Tuesday, January 26, 2010

எங்கே செல்லும்... பாகம் - 5

தொடர் பதிவுகள் மாதிரி போரடிக்காமல், இதுவொரு தொடர் கதை. ஒவ்வொருஅத்தியாயத்தையும் ஒவ்வொருவர் எழுதுறாங்க. கதை எப்படி வேண்டுமானாலும், அந்த எபிஸோடை எழுதுபவரின் மனதைப் பொருத்து பயணிக்கலாம். ஸோ.. யாராலும் எதையும் கணிக்க முடியாது. இதற்கு முன், கிரைம் எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார்-பிகேபி-சுபா செய்த முயற்சி. இப்பொழுது பதிவுலகில்.

விசா-வின் ஆலோசனையில் முகிலன் ஆரம்பித்து வைத்த கதையை.. பலா-வும், பின் பிரபாகரும், ஹாலிவுட் பாலாவும் தொடர.நாலாவது பாகம் என் பொறுப்பில்...அந்த கதையோட விதி..இல்லை அடுத்து எழுத போறவங்களோட கஷ்டகாலம் இப்ப என் ''கையுல'' மாட்டிகிச்சு..
என்ன பண்ணுறது..'குரங்கு கையில் பூமாலைன்னு' நீங்க நினைத்தாலும் வேறவழி இல்லை ..

மொத்த கதையை படிக்க இந்த பக்கம் போங்க..உங்களுக்கு பிடித்த எபிஸோட் எழுதிய நண்பர்களுக்கு, அவர்கள் ப்லாகில் பின்னூட்டுங்கள்.
...................................................................

கைவிலங்கை பார்த்தவுடன் கன்னபின்னவென்று 'கத்தியவன்' சிறிது நேரத்தில் மயக்கமானான்.

"இது முடியும்னு நினைக்கிறிங்களா"..திவ்யா.

"பாப்போம்..ப்ரபோனோனல்750 xmg தான் கொடுத்து இருக்கேன்..அவனுக்கு முழுசா அவன் யாருன்னு தெரிய குறைஞ்சது ஒரு 36 மணி நேரமாச்சும்ஆகும்..ஆனா அதுக்குள்ள அவன் ஏற்கனவே கடந்து வந்த விஷயங்களை மறுப்படியும் பார்த்தானா அவனால சில விஷயங்களை நியாபகப்படுத்த முடியும்.."

"ஆனா அவன பார்கிறதுக்கு ரொம்ப பாவமா இருக்குப்பா..'இது' எப்ப தான்முடியும்"..திவ்யா.

"எனக்கும் தெரியாது..ஆனா 'அவங்க' எதிர்ப்பார்க்கிற விஷயம் கிடைக்கிற வரைக்கும் இவனை நிம்மதியா விடமாட்டாங்க..இதுக்கு அவன் போலீஸ் கஸ்டடில இருந்திருக்கலாம்..தப்பிச்சு வந்து இவங்ககிட்டேயே மாட்டிக்கிட்டான்.."
.........................................................................

"யேய்..இது சரியாப்ப்படும்னு நினைக்கிறியா..நம்ம குரூப்ல இல்லாத ஆளுங்களா 'இவன' எதுக்கு செலக்ட் பண்ண.."..ராஜேஷ்.

"இல்லை..இவன் தான் சரிப்பட்டு வருவான் ..எனக்கு தெரியும்..''டீல்" முடிஞ்சவுடனே பாரு உனக்கே தெரியும்..ஆமாம் தலையுல எதாச்சும் 'ஆப்ரேட்' பண்ண தழும்பு தெரியுதா..".. Mr.X

"இல்லை"..ராஜேஷ்..

"குட்..ஓகே..நான் சொல்றத கவனமா கேளு..அவன விட்டு ரொம்ப தூரம் போனா அவன் தலையுல இருக்குற 'சிப்'ல இருந்து வர சிக்னல் உன்னால ரிசிவ் பண்ணமுடியாது..ஸோ, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நீ இருக்கிற மாதிரி பார்த்துக்கோ..ஆனா தப்பிதவறி கூட அவன் பக்கத்தில் எந்த காரணத்தை கொண்டும் போகாத..அவன் 'அதை' எடுத்து முடிக்கிற வரைக்கும்..நீ அவன 'அங்க' விட்டுட்டு விலகிடு..நீ விலகின நேரத்தில் இருந்து அவனுக்கு சுயநினைவு வரஒரு பத்து மணி நேரமாச்சும் ஆகும்..ஸோ, நீ அவனை விட்டு விலகின நிமிடத்தில் இருந்து அவன ஷார்ப்பா வாட்ச் பண்ணு..அவனுக்கு 'சுய நினைவு' வந்துருச்சுன்னு அவன் நடவடிக்கையை வச்சு உனக்கு எப்ப சந்தேகம் வருதோஅப்ப இருந்து இன்னும் க்ளோசா வாட்ச் பண்ணு..அதை விட ரொம்ப முக்கியம் அதுவரைக்கும் நீ அவன் கண்ணுல படவே கூடாது.."..Mr.X

"அதுசரி நடுவுல 'இவன்' எதுவும் எங்கிட்ட கேக்கமாட்டான்ல யாருக்காச்சும் சந்தேகம் வரப்போகுது"..ராஜேஷ்.

"நீ போய் சேருற வரைக்கும் ஒரு வார்த்தை பேசமாட்டான்..நீ பண்ண வேண்டியது எல்லாம் அவன கைய பிடிச்சு கூப்பிட்டுப்போ அது போதும்''...Mr.X

"சரி நான் பார்த்துக்கிறேன் இதுக்கபுறம்.."..ராஜேஷ்.

" விசா,பாஸ்போர்ட் எல்லாம் சரியாய் இருக்குல..எல்லாத்தையும் செக் பண்ணிட்டியா.."...Mr.X

"எல்லாம் ஓகே..நான் உனக்கு 'கேப் டவுன்' போய் சேர்ந்தவுடனே கால்பண்ணுறேன்..இப்ப 'கட்' பண்ணுறேன்.."..ராஜேஷ்.

சுயநினைவற்ற நிலையில் அவனும், ராஜேஷும் ஏர்போர்ட்க்குள் நுழைந்தனர். எதிர்ப்பர்த்தப்படியே 'செக்கிங்கில்' எந்த கெடுப்பிடியும் இல்லாமல் விமானத்தை அடைந்து அமர்ந்தனர்..அவனும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பித்துப்பிடித்தவன் போல் ராஜேஷ் பின்னாடி கைபிடித்து வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை..

விமானம் சவுத் ஆப்ரிக்காவை நோக்கி பறக்க ஆரம்பித்தது..
.....................................................................
சுவாதி குழப்பத்தில் இருந்தாள்..அவள் மொபைல் அலறியது..
"ஹலோ..சுவாதி"

"சொல்லுங்க சுவாதி தான் பேசுறேன்"..

"என் பேரு ஆவுடையப்பன்..சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்..நாளைக்கு கமிஷனர்ஆபீஸ் வரை வந்து என்னை பார்க்க முடியுமா..உங்ககிட்ட சில கேள்விகள்இருக்கு..ஜஸ்ட் ஒரு இருபது நிமிஷம்"..

"...?"

(தொடரும்)

................................................................................
யாருக்கு முதலில் எழுத விருப்பமிருந்தாலும் இங்கே துண்டை போட்டு இடம்பிடிச்சிடுங்க. கதையை அடுத்த ஏரியாவுக்கு கொண்டு செல்வது உங்க பாடு. :-) ]

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப்பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப்பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும்யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின்அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்குமேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.
...................................................................................

அடுத்த பகுதி இங்கே எங்கே செல்லும் - பாகம் 6 ..எழுதியது கிஷோர்..

Saturday, January 16, 2010

கடந்து வந்த 'மனிதர்கள்'


நம்
கூடவே இருக்கும் மனிதர்களை விடவும் சில சமயம் வினாடிகளில் நம்மை கடக்கும் மனிதர்கள் கூட அவர்களின் செய்கைகளினால் நம் மனதில் அழமாக இடம்பிடித்து விடுவர்.

எல்லா இடத்திலும் நல்ல மனிதர்கள் நிறைந்து இருக்க தான் செய்கின்றனர் என்ன சிலப்பேர் அவர்களின் நல்ல செய்கைகளை வெளிப்படுத்தி கொள்வதில்லை இல்லை அதற்கான வாய்ப்புகள் அமையமால் போய் விடுகின்றது. வெளிப்படுத்துப்பவர்கள் காலங்களை தாண்டி நிற்கின்றனர்.

அப்படி நான் கடந்து வந்த சில நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளின் தாக்கத்தினால் என் மனதில் தங்கிவிட்ட 'சில பெயர் தெரியா' மனிதர்களை பற்றிய பதிவு தானிது.மூன்றே மூன்று சம்பவங்களை மட்டும் இங்கே ஆண்டுகளின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்..

1995


குடும்பத்தோடு உறவினர்கள் சிலரும் சேர்ந்து ஒரு நான்கு நாட்கள் சுற்றுலாவிற்கு சென்றிருந்த சமயம். வால்பாறை, டாப்-ஸ்லிப்பை பார்த்துவிட்டு பழனிக்கு சென்றுக்கொண்டு இருந்தோம்.

தளி என்ற ஊரின் அருகில் செல்கையில் சரியாக நாங்கள் சென்ற வேனின் மீது வந்து மோதியது ஒரு லோக்கல் பஸ். எங்கள் வேன் ஓட்டுனரின் சாதுர்யமான டிரைவிங்னால் பெரும் விபத்தை தவிர்த்து விட்டாலும். எங்கள் எல்லோருக்கும் சில காயங்களும் அடிகளும் ஏற்ப்பட்டு இருந்தது.சென்ற வண்டியும் மிகுந்த சேதம் அடைந்து இருந்தது.

அப்பொழுது
அந்த ஊர்காரர்கள் காட்டிய வேகமும் அன்பும் மறக்கமுடியாது என்றாலும் குறிப்பாக எங்கள் எல்லோரையும் அவர் வீட்டில் கொண்டுப்போய் தங்கவைத்து எங்களுக்கு வேண்டிய உதவிகளையும், சாப்பாடும் அளித்த ஒரு பெண்மணியும் அவரோடைய மகனையும் (அப்பொழுது சிறுவன்) மறக்கவே முடியாது. நாங்கள் யார் எந்த ஊர் என்று கூட அவர்களுக்கு தெரியாது ஆனால் அவர்கள் அந்த சமயத்தில் வெளிப்படுத்திய அன்பும் எங்களிடம் காட்டிய பரிவும் சத்தியமாக வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நாங்கள்
கிளம்பும்வரை அந்த அம்மாவும், சிறுவனும் உடனிருந்து எங்களை உடுமலைக்கு பஸ் ஏற்றிவிட்டு தாங்கள் வந்த மிதிவண்டியில் திரும்பி சென்றனர்.அப்பொழுது இருந்த தொலைதொடர்பு வசதியினாலும், அதன்பின் அந்த பக்கம் போவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு இல்லாமல் போனதாலும் அந்த நல்ல உள்ளங்களை மறுப்படியும் காணும் வாய்ப்பு எங்களுக்கு இல்லாமலே போனது.

2001


சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு கோர்ஸ் பண்ணி கொண்டிருந்த சமயம். பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நங்கநல்லூர் செல்வதற்கு முன்பு அருகிலிருந்த கடையில் 'டீ' சாப்பிட்டு கொண்டிருந்தேன். சற்றே வயதான ஆணும்,பெண்ணும்(தம்பதியர்!!) அங்கே நின்று கொண்டிருந்த அனைவரிடமும் "நாங்க வெளியூர் காசை தொலைத்துவிட்டோம் "எதாச்சும் சாப்பிடனும்" காசு இருந்தால் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு இருந்தனர்.

என்னையும் சேர்த்து அவர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று எண்ணியும் அங்கே 'பிச்சை' போடும் மனநிலையில் யாருமே இல்லாதிருந்த காரணத்தினால் யாரும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் அந்தப்பக்கம் ரயில்நிலையத்தில் இருந்து வந்த பெண்மணி அவர்களை பார்த்து 'காசு எல்லாம் கொடுக்கமாட்டேன்' வேண்டுமென்றால் நானே சாப்பாடு வாங்கி தருகிறேன் என்று பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி தந்தார்.

அதன்ப்பிறகு
அந்த வயதான ஆளை பார்த்து "இப்படி ஒரு வயதான பொம்பளையும் உடன் வைத்துகொண்டு போறவங்க வரவங்ககிட்ட காசு கேக்குறிங்க?!.நீங்க சொன்னத உண்மைன்னு நம்பிதான் உங்களுக்கு சாப்பாடு வாங்கிதந்து இருக்கேன்..இதுக்கபுறம் உங்க ரெண்டு பேரையும் நான் இப்படி பார்க்கக்கூடாது என்று சொன்னவர் அவர்கள் கையில் ஊருக்கு போவதற்கு கொஞ்சம் காசும் கொடுத்துவிட்டு சென்றார். சொல்வது கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் அவர் என் கண்ணில் இருந்து மறையும் வரை அவரை பார்த்துக்கொண்டு தான் இருந்தேன்.

2003


வட இந்தியா கல்லூரி சுற்றுலா சென்று இருந்த சமயம். சண்டிகரில் 'பிஞ்சூர்' பூங்காவில் எங்களின் சில மாணவர்களுக்கும் அங்கே பணிப்புரிந்து கொண்டு இருந்த சில அடாவடி பணியாளர்களுக்கும் இடையில் 'ஒரேயொரு மாங்காய்' தெரியாமல் பறித்ததற்காக செம ரகளை.


எங்களை அடிக்க வந்ததோடு இல்லாமல் கத்தியை கொண்டு மிரட்டும் அளவுக்கு போனது. அந்த சமயத்தில் அங்கே சுற்றிப்பார்க்க வந்த ஒரு குரூப் டெல்லி பசங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணி அவர்களோடு கிட்டத்தட்ட ரத்தம் வருமளவுக்கு சண்டை போட்டு..எங்களை பூங்காவின் வெளியே பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்து விட்டனர்..நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்தும் வராமல் "நாங்க லோக்கல் பசங்க தான் எங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..இனிமே நாங்க பாத்துக்கிறோம்..நீங்க கிளம்புங்க..உங்க சுற்றுலா இதனால் பாதிக்ககூடாது என்று சொல்லி எங்களை வழியனுப்பி வைத்தனர். அவர்களையும் மறக்க முடியாது.

Saturday, January 9, 2010

சாலை விதிகளை பின்ப்பற்றுவோம் (நான் சொன்னா மட்டும் கேக்கவா போறீங்க)..

2009, ஜனவரி 1 முதல் 7 வரை சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா தேசிய அளவில் ஜனவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கடந்த ஆண்டுகளைப் போல மத்திய அரசு அறிவித்துள்ளபடி 20-வது சாலை பாதுகாப்பு வாரம் 2010 ஜனவரி 1 முதல் 7 வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.

என்ன பண்றது..அந்த பாதுகாப்பு வாரமே முடிஞ்சுருச்சு..அதுக்காக விட்டுடவும் முடியாது..அட்வைஸ் தானே எப்ப கொடுத்த என்னா..
அப்பா, அம்மா, அண்ணன்,தம்பி, தங்கை,அக்கா எல்லாம் வீட்டுல அடிக்கடி சொல்லுவாங்க ''வேகமா போவதா வண்டில பொறுமையா போ'' அப்படின்னு..அவங்கெல்லாம் சொல்லுறப்பவே சிலபேர் கேக்கமாட்டிங்க..நான் சொன்னா மட்டும் கேக்கவா போறீங்க..;)

இருந்தாலும் தொடர்பதிவுக்கு வடலூரான் அவர்களால் அழைக்கப்பட்டேன் என்று தார்மிக காரணத்தினால் சில விஷயங்களை உங்கள் முன் எடுத்துரைப்பது என் கடமையாக்கப்பட்டுள்ளது இந்த சபையினிலே. நான் பேசமால் போனால் தொடர்ப்பதிவுக்கு இழைத்த துரோகம் ஆகிவிடும்..அதனால் சில கடுப்புகளை நீங்கள் சமாளித்துகொண்டாலும் பேசிவிட்டே செல்கிறேன் பெருமையோடு (உலகநாயகன் கவனிக்க )..

வண்டி ஒட்டி விபத்துக்கு உள்ளாகாரிவர்கள் பெரும்பாலும் வாலிபர்களா தான் இருப்பாங்க..கல்யாணம், குடும்பம்ன்னு வந்தப்பிறகு 'எதாச்சும் ஆயிடப்போதோ' அப்படிங்கிற பயமே ஒரு கட்டுப்பாட கொண்டு வந்தரும்..அதனால நான் அந்த பெரும்பாலான வாலிபர்களை குறி வைச்சே சில அட்வைஸ்களை வாரி வழங்குகிறேன்..புடிச்சுக்குங்கோ..

1. வீட்டுல, ரோட்ல, கோவில்ல, பெட்ரூம்ல ஏன் பாத்ரூம்ல கூட அந்த 'இழவெடுத்த' மொபைலை காதுல வச்சிக்கிட்டு தான் இருக்கீங்க..ஏன் வண்டில போறப்ப கூடவா பேசணும்..தயவுசெஞ்சு ஒரு ஓரமா வண்டிய நிறுத்தி பேசுங்க இல்லை மொபைலை எடுக்காதிங்க. எதுக்கு சொல்லுறேனா எதாச்சும் ஏடாகூடமா ஆச்சுனா நாளைக்கு பேசுறதுக்கு மொபைல் இருக்கும் கேக்குறதுக்கு காது தான் இருக்காது.

2.வண்டினா அது ரெண்டு "வீல்"ல ஓடுனா தான்ப்பா பார்கிறதுக்கு அழகா இருக்கும்..நீ பாட்டும் 'ஃபிகர்' பாக்குதுன்னு சொல்லி அது முன்னாடி ஒத்தை வீலை தூக்கிகாட்டி "வீலிங்" பண்ணுறனு வை..அடிப்பட்டு வண்டி உன்மேல விழுந்து இருக்கிறதா ஊரே வேடிக்கை பார்க்கும்..அப்பயும் அந்த 'ஃபிகர்' அங்கேயே நின்னு வேடிக்கை தான் பார்த்துக்கிட்டு இருக்கும் அதையும் நல்லா புரிஞ்சிக்கோ.

3.சிக்னல்ல சிகப்பு போட்ட நிக்கணும், மஞ்ச கலர் போட்ட தயாராகனும், பச்சை போட்ட போய்க்கிட்டே இருக்கணும். ஆனா நீங்க எப்ப கிளம்புவிங்க, எப்ப நிப்பிங்க எல்லாமே ஒரே கன்ப்யுஷன்..சரி நீங்க தான் அப்படி இருக்கிங்கனு பார்த்தா பெருசங்களும் அதான் பண்ணுதுங்க..தயவுசெஞ்சு போலீஸ் நிக்குதோ இல்லையோ சிக்னல்க்கு ஒரு மரியாதையை கொடுங்கப்பா..

4.எங்கயாச்சும் திரும்ப போறிங்களா இன்டிகேட்டர் போடுங்க அட்லீஸ்ட் கைய காட்டுங்க..இது எதுவுமே இல்லமா 'டக்குனு' திரும்பி எங்களை டரியல் ஆக்குரிங்க..யாருமே இல்லாத டீக்கடயுல யாருக்குடா 'டீ' ஆத்துற அப்படிங்கிற மாதிரி சிலப்பேர் யாருமே இல்லாத ரோட்ல கூட இன்டிகேட்டர் போடுவாங்க அவங்களை பார்த்து கத்துகங்கயா..

5.டபுள்ஸ் போறீங்க சரி..அது ஏன் "த்ரிப்ல்ஸ்" போறீங்க..மூணுபேரும் 'ஹாஸ்பிடல்ல' கூட ஒருத்தர்க்கு ஒருத்தர் துணையா இருக்கருத்துக்கா..முடிந்தவரை அதை தவிர்க்க பாருங்கள் சகோதரர்களே..

6. அப்புறம் முக்கியமா 'ஹெல்மெட்'ன்னு ஒன்னு எல்லோரும் வச்சி இருக்கீங்க அது முன்னாடி பெட்ரோல் tank மேல வைக்கிறதுக்கோ இல்லை பின்னாடி உக்கார்ந்து இருக்கிற 'ஃபிகர்' மூஞ்சை மறைக்கிறத்துக்கோ இல்லை..உங்க 'மண்டையில்' போடுறதுக்கு தான்..அட்லீஸ்ட் மண்டயுல அதுவாச்சும் இருக்கட்டும்.

7. ரொம்ப முக்கியமா ..குடிச்சிட்டு வண்டிய ஓட்டடதிங்க..எனக்கு 'கன்னாபின்னா'ன்னு குடிச்சிட்டு வண்டிய தாறுமாறா ஒட்டுரவங்களை பார்த்தாலே கோபம் கோபமா வரும்..முடியுல..இல்லை குடிச்சிட்டு போலீஸ்கிட்ட மாட்டி "கோர்ட்ல" போய் பைன் தான் காட்டுவனு அடம்ப்பிடிசிங்கனா போய் கட்டுங்க போங்க.
........................................................................................................................................................................................................

இன்னும் ரெண்டே ரெண்டு சொல்லிக்கிறேன் ப்ளீஸ் (கொஞ்சம் சீரியஸா ) :

1. பெரும்பாலான விபத்துக்கள் நம் நாட்டில் 'ஓவர்டேக்' பண்ணுவதால் தான் நிகழ்கிறது என்பது என் கருத்து..அதனால் 'ஓவர்டேக்' பண்ணுரப்ப கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..வளைவுகளிலும், எதிர்ல வர வண்டி மேல கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் 'ஓவர் டேக்' பண்ணவே வேண்டாம்.

2. குழந்தைகளை, சின்ன பசங்களை வெளியே அழைத்து செல்லும்ப்பொழுது அவங்களை உங்களுக்கு 'உள்வாக்கா' கைப்பிடித்து அழைத்து செல்லவும்.. சாலை இருக்கிற பக்கம் அவங்களை நடக்க வைக்கதிங்க.

Sunday, January 3, 2010

திங்கள் இனிதே - 5

இன்னும் அப்படியே தான் இருக்கின்றேன்..பெரும்பாலும் செய்யும் சின்ன சின்ன தவறுகளை மறைக்கிறேன், தவறை நியாயப்படுத்த மேலும் வாதிடுகிறேன், மேலும் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள எப்பொழுதும்போல் மனம் மறுக்கிறது. அன்று எதிர்ப்பாரமால் என்னுடுய மேலாளார் காலையில் வந்தவுடனே என்னை அழைத்து ஏதோ கேட்க..நானும் எப்பொழுதும்போல் எதோ ஒரு காரணம் சொல்ல, வழக்கம்போல் ஆரம்பித்தது 'பஜனை'..வருடத்தின் முதல் நாள் அலுவலகத்தில் இனிதே தொடங்கியது. இப்ப தான் 2000 வருடம் ஆரம்பித்த மாதிரி இருக்கு அதுக்குள்ள பத்து வருஷம் ஆகிடுச்சு ..ஆனா பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே மனநிலை..வயசாகுது, பொறுப்பு வரனும் இன்னும் இதேப்போல் நிறைய வருஷங்கள் இருந்தாலும்..ம்ம்ஹும்..வாய்பே இல்லை அப்படியே தான் போகப்போகிறது இந்த வருடமும்.. பார்ப்போம்..!!
...................................................................................................................................

Zee Tamilலில் தமிழர் பார்வையில் இரண்டு வாரமாக 'ராஜீவ் கொலை வழக்கு' என்ற புத்தகத்தின் ஆசிரியர் முன்னாள் சிபிஐ அதிகாரி திரு.ரஹோத்தமன் அவர்களின் பேட்டி ஒளிப்பரப்பானது. அவரோடைய பேட்டி சுவாரசியம் என்றாலும் ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலை விஷயத்தில் நம் நாட்டின் உளவு அமைப்பு வேண்டுமென்றே மிகப்பெரிய கோட்டை விட்டு இருக்கிறதோ என்கின்ற ரீதியில் இருந்தன.அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளை நேர்மையாக இயங்கவிடவில்லை என்றும்,வேண்டுமென்றே அன்று பல சாட்சிகள் மறைக்கபட்டதாகவும், பலப்பேரை தப்பிக்க விட்டதாகவும் சொன்னார்.ஆனால் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார் என்றே சொல்லவேண்டும். அவர் சொன்ன இன்னொரு விஷயம்.."ஆஷியாவின் மிகப்பெரிய நாடு என்று சொல்லிகொள்கின்றோம்..ஆனால் உளவுத்துறையால் கூட நேர்மையாக முழுவீச்சில் இயங்க முடியவில்லை அதுவும் இறந்தது முன்னாள் பிரதமர்..இன்றளவும் பூசி மொழுகும் வேலையே தான் செய்துக்கொண்டு இருக்கிறது உளவுத்துறை"..என்று முடித்தார்.
..............................................................................................................................................................................................

அரைக்குறையாக வெந்த அரிசியை சாப்பிடவது உடம்புக்கு ஒரு விதத்தில் நல்லது தானாம்..அது ஒரு வகையான ருசியை தரும் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து அரிசியை முழுசாக வேக வைத்து சாப்பிடுபவர்கள் இதைப்போல் ஒரு முறை சாப்பிட்டு பார்க்கலாம். கம்போடியா நாட்டில் கூட இதேப்போல் உணவுப்பழக்க வழக்கம் நடைமுறையில் இருப்பதாக தெரிந்துக்கொண்டேன்( போன வாரம் அரைகுறையாக வெந்த சாதத்தை வேற வழியே இல்லாமல் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டப்பின் நெட்டில் தேடி கண்டுப்பிடித்து படித்தது).
...........................................................................................................................................................................................
பெரும்பாலனவர்கள் ஏற்கனவே 2009ல் வெளிவந்த படங்களை பற்றி எழுதி விட்டதால்..ச்சும்மா ஒரு கணக்கு எடுத்தேன் யார் யாருக்கு எந்த படம் பிடித்தது என்று போன வருடம் வெளிவந்த படங்களில் பதில்கள் இதோ :

கிஷோர் : ஈரம்
கலையரசன் : வெண்ணிலா கபடிக்குழு
சென்ஷி & நான் ஆதவன் : பசங்க
கார்த்திகேயன் (அறிவுத்தேடலும்) : பேராண்மை.

எனக்கும் இந்த படங்கள் எல்லாம் பிடித்து இருந்தது..அதுவும் 'பசங்க' தான் மிகவும் பிடித்து இருந்தது. ஏன்டா இது ஒரு கணக்குனு எடுத்துக்கிட்டு உக்கார்ந்து இருந்தியே வேற வேலைவெட்டி இல்லையா என்று கேட்க நினைப்பவர்களுக்கு "சாரி..ராங் நம்பர்"..:)
...............................................................................................................................................................................

போன வாரம் எதோச்சையாக பேப்பரில் எதோ தமிழில் எழுதி பார்த்தேன்..எதோ வித்தியாசமாக படவே மறுப்படியும் எழுதினேன் அதே வார்த்தைகளை அப்பொழுது தான் கவனித்தேன் எப்படி எழுதி இருக்கிறேன் என்று..veetil anaivarum nalamaa என்பதை ஆங்கிலத்திலேயே எழுதி உள்ளேன் எல்லாம் 'கூகிள் இன்டிக்'னால் ஏற்ப்பட்ட பாதிப்பு.
...................................................................................................................................................................................

டிஸ்கி: திங்கள் இனிதே சீசன்-2 என்று தான் பெயர் வைக்கலாம் என்று பார்த்தேன்..ஆமாம் முன்னாடி சீசன்ல அப்படியே எழுதி கிழிச்சிட்ட பாரு என்று சொல்லுவிர்கள் என்று தெரியும்..அதனால் அப்படியே கன்டினியு பண்ணுறேன்..