 28 (2007)


செம ஜாலியா யாருமே எதிர்ப்பார்க்காத விதத்தில் வந்தப்படம்..வெங்கட்பிரபுக்குள்ள இப்படி ஒரு இயக்குனர் இருக்காரா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தப்படம். சென்னை ஏரியா மட்டுமில்லை கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை வயசுப்பசங்களுக்கும் பொருந்தக்கூடிய கதையமைப்பு..இப்பொழுது போர் அடித்தால்கூட இந்தப்படத்தை போட்டு பார்ப்பேன்..எல்லா காட்சிகளுமே 'ஜாலி திருவிழாவாக' களைக்கட்டும்..சமிபத்தில் வந்த ஜாலியான துள்ளல் படத்தில் இதற்கே முதலிடம்..இதன்ப்பிறகு எதுவும் வந்த மாதிரி நியாபகம் இல்லை.


அஞ்சாதே (2008)


கும்பகோணத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தபொழுது முதன்முறையாக தனியாக சென்று பார்த்தபடம். மிஷ்கின் மேல் இருந்த ஏதோவொரு நம்பிக்கை காரணமாக சென்றேன்..ஒரு அக்ஷன் சினிமா இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று நினைக்கக்கூட இல்லை..படம் பார்த்துவந்து மறுநாள் கூட அதே எண்ணங்களோடு இருந்தேன்..அப்பொழுது வைத்து இருந்த கைப்பேசியின் மூலமாக இணையத்தின் வழியாக தமிழ் விமர்சனம் தேடிக்கண்டு பிடித்து படித்தேன்( அப்பொழுது அது ப்ளாக் என்று தெரியாது) ..கடைசிவரை ஏதோ ஓன்று நடக்கபோகிறது என்றவொரு இறுக்கம் படம் முழுவதுமே பரவி கிடக்கும்..அதுவும் நிறையா காட்சிகள் மிகப்புதுமையாக இருந்தன. மொத்தத்தில் ஒரு கிளாஸ் மூவி.


பசங்க (2009)


தமிழ் சினிமாவில் உண்மையில் பசங்களுக்காக, பசங்களை பற்றிய வந்தப்படம். மிக இயல்பாக எடுத்திருந்தார் டைரக்டர். ஏதாவதொரு காட்சி கண்டிப்பாக நாம் சிறுவர்களாக இருந்தப்பொழுது கடந்துவந்ததாக இருக்கும் . இன்னும் இதுப்போல் நிறையா படங்கள் வரவேண்டும்..அதுவும் அந்த சிறுவர் பட்டாளம் கலக்கி இருக்கும்..நடித்து இருப்பார்கள் என்றே சொல்லமுடியாது.."மழை இன்று வருமா வருமா'' என்ற பாடல் என்னோடைய All time favorite..

Please Do it again Mr.Pandiyaraj..



ரொம்ப நாளைக்கு முன்னாடி ஹாலி பாலாவின் ஏதோ ஒரு பதிவில் பிடித்த பத்து படங்களை எழுத சொல்லி கம்மென்டிருந்தேன்..இப்பொழுது அதே தொடர்ப்பதிவாக ..



தொடர்ந்து எழுத அவரையும் கிஷோரையும் அழைக்கிறேன்..